பல்லவி
கருணாகரா இறைவா கயிலை மலை வாசா --நீ
கனிந்தருள் புரிகுவாய் காப்பதுன் குணமே (கருணா )
அனுபல்லவி
சிறுவன் நான் செய்த சிறு பிழையெல்லாம் --இனி
பெரு மனத்துடனே பொறுத்தருள் செய்குவாய் (கருணா )
சரணங்கள்
அடியவர் தொழுதிடும் அன்பெனும் நேசா --உன்
அன்பினைப் போற்றுதல் ஆனந்த விசுவாசமே
முடிதனில் கங்கை மோட்சமருள் செங்கை --என்றும்
முழுநிலவாய்த் திகழும் எங்கள் மூர்த்தமும் நீயே (கருணா )
கையினில் சூலம் உனது கண்களில் பாசம் --உன்
மெய்யடி தொழுதால் மேம்படும் தேசம்
பெய்திடும் மழையின் பிறப்பிடம் உன் சடையே --இந்த
மேதினி செழித்திட மண்ணில் வான் மழை பொழிவாய் (கருணா )
கருணாநிதியே எங்கள் கண்கண்ட தெய்வமே --உனது
கழலடி தொழுதே வந்த கவலையை மறப்போம்
அருணோதயம் போல் ஆகிடும் எம் வாழ்வு --ஐயன்
நினைத்தால் இங்கு அகலுமே தாழ்வு (கருணா )
மலையினில் வாசம் மக்களின் நேசம் --கடும்
புலியின் தோலினை புனிதமாய் அணிந்தாய்
நிலைத்திடும் செல்வம் எமக்கு நீயே அன்றோ --மனதில்
நிம்மதி என்பதும் நினைத் தொழல் என்றும் (கருணா )
கருணாகரா இறைவா கயிலை மலை வாசா --நீ
கனிந்தருள் புரிகுவாய் காப்பதுன் குணமே (கருணா )
அனுபல்லவி
சிறுவன் நான் செய்த சிறு பிழையெல்லாம் --இனி
பெரு மனத்துடனே பொறுத்தருள் செய்குவாய் (கருணா )
சரணங்கள்
அடியவர் தொழுதிடும் அன்பெனும் நேசா --உன்
அன்பினைப் போற்றுதல் ஆனந்த விசுவாசமே
முடிதனில் கங்கை மோட்சமருள் செங்கை --என்றும்
முழுநிலவாய்த் திகழும் எங்கள் மூர்த்தமும் நீயே (கருணா )
கையினில் சூலம் உனது கண்களில் பாசம் --உன்
மெய்யடி தொழுதால் மேம்படும் தேசம்
பெய்திடும் மழையின் பிறப்பிடம் உன் சடையே --இந்த
மேதினி செழித்திட மண்ணில் வான் மழை பொழிவாய் (கருணா )
கருணாநிதியே எங்கள் கண்கண்ட தெய்வமே --உனது
கழலடி தொழுதே வந்த கவலையை மறப்போம்
அருணோதயம் போல் ஆகிடும் எம் வாழ்வு --ஐயன்
நினைத்தால் இங்கு அகலுமே தாழ்வு (கருணா )
மலையினில் வாசம் மக்களின் நேசம் --கடும்
புலியின் தோலினை புனிதமாய் அணிந்தாய்
நிலைத்திடும் செல்வம் எமக்கு நீயே அன்றோ --மனதில்
நிம்மதி என்பதும் நினைத் தொழல் என்றும் (கருணா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக