செவ்வாய், 15 மே, 2018

மூன்று வேளை 438

 இறைவன்  ஒருவன்  உள்ளாரென்று  --இங்கு
எண்ணி யே  வாழ்ந்திடு  உந்தன்  மனதிலே
உதவிகள்  செய்திட  வருபவன்  அவனே --இதை
உணர்ந்து  தெளிந்து  நடந்திடு  வாழ்விலே

நிலத்தில்  வாழும்  உயிர்கள்  எல்லாம் --மன
நிம்மதி  பெறுவது  அவனது  தயவிலே
கலங்கித்  தவிக்கும்  பொழுதில்  நம்மை --தன்
கரங்களை   நீட்டிக்  காப்பதும்  அவனே

நாளை  நமதெனும்  நம்பிக்கையைத்  தருபவன் --நாம்
நல்ல  வழியினில்  நடந்திட  நன்னெறிகள்  அருள்பவன்
காலை  மாலை  நன்கு  கண்கள்  மூடிக்  கும்பிடு --வரும்
கவலைகள்  தீரும்  களிப்பு  சேரும்  காணலாம் நேரிலே

ஆலையில்  இட்ட  கரும்பு போல  ஆகினோம்  வாழ்விலே --நம்
அல்லல்  தீர்த்திட  அவனும்  வருவான்  நல்லன்பிலே
பாலினைப்  போல  பளிங்காய்த்  தெரிவான்  --உன்னை
பாதுகாக்க  தினமும்  பல  நன்மைகள்  அளிப்பான்

இவனைப்  போற்றியே  இனிதாய்  வாழுவாய் --இனி
இன்னல்  தீரும்  ஏற்றங்கள்  சேரும்
முறையோடு  வாழ்ந்தால்  மூளும்  வினைகளோடும் --நல்ல
முழு நிலவாம்  அவனை  எண்ணியே  மூன்று  வேளை  தொழுவாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக