வியாழன், 3 மே, 2018

விருந்து 410

 இறைவா இதுவும்  முறைதானா-இதுவும்
உனக்கு  என்றும்  சரிதானா
கரையும்  மனது  என்றாரே -நீ
கல்லாய்  எனோ  இருக்கின்றாய்

கண்ணில்  காதல்  வளர்த்தேனே -அவளோ
கருகியே  வாதிட வைத்தாளே
உன்னில்  பாதி  என்றேனே -எனோ
உதறித்  தள்ளியே  சென்றாளே

சேர்ந்து  வாழ்ந்திட  நினைத்தேனே -என்னை
சோர்ந்து  போய் விட  வைத்தாளே
நேர்ந்து விட்டப்  பொருளானேன் -அவளை
நினைந்து  நெஞ்சில்  தணலானேன்

இரக்க  குணம்  பெண்ணிடம்  உள்ளதென்பர் -நமது
எலும்பை  நொறுக்கி  ரசம்  குடிப்பார்
அரக்கி  போல்  தினம்  ஆடுகிறாள் -கைகளில்
அகப்பட்டதை  எடுத்து என்மேல்  வீசுகிறாள் 

காதல்  என்பது  பொய்யாகும் -அதனால்
கவலைகள்  வருவது  மெய்யாகும்
சாதல்  ஒன்றுதான்  மருந்தாகும் -அவள்
சம்மதம்  தந்தால்  புது  விருந்தாகும்

இன்றே  உலகீர்  முடிவு  செய்வீர் -இனிமேல்
பெண்கள்  பக்கம்  செல்லாதீர்
என்றும்  ஆண்கள்  தனி ஆளே -இதனை
ஏற்றுமே  நடப்பீர்  இந்நாளே









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக