கடலில் ஆடிடும் கப்பலைப் போல --என்
காதலி நீயெனை ஆடிட வைத்தாய்
உடல் மட்டும் என்னிடம் இருக்க --நீயென்
உயிரை எதற்கு எடுத்துச் சென்றாய்
நீயும் நானும் நிலைப் போமென்றே -தினம்
மனதினில் நினைத்து வாழ்ந்தேன்
காயும் நிலவும் வீணாய்ப் போச்சே --எனது
கண்களில் கண்ணீரும் வழிந்திடலாச்சே
எதனை நினைத்தடி என்மேல் கோபம் --பொங்கும்
இதய நிலவே நானும் தான் பாவம்
உதவி செய்திட உன்மனம் தொல்லையோ --நான்
உயர்ந்திட ஒருவழி எனக்கு இல்லையோ
கூட்டை மறந்த பறவை யானேன் --உன்
கொள்ளை அழகினில் மயக்க மானேன்
வேட்டை என்னையே ஆடலாமோ --இந்த
வேதனை நானும் கொண்டி டலாமோ
வாடிக் கிடக்கும் பயிர்கள் கூட --அந்த
வானத்து மழையால் வாழ்வு பெறுமே
தேடி அலைந்து திரியும் எனக்கு --இந்த
தேவியின் அருளும் கிடைத்திட வில்லையே
இரவும் பகலும் பிரிந்திட மாட்டேன் --உன்னை
இன்பமாக வாழ்ந்திட வைப்பேன்
உறவின் தொடக்கம் இந்த மாலை --நம்மை
உலகம் அறிந்திடும் நல்ல நாளை
காதலி நீயெனை ஆடிட வைத்தாய்
உடல் மட்டும் என்னிடம் இருக்க --நீயென்
உயிரை எதற்கு எடுத்துச் சென்றாய்
நீயும் நானும் நிலைப் போமென்றே -தினம்
மனதினில் நினைத்து வாழ்ந்தேன்
காயும் நிலவும் வீணாய்ப் போச்சே --எனது
கண்களில் கண்ணீரும் வழிந்திடலாச்சே
எதனை நினைத்தடி என்மேல் கோபம் --பொங்கும்
இதய நிலவே நானும் தான் பாவம்
உதவி செய்திட உன்மனம் தொல்லையோ --நான்
உயர்ந்திட ஒருவழி எனக்கு இல்லையோ
கூட்டை மறந்த பறவை யானேன் --உன்
கொள்ளை அழகினில் மயக்க மானேன்
வேட்டை என்னையே ஆடலாமோ --இந்த
வேதனை நானும் கொண்டி டலாமோ
வாடிக் கிடக்கும் பயிர்கள் கூட --அந்த
வானத்து மழையால் வாழ்வு பெறுமே
தேடி அலைந்து திரியும் எனக்கு --இந்த
தேவியின் அருளும் கிடைத்திட வில்லையே
இரவும் பகலும் பிரிந்திட மாட்டேன் --உன்னை
இன்பமாக வாழ்ந்திட வைப்பேன்
உறவின் தொடக்கம் இந்த மாலை --நம்மை
உலகம் அறிந்திடும் நல்ல நாளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக