கண்ணோடு கலந்ததும் காதல் வருதே -அவளை
கல்யாணம் செய்யவே கற்பனை மிகுதே
பெண்மணி அவளென்ன பேசிடாப் பதுமையோ -தினம்
பின்னால் சென்றது மிகவும் பெரும் பிழை தானோ
மான் விழியைக் கண்டதும் மயங்கியே போனேன் --என்
மையலைச் சொன்னதும் தையலும் நின்றாள்
தேன் மொழி வருமெனத் தினமும் தொடர்ந்தேன் --எனோ
திட்டும் வசவும் திரும்பவே கிடைத்தது
காதலைச் சொன்னால் கடுப்பாய் முறைப்பாள் --நான்
கடிதம் கொடுத்தால் பல்லினைக் கடிப்பாள்
சாதல் செய்யவோ சில சங்கடம் உண்டு --அவளை
சாய்த்திட நினைத்தால் என்னை சம்ஹாரம் செய்வாள்
ஏட்டிக்குப் போட்டி எகனைக்கு முகனை -இங்கே
எல்லாமே தலை கீழ் என்ன தான் செய்வேன்
ஏன்தான் என்னைப் பெற்றாள் அன்னையே --இதனை
எண்ணியே தினமும் நொந்தேன் தன்னையே
கனவா ? நனவா ? காதலே தொல்லையா ---அந்த
கடவுள் மனதிலே கருணை இல்லையோ
நினைவில் அவளையே நித்தம் ரசிப்பேன் --அன்பில்
நினைந்து நினைந்துமே நெஞ்சம் தவிப்பேன்
வருமோ வாழ்வினில் நல்ல வசந்த காலம் --இந்த
வனிதை கிடைத்தால் என் வாழ்வு சுகமே
கள்ளம் அறியாக் காதல் ஜெயிக்கும் --கடவுள்
கண்கள் திறந்தால் என்னுள் காவியம் பிறக்கும்
கல்யாணம் செய்யவே கற்பனை மிகுதே
பெண்மணி அவளென்ன பேசிடாப் பதுமையோ -தினம்
பின்னால் சென்றது மிகவும் பெரும் பிழை தானோ
மான் விழியைக் கண்டதும் மயங்கியே போனேன் --என்
மையலைச் சொன்னதும் தையலும் நின்றாள்
தேன் மொழி வருமெனத் தினமும் தொடர்ந்தேன் --எனோ
திட்டும் வசவும் திரும்பவே கிடைத்தது
காதலைச் சொன்னால் கடுப்பாய் முறைப்பாள் --நான்
கடிதம் கொடுத்தால் பல்லினைக் கடிப்பாள்
சாதல் செய்யவோ சில சங்கடம் உண்டு --அவளை
சாய்த்திட நினைத்தால் என்னை சம்ஹாரம் செய்வாள்
ஏட்டிக்குப் போட்டி எகனைக்கு முகனை -இங்கே
எல்லாமே தலை கீழ் என்ன தான் செய்வேன்
ஏன்தான் என்னைப் பெற்றாள் அன்னையே --இதனை
எண்ணியே தினமும் நொந்தேன் தன்னையே
கனவா ? நனவா ? காதலே தொல்லையா ---அந்த
கடவுள் மனதிலே கருணை இல்லையோ
நினைவில் அவளையே நித்தம் ரசிப்பேன் --அன்பில்
நினைந்து நினைந்துமே நெஞ்சம் தவிப்பேன்
வருமோ வாழ்வினில் நல்ல வசந்த காலம் --இந்த
வனிதை கிடைத்தால் என் வாழ்வு சுகமே
கள்ளம் அறியாக் காதல் ஜெயிக்கும் --கடவுள்
கண்கள் திறந்தால் என்னுள் காவியம் பிறக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக