பல்லவி
திரு நாள் போல வடிவேல் வந்தான் --தினமும
அவனை மனதில் நினைத்தேன் (திருநாள் )
அனுபல்லவி
உருகா மனமும் அவனால் உருகிடும் --அவனது
உளமார் கருணையை இந்த உலகே போற்றிடும் (திருநாள் )
சரணங்கள்
மலை மேல் இருந்து நம் மக்களைக் காப்பான் --தமிழ்
மண்டலம் காத்திடும் நல்ல தொண்டனும் அவனே
நிலையாய் உலகினில் நிற்பவன் முருகன் --நம்
நெஞ்சில் நினைத்தால் அவனே நேரில் வருவான் (திருநாள்)
கனிவாய் இதழோ நம் கண்ணிற்கு விருந்து --அவனது
காலடி ஒன்றே கதி தரும் மருந்து
துணையாய் தோழனாய் துன்பம் துடைப்பான் --தன்னை
துதிப்போர் தமக்கு என்றும் தூணாய்த் தெரிவான் (திரு நாள் )
பிறவா வரத்தினை பெம்மான் அளிப்பான் --அந்த
பித்தனின் மகனாய் நல்ல முத்திரை பதித்தான்
மறவா மனம் தான் மயிலோன் கோவில் --இதனை
மனதில் கொள்வதால் எங்கும் மகிழ்ச்சி நிறையும் (திரு நாள் )
திரு நாள் போல வடிவேல் வந்தான் --தினமும
அவனை மனதில் நினைத்தேன் (திருநாள் )
அனுபல்லவி
உருகா மனமும் அவனால் உருகிடும் --அவனது
உளமார் கருணையை இந்த உலகே போற்றிடும் (திருநாள் )
சரணங்கள்
மலை மேல் இருந்து நம் மக்களைக் காப்பான் --தமிழ்
மண்டலம் காத்திடும் நல்ல தொண்டனும் அவனே
நிலையாய் உலகினில் நிற்பவன் முருகன் --நம்
நெஞ்சில் நினைத்தால் அவனே நேரில் வருவான் (திருநாள்)
கனிவாய் இதழோ நம் கண்ணிற்கு விருந்து --அவனது
காலடி ஒன்றே கதி தரும் மருந்து
துணையாய் தோழனாய் துன்பம் துடைப்பான் --தன்னை
துதிப்போர் தமக்கு என்றும் தூணாய்த் தெரிவான் (திரு நாள் )
பிறவா வரத்தினை பெம்மான் அளிப்பான் --அந்த
பித்தனின் மகனாய் நல்ல முத்திரை பதித்தான்
மறவா மனம் தான் மயிலோன் கோவில் --இதனை
மனதில் கொள்வதால் எங்கும் மகிழ்ச்சி நிறையும் (திரு நாள் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக