இறைவன் ஒருவன் உள்ளாரென்று --இங்கு
எண்ணி யே வாழ்ந்திடு உந்தன் மனதிலே
உதவிகள் செய்திட வருபவன் அவனே --இதை
உணர்ந்து தெளிந்து நடந்திடு வாழ்விலே
நிலத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் --மன
நிம்மதி பெறுவது அவனது தயவிலே
கலங்கித் தவிக்கும் பொழுதில் நம்மை --தன்
கரங்களை நீட்டிக் காப்பதும் அவனே
நாளை நமதெனும் நம்பிக்கையைத் தருபவன் --நாம்
நல்ல வழியினில் நடந்திட நன்னெறிகள் அருள்பவன்
காலை மாலை நன்கு கண்கள் மூடிக் கும்பிடு --வரும்
கவலைகள் தீரும் களிப்பு சேரும் காணலாம் நேரிலே
ஆலையில் இட்ட கரும்பு போல ஆகினோம் வாழ்விலே --நம்
அல்லல் தீர்த்திட அவனும் வருவான் நல்லன்பிலே
பாலினைப் போல பளிங்காய்த் தெரிவான் --உன்னை
பாதுகாக்க தினமும் பல நன்மைகள் அளிப்பான்
இவனைப் போற்றியே இனிதாய் வாழுவாய் --இனி
இன்னல் தீரும் ஏற்றங்கள் சேரும்
முறையோடு வாழ்ந்தால் மூளும் வினைகளோடும் --நல்ல
முழு நிலவாம் அவனை எண்ணியே மூன்று வேளை தொழுவாய்
எண்ணி யே வாழ்ந்திடு உந்தன் மனதிலே
உதவிகள் செய்திட வருபவன் அவனே --இதை
உணர்ந்து தெளிந்து நடந்திடு வாழ்விலே
நிலத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் --மன
நிம்மதி பெறுவது அவனது தயவிலே
கலங்கித் தவிக்கும் பொழுதில் நம்மை --தன்
கரங்களை நீட்டிக் காப்பதும் அவனே
நாளை நமதெனும் நம்பிக்கையைத் தருபவன் --நாம்
நல்ல வழியினில் நடந்திட நன்னெறிகள் அருள்பவன்
காலை மாலை நன்கு கண்கள் மூடிக் கும்பிடு --வரும்
கவலைகள் தீரும் களிப்பு சேரும் காணலாம் நேரிலே
ஆலையில் இட்ட கரும்பு போல ஆகினோம் வாழ்விலே --நம்
அல்லல் தீர்த்திட அவனும் வருவான் நல்லன்பிலே
பாலினைப் போல பளிங்காய்த் தெரிவான் --உன்னை
பாதுகாக்க தினமும் பல நன்மைகள் அளிப்பான்
இவனைப் போற்றியே இனிதாய் வாழுவாய் --இனி
இன்னல் தீரும் ஏற்றங்கள் சேரும்
முறையோடு வாழ்ந்தால் மூளும் வினைகளோடும் --நல்ல
முழு நிலவாம் அவனை எண்ணியே மூன்று வேளை தொழுவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக