பல்லவி
அழகாய் தெரிவது நம் அழகன் முகமே --உலகில்
அருளை அள்ளியே தருவது அவனின் குணமே (அழகாய் )
(அனுபல்லவி )
குளிர்ந்த நிலவாய் குகனே தெரிவான் --நம்
குறையைச் சொன்னால் உடனே களை வான் (அழகாய் )
சரணங்கள்
எதிர்ப்போர் திருந்தவே என்றும் நினைப்பான் --அவன்
இல்லார் தமக்கே இன்னருள் சுரப்பான்
கதிராய் வந்தே கருணை புரிவான் --இங்கு
கதிர் வேலவனாய் நமக்கு நல்ல காட்சி கொடுப்பான் (அழகாய் )
அருகினில் வந்தால் நம் அகமே உருகும் --நம்
ஐயனை நினைத்தால் அனைத்துமே கிடைக்கும்
உருகும் மனங்களில் உள்ளவன் முருகன் --இதனை
உணர்வாய் தினமே உயர்வாய் மறு கணமே (அழகாய் )
தமிழினைக் காக்கவே தரணியில் பிறந்தான் --நாம்
தாவெனக் கேட்டால் தள்ளாமல் கொடுப்பான்
அமிழ்தாய் அழகாய் அரனின் மகனாய் --அவன்
அருள் தர வருவான் அடியவர் தமக்கே (அழகாய் )
உள்ள நாள் மறவோம் முருகன் தனையே -நல்ல
உயர்வினைப் பெறுவோம் உத்தமன் துணையால்
நிலையாய் நிற்பான் நிம்மதி தருவான் -தினம்
நினைந்தவர் அழைத்தால் நிச்சயம் வருவான் (அழகாய் )
அழகாய் தெரிவது நம் அழகன் முகமே --உலகில்
அருளை அள்ளியே தருவது அவனின் குணமே (அழகாய் )
(அனுபல்லவி )
குளிர்ந்த நிலவாய் குகனே தெரிவான் --நம்
குறையைச் சொன்னால் உடனே களை வான் (அழகாய் )
சரணங்கள்
எதிர்ப்போர் திருந்தவே என்றும் நினைப்பான் --அவன்
இல்லார் தமக்கே இன்னருள் சுரப்பான்
கதிராய் வந்தே கருணை புரிவான் --இங்கு
கதிர் வேலவனாய் நமக்கு நல்ல காட்சி கொடுப்பான் (அழகாய் )
அருகினில் வந்தால் நம் அகமே உருகும் --நம்
ஐயனை நினைத்தால் அனைத்துமே கிடைக்கும்
உருகும் மனங்களில் உள்ளவன் முருகன் --இதனை
உணர்வாய் தினமே உயர்வாய் மறு கணமே (அழகாய் )
தமிழினைக் காக்கவே தரணியில் பிறந்தான் --நாம்
தாவெனக் கேட்டால் தள்ளாமல் கொடுப்பான்
அமிழ்தாய் அழகாய் அரனின் மகனாய் --அவன்
அருள் தர வருவான் அடியவர் தமக்கே (அழகாய் )
உள்ள நாள் மறவோம் முருகன் தனையே -நல்ல
உயர்வினைப் பெறுவோம் உத்தமன் துணையால்
நிலையாய் நிற்பான் நிம்மதி தருவான் -தினம்
நினைந்தவர் அழைத்தால் நிச்சயம் வருவான் (அழகாய் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக