திங்கள், 7 மே, 2018

காவியம் 421

 கண்ணோடு  கலந்ததும்  காதல்  வருதே -அவளை
கல்யாணம்  செய்யவே  கற்பனை  மிகுதே
பெண்மணி  அவளென்ன  பேசிடாப்  பதுமையோ -தினம்
பின்னால்  சென்றது  மிகவும்  பெரும் பிழை   தானோ

மான் விழியைக்  கண்டதும்  மயங்கியே  போனேன்  --என்
மையலைச்  சொன்னதும்   தையலும்  நின்றாள்
தேன் மொழி  வருமெனத்  தினமும்  தொடர்ந்தேன் --எனோ
திட்டும்  வசவும்  திரும்பவே  கிடைத்தது

காதலைச்  சொன்னால்  கடுப்பாய்  முறைப்பாள்  --நான்
கடிதம்  கொடுத்தால்  பல்லினைக்  கடிப்பாள்
சாதல்  செய்யவோ  சில  சங்கடம்  உண்டு  --அவளை
சாய்த்திட  நினைத்தால்  என்னை  சம்ஹாரம்  செய்வாள்

ஏட்டிக்குப்  போட்டி   எகனைக்கு  முகனை -இங்கே
எல்லாமே  தலை கீழ்   என்ன  தான்  செய்வேன்
ஏன்தான்  என்னைப்  பெற்றாள்  அன்னையே --இதனை
எண்ணியே  தினமும்  நொந்தேன்  தன்னையே

கனவா ? நனவா ? காதலே  தொல்லையா ---அந்த
கடவுள்  மனதிலே  கருணை  இல்லையோ
நினைவில்  அவளையே  நித்தம்  ரசிப்பேன் --அன்பில்
நினைந்து  நினைந்துமே  நெஞ்சம்  தவிப்பேன்

வருமோ  வாழ்வினில்  நல்ல  வசந்த  காலம் --இந்த
வனிதை  கிடைத்தால்  என் வாழ்வு  சுகமே
கள்ளம்   அறியாக்  காதல்  ஜெயிக்கும் --கடவுள்
கண்கள்  திறந்தால்  என்னுள்  காவியம்  பிறக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக