செவ்வாய், 8 மே, 2018

அமுதம் 425

               பல்லவி
அழகாய்  தெரிவது  நம்  அழகன்  முகமே --உலகில்
அருளை   அள்ளியே  தருவது  அவனின் குணமே  (அழகாய் )
                 (அனுபல்லவி )
குளிர்ந்த  நிலவாய்  குகனே  தெரிவான் --நம்
குறையைச்  சொன்னால்  உடனே களை வான் (அழகாய் )
                சரணங்கள்
எதிர்ப்போர்  திருந்தவே  என்றும்  நினைப்பான் --அவன்
இல்லார்   தமக்கே  இன்னருள்   சுரப்பான்
கதிராய்  வந்தே   கருணை  புரிவான்  --இங்கு
கதிர்  வேலவனாய்  நமக்கு  நல்ல காட்சி  கொடுப்பான் (அழகாய் )

அருகினில்  வந்தால்  நம் அகமே  உருகும் --நம்
ஐயனை  நினைத்தால்  அனைத்துமே  கிடைக்கும்
உருகும்  மனங்களில்  உள்ளவன்  முருகன் --இதனை
உணர்வாய்  தினமே  உயர்வாய்  மறு கணமே  (அழகாய் )

தமிழினைக்  காக்கவே  தரணியில்  பிறந்தான் --நாம்
தாவெனக்   கேட்டால்  தள்ளாமல்  கொடுப்பான்
அமிழ்தாய்  அழகாய்  அரனின்  மகனாய் --அவன்
அருள் தர   வருவான்  அடியவர்  தமக்கே  (அழகாய் )

உள்ள   நாள்  மறவோம்  முருகன்  தனையே -நல்ல
உயர்வினைப்  பெறுவோம்   உத்தமன்  துணையால்
நிலையாய்  நிற்பான்  நிம்மதி   தருவான் -தினம்
நினைந்தவர்  அழைத்தால்   நிச்சயம்  வருவான்  (அழகாய் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக