திங்கள், 7 மே, 2018

காதல் கனவு 422

 நீ  சொன்ன  வார்த்தை   என்னடி  பெண்ணே --உன்னை
நிழலாய்  தினமும் தொடர்வேன்  கண்ணே
தேன்  உண்ணும்   வண்டாக  ஆனேன் -என்னுள்
திகட்டாத  பேரின்பம்   பாய்ந்திடக்  கண்டேன்

ஊர்விட்டு  ஊரெங்கும்  நீயும்  போனாய் --எனது
உயிரான  நீ போனால்  நானெங்கே  போவேன்
நல்ல பேர்  கெட்டுப்   போனாலும்  போகும் --உலக
பேரழகி  நீயின்றி   நான்  வாழ்தல்  ஏது

உன் கண்களோ  பாய்கின்ற  அம்பு --உனது
காதலில்  வீழ்ந்தேனே  நீயென்னை  நம்பு
இன்பமாய்  இருக்கத்   துணை  வேண்டும் --எனது
இதயத்தில்  குடி வைத்து  எப்போதும்  நினைப்பேன்

கலைகின்ற   கனவல்ல  நம்  காதல் --அது
காலத்தில்   அழியாத  அமர  காவியம்  அன்றோ
விலை சொல்ல  முடியாத  பொருளாவாய்  நீயே --இன்றே
விரைந்துமே  எனைக் காண  வந்திடுக  சகியே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக