வியாழன், 31 மே, 2018

நலமுடன் 464

 சிலு  சிலு  காற்றில்  சீதள  நிலவில் --மனம்
தொல்லைகள்  பெறவே  தோகையே  வந்தாய்
தள்ளியே  போயினும்  தாவியே  இழுத்தாய் --நானும்
தஞ்சம்  நீயென்றே   தவறி  விழுந்தேன்

கட்டியே   அணைத்தாய்  கனி இதழ்  கொடுத்தாய் --பெட்டி
பாம்பாய்  உன்பின்னால்  அலைந்தேன்
விட்டுப்  பிரிந்தாய்  வேதனை  கொடுத்தாய் --என்
விழிகளில்   கண்ணீர்  வினையின்  பலனோ

சிதறிய  என்மனம்  சீர் பெற க்  கூடுமோ --உனது
சிற்றிடை  தன்னையும்  என்மனம்  விடுமோ
கற்பனைத்  தேரினில்  ககனம்  செல்வோம் --எனது
காரிகை  உன்னையே   கடிமணம்  செய்குவேன்

நாளும்   பார்ப்பேன்  நலமாய்  முடிப்பேன் --இளம்
நங்கை  உன்னுடன்  நானும்  இணைவேன்
வாழும்  காலம்  வளம்பெற  வேண்டும் -எந்தன்
வனிதா  மணியே  என்றும்  வற்றாத  நதியே

பிள்ளைகள்  அதிகம்  பெற்றிடல்  வேண்டும் --நம்
பின்னால்  அவர்கள்  சுற்றிட  வேண்டும்
நல்லவை  அனைத்தும்  நாம்   பெற  வேண்டும் --அந்த
நாயகன்  அருளால்   நலமுடன்  வாழ்வோம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக