நீ சொன்ன வார்த்தை என்னடி பெண்ணே --உன்னை
நிழலாய் தினமும் தொடர்வேன் கண்ணே
தேன் உண்ணும் வண்டாக ஆனேன் -என்னுள்
திகட்டாத பேரின்பம் பாய்ந்திடக் கண்டேன்
ஊர்விட்டு ஊரெங்கும் நீயும் போனாய் --எனது
உயிரான நீ போனால் நானெங்கே போவேன்
நல்ல பேர் கெட்டுப் போனாலும் போகும் --உலக
பேரழகி நீயின்றி நான் வாழ்தல் ஏது
உன் கண்களோ பாய்கின்ற அம்பு --உனது
காதலில் வீழ்ந்தேனே நீயென்னை நம்பு
இன்பமாய் இருக்கத் துணை வேண்டும் --எனது
இதயத்தில் குடி வைத்து எப்போதும் நினைப்பேன்
கலைகின்ற கனவல்ல நம் காதல் --அது
காலத்தில் அழியாத அமர காவியம் அன்றோ
விலை சொல்ல முடியாத பொருளாவாய் நீயே --இன்றே
விரைந்துமே எனைக் காண வந்திடுக சகியே
நிழலாய் தினமும் தொடர்வேன் கண்ணே
தேன் உண்ணும் வண்டாக ஆனேன் -என்னுள்
திகட்டாத பேரின்பம் பாய்ந்திடக் கண்டேன்
ஊர்விட்டு ஊரெங்கும் நீயும் போனாய் --எனது
உயிரான நீ போனால் நானெங்கே போவேன்
நல்ல பேர் கெட்டுப் போனாலும் போகும் --உலக
பேரழகி நீயின்றி நான் வாழ்தல் ஏது
உன் கண்களோ பாய்கின்ற அம்பு --உனது
காதலில் வீழ்ந்தேனே நீயென்னை நம்பு
இன்பமாய் இருக்கத் துணை வேண்டும் --எனது
இதயத்தில் குடி வைத்து எப்போதும் நினைப்பேன்
கலைகின்ற கனவல்ல நம் காதல் --அது
காலத்தில் அழியாத அமர காவியம் அன்றோ
விலை சொல்ல முடியாத பொருளாவாய் நீயே --இன்றே
விரைந்துமே எனைக் காண வந்திடுக சகியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக