அடிவெள்ளியில் தொழுவார் ஆயிரம் கோடி --எங்கள்
அகிலாண்டேஸ்வரி அன்னையே அழகே வருவாய்
நாடி வருபவருக்கு நல்லருள் பொழிபவளே -நாங்கள்
உன்னாலே நன்மைகள் பெற வேண்டுமம்மா (அகிலாண்டேஸ்வரி )
மா விளக்கேற் றியல்லோ மங்கையர்கள் பாடுவார் --உனது
மகிமை தனைச் சொல்லி வந்துள்ள மக்களும் ஆடுவார்
கோவிலைச் சுற்றியே குலவை இடுவார்கள் --நீயும்
கோலவிழி திறந்தால் குளிர்ந்திடும் பூமியன்றோ (அகிலாண்டேஸ்வரி )
உச்சிப் பகலில் இங்கே உமாபதி பூசை --எங்கள்
உமையே உன்னாலே உயர்ந்திடவே ஆசை
கச்சை யணிந்திட்ட கற்பகமே தாயே --உந்தன்
காலடி தொழுதேன் காத்தருள் செய்திடம்மா (அகிலாண்டேஸ்வரி)
மஞ்சள் குங்குமத்தின் மகத்துவம் நீயல்லவா --அந்த
மலையரசன் பெற்றெடுத்த மாமணி திரு விளக்கே
நெஞ்சமதில் நினைத்தே நின்னைப் பணிகின்றேன் --நீயும்
நேரினில் வந்தே நிம்மதி யருள்வாயே (அகிலாண்டேஸ்வரி )
மங்கலம் பெருகிடவே நம்மனைகளில் வருவாள் --அந்த
மகாதேவன் மனதில் உறையும் மாதரசித் தாயே
எங்கிலும் வளங்கள் பொங்கிட வேண்டுமம்மா --எங்கள்
இறைவியே ஈஸ்வரியே இவண் நீ வருவாயம்மா (அகிலாண்டேஸ்வரி )
அகிலாண்டேஸ்வரி அன்னையே அழகே வருவாய்
நாடி வருபவருக்கு நல்லருள் பொழிபவளே -நாங்கள்
உன்னாலே நன்மைகள் பெற வேண்டுமம்மா (அகிலாண்டேஸ்வரி )
மா விளக்கேற் றியல்லோ மங்கையர்கள் பாடுவார் --உனது
மகிமை தனைச் சொல்லி வந்துள்ள மக்களும் ஆடுவார்
கோவிலைச் சுற்றியே குலவை இடுவார்கள் --நீயும்
கோலவிழி திறந்தால் குளிர்ந்திடும் பூமியன்றோ (அகிலாண்டேஸ்வரி )
உச்சிப் பகலில் இங்கே உமாபதி பூசை --எங்கள்
உமையே உன்னாலே உயர்ந்திடவே ஆசை
கச்சை யணிந்திட்ட கற்பகமே தாயே --உந்தன்
காலடி தொழுதேன் காத்தருள் செய்திடம்மா (அகிலாண்டேஸ்வரி)
மஞ்சள் குங்குமத்தின் மகத்துவம் நீயல்லவா --அந்த
மலையரசன் பெற்றெடுத்த மாமணி திரு விளக்கே
நெஞ்சமதில் நினைத்தே நின்னைப் பணிகின்றேன் --நீயும்
நேரினில் வந்தே நிம்மதி யருள்வாயே (அகிலாண்டேஸ்வரி )
மங்கலம் பெருகிடவே நம்மனைகளில் வருவாள் --அந்த
மகாதேவன் மனதில் உறையும் மாதரசித் தாயே
எங்கிலும் வளங்கள் பொங்கிட வேண்டுமம்மா --எங்கள்
இறைவியே ஈஸ்வரியே இவண் நீ வருவாயம்மா (அகிலாண்டேஸ்வரி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக