ஞாயிறு, 6 மே, 2018

திரு நாள் 419

                       பல்லவி
திரு நாள்  போல  வடிவேல்  வந்தான் --தினமும
அவனை  மனதில்  நினைத்தேன்  (திருநாள் )
                    அனுபல்லவி
உருகா   மனமும்  அவனால்  உருகிடும் --அவனது
உளமார்  கருணையை   இந்த  உலகே  போற்றிடும்  (திருநாள் )
                      சரணங்கள்
மலை மேல்  இருந்து  நம் மக்களைக்  காப்பான் --தமிழ்
மண்டலம்  காத்திடும்  நல்ல  தொண்டனும்  அவனே
நிலையாய்  உலகினில்  நிற்பவன்  முருகன் --நம்
நெஞ்சில்  நினைத்தால்  அவனே  நேரில்  வருவான்  (திருநாள்)

கனிவாய்  இதழோ  நம்  கண்ணிற்கு  விருந்து --அவனது
காலடி   ஒன்றே   கதி  தரும்   மருந்து
துணையாய்  தோழனாய்  துன்பம்  துடைப்பான் --தன்னை
துதிப்போர்  தமக்கு  என்றும்  தூணாய்த்   தெரிவான்  (திரு நாள் )

பிறவா  வரத்தினை  பெம்மான்   அளிப்பான் --அந்த
பித்தனின்   மகனாய்  நல்ல  முத்திரை  பதித்தான்
மறவா  மனம் தான்  மயிலோன்  கோவில் --இதனை
மனதில்  கொள்வதால்  எங்கும்  மகிழ்ச்சி  நிறையும்  (திரு நாள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக