திங்கள், 30 ஏப்ரல், 2018

துணைவி 400

 சொல்லால்  அடித்து சுகமாய்  வறுத்தேன் --நீயோ
சுணக்கம்  எதுவும்  கொள்ளவில்லை
கல்லாலடி  படும்  கனியும்  ஆனாய் --எனக்கு
காலம்   தந்திட்ட  துணையுமானாய் (சொல்லால் )

உள்ள சொந்தம்  எல்லாம் நீ   தந்தது --என்
உறவை  மட்டுமே  நான்  தந்தேன்
கள்ளமில்லா  வெள்ளை மனம் --எவரையும்
கடிந்து   கொள்ளாத   நல்ல  மனம்  (சொல்லால்)

பிள்ளைப்  பாசம்  நிறைய   உண்டு --அவர்
பேசிடும்   வார்த்தைகள்   கற்கண்டு
கொள்ளை  இன்பம்   கொடுத்தவளே --எனக்கு
குறைகள்   வந்திடாமல்   தடுத்தவளே  (சொல்லால்)

நினைவு  என்பது  உள்ளவரை --இங்கு
நித்தமும்   நீதான்  பள்ளியறை
தொடர்ந்து  வந்த  துன்பத்தினை -ஒரு
தூசெனத்   தள்ளியே  ஜெயித்தவளே (சொல்லால்)

மக்கள்  போற்றிடும்   தாயானாய் --எந்தன்
மனதில்   வாழும்   திறமானாய்
எட்டுத்   திக்கும்  உன்புகழ்  முழங்குதம்மா --உன்னால்
என்குலம்   மண்ணிலே   விளங்குதம்மா (சொல்லால்)

குங்குமம்  நிலைத்திடும்   வரம்  வேண்டும் --எங்கள்
குருவாயி   அருளும்   துணை   வேண்டும்
எங்கும்   அன்பு நிலை   வர வேண்டும் --இங்கே
ஏழைகள்  நல்வாழ்வு   பெற வேண்டும் (சொல்லால்)

யசோதை 399

கோபியர்  மனதினில்  கோபாலன் -அங்கே 
கொட்டிக்  கிடக்குது  குதூகலம்
பாவம்  தீர்க்க  வந்த  பரந்தாமன் --அவன்
பணிந்தவர்  அருள் தரும்  குணசீலன்  (கோபியர்)
யசோதை  மகனாய்  உருவெடுத்தான் --அன்று
யதுகுல   சிங்கமாய்  வளர்ந்து வந்தான்

ராதையின்  கண்ணன்  செய்தது  ராச லீலை --அதனை
நயம்  பட ச்  சொல்வது  தான்  என்வேலை  (கோபியர் )

குழலினைக்  கைகளில்  எடுத்தவனாம --பல
கொடுமைகள்  வருவதை  தடுத்தவனாம்
மழலையர்  நடுவினில்  நம்  மணி வண்ணன் --பிறரை
மயக்கியே   சிரிப்பதில்  அவன் மன்னன் (கோபியர் )

பார்த்தனுக்கு  சாரதியாய்  சென்றாயே --நீ
பாரதப்  போரினிலே  வென்றாயே
தூற்றுவோர்  தூற்றினும்  தூது  சென்றாய் --மண்ணில்
துணைவனாய்  நீதிக்கு  துணை புரிந்தாய் (கோபியர்)

பாரதம்  தோன்றிட க்  காரணம்   நீ --அந்த
பாண்டவர் உயர்ந்திடப்  பாதையும்   நீ
கௌரவர்  அழிந்திட  வழி யமைத்தாய் --நாட்டின்
கெளரவம்   காத்திட  வீண் பழி   சுமந்தாய் கோபியர்)

அக்கா 398

தாயின்  வயிற்றினில்  நான் பிறந்தாலும் -என்னை
தமக்கை  நீதான்   தத்து எடுத்தாய்
வாயினால்  உன்புகழ்  பாடுதற்கு --வற்றாத
தமிழிலே  வார்த்தைகள்  இல்லை  (தாயின்)

குளிக்க   வைத்து  உணவு  தந்து  எம்
கூட யிருந்து  பல கதைகள்  சொல்வாய்
சலிப்பு  என்பதை  நீயும்  கொள்ளாமல் --எனக்கு
சகலமும்   கற்றுக்   கொடுத்தவளே  (தாயின்)

உயிருக்கு  உயிராய்  என்னை  வளர்த்தாய் இங்கு
உண்மை  அன்பினை  ஊட்டி  விட்டாய்
பயிருக்கு  நீர்போல்  என்வாழ்வில் --தினம்
பார்த்து  ரசித்திட்ட   நீ  எனது  தாயல்லவா (தாயின் )

என்னை  உன் தம்பியாய்  ஏற்றுக்  கொண்டாய் --இனி
என்றுமே  பிரியேன்  என்று  சொன்னாய்
கண்ணை  விற்று  சித்திரம்  வாங்குதல்  போல் --என் கண்ணே
கயவர்கள்  சூழ்ச்சியில்  வீழ்ந்து  விட்டாய் (தாயின்)

நாளும்  உன்னையே  நான்  நினைப்பேன் --என்றும்
நன்றிகள்  சொல்லி  உன்னை  துதிப்பேனே
காலம்  கடுகியோடி  மறைந்து  விடும் --எந்தன்
கண்மணி  அக்கா  உன்னை  நானும்  மறவேனே 

தந்தை 397

உழைத்தே உயர்ந்தாய்  உலகிலே -நான்
உய்ய வழி  சொன்ன  நல்லவரே
களைத்துப்  போன  மனிதருக்கு -வாழ்வில்
கலங்கரை  விளக்காய்  திகழ்ந்தவரே (உழைத்து )

நல்ல  வழியினில்  தினம்  நடந்தவரே -பிறர்க்கு
நன்மை  ஒன்றையே   செய்தவரே
பிள்ளைகள்  வளர்த்திட நீர்  பட்ட  பெரும் பாடு -அதை
புரிந்து  கொண்டவன்  எழுதும்  தனிப் பாடல் (உழைத்து )

கேடுகள்  செய்த  மனிதர்  பலர் --ஐயா
உம்முன்  கெட்டழிந்து போன கதையுமுண்டு
மறதி  என்பது  மனதில்  வந்தாலும் --உன்னை
மறந்திட  முடியாத   வரமும்  பெற்றாய் (உழைத்து )

தமிழால்  பாடி நானும்  பூசை  செய்வேன் -எனது
தந்தையே  உன்னை  என்றும்  நான்  மறவேன்
உயிரைக்  கொடுத்து  என்னையும்  உலவ விட்டாய் --என்
ஊனில்   உயிரில்  நன்றாய்  கலந்து  விட்டாய் (உழைத்து )

வாழ்வு  முறைகள்  ஒரு நாள்  மாறி விடும் --இங்கு
வற்றாத  நதி கூட  எனோ  வறண்டு  விடும்
தாயை  தந்தையை  இங்கே  யார்  மறப்பார் --மறந்தால்
தர்மம்   தண்டனை  கொடுத்து  விடும் (உழைத்து) 

அன்னை 396

அம்மா  என்று நான்  அழைக்கையிலே -புது
ஆனந்தம்  மனசுக்குள்  பிறக்குதம்மா
சும்மா  கிடந்த  பல  எண்ணங்களும் -இன்று
சுகமெனும்   கடலிலே  மகிழுதம்மா  (அம்மா)

இரத்தத்தைப்  பாலாக்கி  வளர்த்தாயே -எனக்காய்
இரவு ம்  பகலும்  விழித்தவள் நீயே
பத்திய  உணவினை  தினம்  நீயுண்டு -நல்ல
பண்புகள்  பெருகிட  வளர்த்தாயே  (அம்மா)

பிள்ளைகள்  உண்டு  மகிழ்வாரென்று  -நீயும்
பிரியமாய்  உணவுகள்  செய்து  வைப்பாய்
தொல்லை  பலவும்  தினமும்  தந்தேன் -எந்தன்
தூண்டா மணி விளக்கே  நான்  உன்னடிமை (அம்மா)

உலகம்  தினமும்  உருண்டபடி  இருக்கும் -அதில்
உனதன்பு  என்றும்  நிஜமாய்  குடியிருக்கும்
கலகங்கள்  உலகினை  அழிக்க  வந்தும் -என்
கண் கண்ட  தெய்வமே  நீயென்றும்  சாஸ்வதமே (அம்மா)

செல்வம்  பலகோடி  நான்  சேர்த்தாலும் -உனது
சேவை  மனதிற்கு  என்றும்  ஈடாமோ
கள்ள வழி  நானும்  சென்று  அழியாமல் -எனையே
காத்து  நிற்கும்  தாயெனும்  பரம்பொருளே (அம்மா)

உன்னை  தினம்  எண்ணித்  துதித்திடுவேன் -நல்ல
உத்தம  வழிதனில்  நான்  சென்றிடுவேன்
பொன்னைப்  போல  மின்னும்  புனிதவதி -உன்னை
புரிந்து  கொண்டதால்  பாடுவேன்  இந்த   துதி  

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

நமசிவாயம் 395

 இறைவா  நீயிங்கே  வருவாயா -எனக்கு
பிறவா  வரமொன்று  தருவாயா
கரையினில்  ஒதுங்கிய  மீனினைப்  போல -கதி
கலங்கி த்  தவிக்கும்  நிலையுமானேன்   (இறைவா )

உனையே  நினைந்து  உருகியே  கிடப்பேன் -நான்
உய்யும்  வழியினை  காணவே  நடப்பேன்
நினையே  நினைந்து  நெஞ்சம்  மகிழ்வேன் --என்றும்
நிலைப் படியாக  நானுன்  கோவிலில்  கிடப்பேன்  (இறைவா)

கருணை வெள்ளம்  கண்களில்  தெரியும் -உந்தன்
காலடி  ஒன்றே  என்னுள்  நடக்கும்
ஒருமுறை  பார்த்திட  உள்ளம்  களிக்கும் -தினம்
உன்பெயர்  சொல்லிட  என்மனம்  இனிக்கும்  (இறைவா)

திருவே  உருவே  தீந்தமிழ்ச்  சுடரே -இங்கே
திருநாள்  போல நீ  வரும்  நாள்  எப்போ
உருவாய்  ஒளியாய்  உன்னத  நிலையாய் -நீ
வருவாய்  என்றே  வந்தனை  செய்வேன் (இறைவா)

நாவினில்  இனிப்பது  நமசிவாயமே -உலகில்
நான்மறை  தொழுதிடும்  நந்தா  விளக்கே
ஆலமரத்தடியில்   அமர்ந்திட்ட  அண்ணலே -நினது
அருமைகள்  சொன்னோம்  நீயும்  அகமகிழ்வாயே (இறைவா)

ஜீவன்  வாழ்ந்திட  சிவனே  நற்கதி -சதா
சிவனை  நினைந்திடில்  மாறிடும்  தலை விதி
பாவம்  நீங்கிட  பக்தரைக்  காப்பாய் -தமிழில்
பணிந்தேன்  தொழுதேன்  பரமெனும்  சிவமே (இறைவா)

சிவன் 394

 தென்னாடுடைய  சிவனே  போற்றி -என்
நாவில்  உறையும்  இறைவா  போற்றி
கண்ணே மணியே  கயிலைப்  பதியே -உன்
காலடி  பணிந்தோம்  காத்தருள்  இனியே  (தென்னாடு )

மங்கை  கங்கையை  தலைமுடியினில்  வைத்தாய் -திரு
மாலவன்  தங்கையை  மணமாய்  முடித்தாய்
பொங்கிடும்  நிலவையும்  பூரணம்  கொண்டாய் -கொடும்
புலியின்  தோலினைப்  புறத்தில்  அணிந்தாய்  (தென்னாடு )

புட்டுக்காக  அன்று நீ  பிரம்படி  பட்டாய் --சீறிப்
பொங்கிட வைகையில்  புதுப் புனல்  தந்தாய்
சங்கம்  வைத்தே தமிழினை க்  காத்தாய் -மகன்
சரவணனிடமே  சீடனாகி  பிரணவம்  கற்றாய்  (தென்னாடு)

மீன் கொடி  பறக்கும்  மீனாட்சி  நகரில் -இள
மான் , மழு  வேந்திய   எங்கள்  மாதொரு  பாகா
நானுனைத்   தொழுதேன்  நலம் பெற  விழைந்தேன் -தெய்வ
நாயகி  பார்வதி  நலம் தரும்  சீலா  (தென்னாடு)

சிவமயம்  சொல்லிட  பயமினி  இல்லையே -நம்
சிவனை  மறந்தவர்  வாழ்வினில்  தொல்லையே
இக  பர  சுகம்  பெற  என்றுமே  நினைப்போம் -அந்த
இறையருள்  பெருகினால்  நம் இந்தியா  செழிக்குமே (தென்னாடு)

குமுதம் 393

 வேலினை  நினைத்தேன்  வெற்றி  குவியுது -அவனை 
விரும்பித்  தொழுதேன்  நன்மையே  நடக்குது 
பாலினைப்  போன்ற  பளிங்கு  மனமே -எந்த 
பக்தனும்  தொழுதிடில் பரவசமாகும்  அவன்  குணமே (வேலினை )

அமுதமெனும்  தமிழினை  அள்ளியே  குடிப்பான் -என்றும் 
அடியவர்  குறைகளை  சொன்னதும்  முடிப்பான் 
குமுத மலர் போலக்  குறுநகை  புரிவான் -தன 
கோல விழிகளாலே   குவலயம்  காப்பான் (வேலினை )
வள்ளியின்  கணவன்  வந்தாலே  போதும் -நம் 
வாசலில்  செல்வங்கள்  வரிசையாய்  குவியும் 
அள்ளிடக்  குறையாத  அமுத   சுரபி -வாடும் 
அடியவர்  குணம் பெற  அவனே  கருவி   (வேலினை )

அவ்வைக்  கிழவியின்  ஆருயிர்  நண்பன் -தன்னை 
அண்டியோர்  மனதிலே  ஆட்சி  செய்பவன் 
மண்ணகம்  காத்திடும்  மகிமையே  சக்தி -புள்ளி 
மயிலோன்  அருள்  தான்  மனதிற்கு  முக்தி  (வேலினை )

சக்தியின்  மகனென சரவணன்  தோன்றினான் -அன்று 
சமரினில்   சூரனை யன்று  சம்ஹாரம்  செய்தான் 
பக்தி மிகுந்தவர்  பரம்பொருள்  காணலாம் -நாளும் 
பரமனின்  மகனை  நினைந்தவர்   வாழலாம் (வேலினை)


கற்பகத தரு 392

  கண்ணில்  ஒளி தரும்
  கரு மணி  நீயே
கவிதையில்  வாழ்ந்திடும்
கற்பகத  தருவே

 என்னில்  இயங்கும்
இயற்கையும்  நீயே
என்றும்  தொழுவேன்
இனியும்  உனையே

 மின்னல்  மேகம்
மெய்ப்  பொருள் நீயே
மேலோர் போற்றும்
நூலகம்  நீயே

கன்னல்  தமிழால்
கனிந்திடும்  திருவே
இன்னல் தீர்த்திடும்
ஈகைக்  குணமே

தவறினை  நீக்கிடும்
தர்மத்  தேவதை
தாளிணைப்  பணிவோர்
தகுதியில்  உயர்வார்

பொன்னில்  மணியே
புது மலர்த் தேனே
பூவையர்  போற்றிடும்
பூபாள  ராகமே

நாளும்  வணங்கிட
நன்மைகள்  கிடைக்கும்
நல்லவர்  ஆகிடில்
நாடே  செழிக்கும்

ஏடும்  கவியும்
என்றுமே  போற்றும்
ஈசனின்  மனமோ
இறைவியை  நினைக்கும்

இயன்றவர்  தருவார்
ஏழைகள்  உயர்வார்
ஏழுதுவேன்  கவிதை
இதுவுமவள்  சரிதை 

தில்லை சிதம்பரநாதன்391

தில்லையை  ஆண்டிடும் சிதம்பர நாதா -உனது 
திருவருளாலே  தேசத்தைக்  காக்க  வா 
உள்ளதென்பார்  இல்லை யென்பார் -உலகோர் 
ஒருநாள்  இந்த  உண்மையை  அறிவார்   (தில்லை )

ஆயகலைகள்  எனும்  அறுபதும்  நீயே -அம்மை 
பார்வதியின்  அருமைக்  கணவனே 
சேய்கள்  செய்யும் சிறு பிழை எல்லாம் -என்றும் 
சித்தமிறங்கி  சற்றுப்  பொறுத்தருள்வாயே  (தில்லை )

காலினைத்  தூக்கியே  ஆடிடும்  தெய்வமே -உனது 
கருணையைப்  போற்றி  நின் கழலடி  வணங்கினோம் 
வேளை  வருமோ  விடியல்  தருமோ -இந்த 
ஏழையர்  மீதிலே  உனது  இரக்கம்  படுமோ  (தில்லை)

தப்பாய்  ஆட்டம்  ஆடிடும்  தருக்கரை -நீயும் 
தரணியில்  அழித்தே  தர்மம்  செழிக்க  வா 
அப்பனே  உன்னருளில்  வாழுவோம் -இந்த 
அடியரை  மறந்திடில்  எங்குதான் போகுவோம் (தில்லை)

தில்லையை  மிஞ்சவே  ஒரு தேசமும்  இல்லை உனது 
திருவருள்  அன்றி  உயர் கதி  இல்லையே 
எல்லை யில்லா   சுகம்  தரும்  வடிவே -எங்கள் 
இதயங்கள்  குளிர்ந்திட  இன்றே  வருவாய்  (தில்லை )

சனி, 28 ஏப்ரல், 2018

பொன்மகள் 390

கூடு விட்டு  தினம்  தினம்  வெளியினிலே -ஒரே
கூட்டமாய்  பறந்திடும்  பறவைகளே
வாடும்  என்கதை  கேளீரோ -காதில்
வாங்கியே  ஒருபதில்  சொல்வீரோ

தன்னந்  தனியாக  இருந்தேனே -அவளால்
தவறியே  சேற்றினில்  விழுந்தேனே
மின்னும்  அழகினை  நன்மையென -நான்
மீளாத  சிறையினில்  அகப்பட்டேன்

ஆசைத் தீயினை   தினமும்  வளர்க்கின்றாள் -என்னை
அடிமை   போலவே  நினைக்கின்றாள்
காசினைக்  கண்டதும்  சிரிக்கின்றாள் -எனோ
கவலைகள்  நிறையவே  தருகின்றாள்

உற்றார்  உறவுகள்  இழந்தேனே -எனது
உயிராய்  அவளையும்  நினைத்தேனே
மற்றவர்  முன்னே  தலைகுனிய -அந்த
மங்கை  எதற்கு  முடிவெடுத்தாள்

குற்றம்  எதுவும்  செய்யவில்லை -அவளிடம்
கொடிய   வார்த்தைகள்  பேசவில்லை
பற்று மிக  வைப்பது  பாவமெனில் -நான்
பார்த்து  ரசித்த்து  மோகமென்பேன்

என்னுடன்  வாழ்ந்திட  வைப்பீரே -இனியேனும்
இனிமையாய்  பழகிடச்  செய்வீரே
பொன்மகள் தன்னுடன்  என்வாழ்வு -அவள்
புரிந்திட  மறுத்தால்   பெரும்  தாழ்வு 

பரிசு 389

நிலவே  நிலவே  நில்லாயோ -நீ
நேரில்  அவளைக்  காண்பாயா
கலக்க  வைத்திடும்  எழிலுருவம் -அவள்
கண்களில்  தெரியுது  கொடிய  விசம்   

பெண்களில்  தேவதை  என்பார்கள் -அது
பித்தம்  பிடித்தவர்  சொல்லும்  உரை
மண்ணில்  பிறந்த  தெய்வமென்பார் --அது
மடையர்கள்  பரப்பிடும்  செய்தியன்றோ

கண்களைக்  காட்டியே  வலை  விரிப்பாள் -நெஞ்சில்
கருணை  என்பதை  மறந்திடுவாள்
உன்னையும்  என்னையும்  பழித்திடுவாள் -இந்த
உலகில்  வீணிலே  ஏனோ  வாழ்கிறாள்

கவலைகள்  சுமந்து  தவிக்கிறேன் -அவள்
கண்ணடி  பட்டதால்  கலங்குகிறேன்
பொறுத்திட  மனமோ  நினைக்கவில்லை -அந்த
பூங்கொடி  எனக்குப்  பெருந் தொல்லை

சிரித்துப்  பேசியே  எனைக்  கவிழ்த்தாள் -எனது
ஜீவனைப்  பறித்துமே  சென்று விட்டாள்
பறித்தது  எனக்கவள்  தரும்  பரிசலிப்பா -நான்
படும் துயர்  இன்றேனும்  தீர்ந்திடுமோ

எக்காலம் 388

 கண்ணில்  வருவது  கண்ணீர்  எனில் -கொடிய
கருத்தில்  விளைவது  வெந்நீர்  அன்றோ
கண்ணியம்  மறந்து  நடக்கிறாய் -பிறர்
காசினை  உனதென  நினைக்கிறாய்

கூட்டம்  போட்டுப்   பேசுகிறாய் -மற்றவர்
குறைகளைச்  சொல்லியே  ஏசுகிறாய்
சேற்றினை  அள்ளியே  வீசுகிறாய் -உள்ள
சிறந்தவை  அனைத்தையும்  தூற்றுகிறாய்

யாரையும்  துச்சமாய்  பார்க்கிறாய் -இங்கே
எவரையும்  எதிரியாய்  நோக்குகிறாய்
ஊரையும்  பகைத்துக்  கொள்கிறாய் -வீணில்
உழன்று  தனிமையில்  தவிக்கிறாய்

இறைவன்  படைத்திட்ட  உலகமிது -இதில்
உள்ளவை  எல்லாம்  பொதுவல்லவோ
தரையினில்  வீழ்ந்த  மீன் போல -எனோ
தானே  விழுந்து  துடிக்கின்றாய்

வாழும்  காலம் மிகச் சிறிது -இதில்
வாழ்கிற  முறைகள்  மிகப் பெரிது
சூழும்  வினைகளில்  சிக்கிடாமல் -நீ
சுகமாய்  வாழ்வது  எக்காலம் 


வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பிருந்தாவனம் 387

திரு நாள்  இதுபோல்  வருமோ தோழி -என்
திருமால்  அழகன்  வரும்  நாள் எதுவோ
கனி வாய்  சேர்த்து  கவிதை  சொன்னான் -நல்ல
கவனமாய் அணைத்து  கண்களை மறைத்தான்

தனியே  இருக்கையில்  தழுவிக்  கொன்டேன் -நான்
தவியாய்  தவிக்கையில்  தாவியே  இழுத்தான்
இனிமேல் எனக்கு  ஒரு பிறவியும்  வேண்டாம் -அவனது
இடப்புறம்  தனியே எனக்கிடம்  வேண்டும்

குழலினை  ஊதியே  கொள்ளை  அடித்தான் -ஒருநாள்--
குடையாய்  மலையினைக்  கொண்டே  தடுத்தான்
மழலையர் விரும்பிடும்  மகிழ்ச்சியே  கண்ணன் -திரு
மாலவன்  வேங்கடன்  மங்கள நாயகன்

இலக்குமி  தன்னையே  மார்பினில்  கொண்டான் -என்றும்
ஏழையர்  சுகம்பெற  இன்னருள்  புரிவான்
கலக்கம்  தீர்த்திட  இங்கே  கண்ணனும்  வருவான் -தமிழ்
கவிதையால்  துதித்தோம்  காத்திட  வருக

எண்ணம்  எதிலும்  எழிலாய்  திகழ்பவன் -வரும்
இன்னலைத்  தீர்ப்பதில்  இறைவனும்  அவனே
மண்ணினைக்  காத்திட  வந்திடு  கண்ணா -உந்தன்
மலரடி  தொழுதோம் எங்கள்  மாதவா   வருக

சங்கை  எடுத்தான்  தர்மம்  தழைக்க -அன்று
தன   கை  கொடுத்தான்  தங்கை  பிழைக்க
கங்கைக்  கரையினில்  அமைந்தது  பிருந்தாவனமே -கண்ணன்
காலடியில்  மயங்குது   எங்கள்  மனமே 

வசந்தத்தில் ஓர் நாள் 386

வசந்தத்தில்  ஓர் நாள்  வந்தவர்  சென்றார் -அவர்
இன்னும்  வந்திடக்  காணேன்  தோழி 
கசந்திடும்  நினைவோ  கவலைகள்  மிகவோ -நீ 
போய் கண்டு  வந்து  சொல்லடி 

சுகம்  பெறும்  நாளைத்  தினமும்  நினைப்பேன் -அந்த 
சுந்தரன்  என்னிடம்  வரவில்லை  தோழி 
சுற்றமும்  சொந்தமும்  சொல்வது   கேலி --எனோ 
உற்ற துணை  எனக்கென்று  யாரடி  தோழி 

கண்களால்  அழைத்தார்  கட்டியே  அணைத்தார் -அன்று 
ககனத்தில்  பறந்து  சென்றேன்  நானே 
பெண்களில்  என்போல்  பிதற்றிடல்  உண்டோ -இதனை 
நன்றாய்  அறிவாயடி  எனது  நாயகன்  வருவாரோடி 

இரவென்றால்  தொல்லை  என் இளமையும்  தொல்லை -இனி 
எதிர்காலம்   எனக்கு  நல்லதோ  தோழி 
உறவினை மதித்தேன் ஊரினை  எதிர்த்தேன் -நானுமவருடன் 
ஒன்றெனக்  கலந்து  உலகினில்  வாழ்வேனோ 

உணவை  மறந்தேன்  உழன்று  திரிந்தேன் -என் 
ஊனில்  கலந்த  நல்  உத்தமன்  அவரே 
கனவில்  வருவதால்  கண்ணீர் பெருகுது -அந்த 
காமன்  கணைகளோ இந்தக்  கன்னியை  வாட்டுது 

நாட்டில்  உள்ள  நல்லவர்  பேசுக -வெறும் 
ஏட்டில்  எழுதிடும்  இன்பமா  காதல் ?
வேட்டை  யாடிட  விருப்பமா  சொல்வீர் -இன்றே 
விரும்பிய  பெண்களை  விரைவீர்  மணக்க  

வியாழன், 26 ஏப்ரல், 2018

சித்திரைத் திரு விழா 385

சித்திரப் பெண் மீனாட்சிக்கு -என்றும்
சித்திரையில் தான் கல்யாணம்
முத்திரை பதித்திட மோகன சுந்தரர் -இன்று
மோகம் தீர்த்திடும் நல்ல முகூர்த்த   நாள்

ஆனிப் பொன் மாலை ஆபரணத்தோடு -நம்
ஆவணி   வீதியில் வரும்  அழகு   நாள்
காணிக்கை தந்து கண்ணீர்   மல்கிட -அவர்
காலில் விழுந்து மகிழும் நாள்

கூட்டமாய் கூடியே குலவை இடும் நல்ல நாள் -திரு
கோவிலை சுற்றியே கும்மாளம் போடும் திரு நாள்
ஆட்டமும் பாட்டும்  ஆளினை அசத்திடும் அன்பு  நாள் -நம்ம
அந்திப் பொட்டலில் ஆசையாய் உண்ணும் அழகு நாள்

வைகையில்   நீராடி    வாசமலர்    சூடியே -வரும்
வசந்தத்தை   அழைத்திடும் வாச நாள்
வாகை    கொண்ட  காளையர் கண்டு -தன
வசமிழந்தவர்   ஆடிப்   பாடிடும்    வசந்த நாள்

தமுக்கத்    திடலிலே தையலர் சேர்ந்து -எங்கும்
தாவியே    ஓடிடும்    தங்க  நாள்
கமுக்கமான    காதல்    விவரங்கள்  -இங்கு
கண்டவர்    அறிந்திடும்    காவிய நாள்


வெற்றி 384

வானம்     பொழிவது     மழை நீர் -நம் 
வயலின்     தேவை     தண்ணீர் 
ஞானம்     அடைவது   முதிர்ச்சி -இதை 
நம்பிட    மறந்தால்     தளர்ச்சி 

இரவுக்கு     முடிவுரை    பகலே -நாட்டில் 
என்றும்     நிலைப்பது   புகழே 
உறவுக்குள்     விளைவது   காதல் -வீணில் 
உணர்ந்திட  மறுப்பதால்     மோதல் 

நீரினில்     அணையுமே     நெருப்பு -என்றும் 
நேர்மை     அவரவர்     பொறுப்பு 
பாரினில்     உயர்ந்தது    நம் தேசம் -உலகில் 
பாரதம்     செழித்திடப்     போடு  நீ   கோசம 

பெண்டிர்     என்பவர்     நம்  அன்னை -பல 
பெருமைகள்    கொண்டது    தென்னை 
மண்டலம்     போற்றிட     வாழ்க -உந்தன் 
மனதிலே     நல்லவை     சூழ்க 

இருப்பதைக்     கொடுத்தே     வாழு -நீ 
எங்குமே     சமமாய்ப்     பழகு 
பொறுமை     நமக்குப்     பெருமை -இதனை 
புரிந்திடில்     பெறலாம்     செழுமை 

போட்டி    பொறாமைகள்    தீது -பலர் 
பிழைப்பைக்     கெடுப்பது     சூது 
வீட்டினை     விளங்கிட     வைப்பாய் -நீயே 
வெற்றியை     என்றுமே     சுமப்பாய்       

புதன், 25 ஏப்ரல், 2018

கலைமகள் 383

அறிவான    தெய்வம்    நீதானம்மா -இந்த
அடியேனுக்கு    அருள்   செய்ய   வருவாயம்மா
புரியாத    கேள்வியின்    விடை-    நீயம்மா-பெரும் 
புகழ்   வேண்டி    உன்பாதம்    பணிந்தேன்   அம்மா

கண்ணாலே   நீ  பார்க்க   நான்   கவியாகினேன் -உன்
கனிவான    சொல்லே    எனது    வழிகாட்டியே
எண் ணா லும்  எழுத்தாலும்   என்னை    மாற்றினாய் -இந்த
எளியோனுக்    கருள்தந்து    புகழ்  ஏற்றினாய்

பொன்னாலும்   மணியாலும்    துதிப்பேன்  அம்மா -உனது
புன்னகை    பலத்தாலே   நானும்   ஜெயிப்பேன்  அம்மா
மண்ணுள்ள   காலம்   முழுதும்    மருந்தாகினாய் -உந்தன்
மலரடி    தொழுதவர்க்கு    அறிவு   விரிந்தாகினாய்

அழியாத   பல செல்வம்    நீ   தந்தது -உன்
அருளாலே    அல்லவா    இந்தப்   பெயர்    வந்தது
விழி சிந்தும்    கண்ணீரில்    விளக்கேற்றுவேன் --தலை
விதி   மாற்றி    அருள்  கூட்ட    உனை   வேண்டினேன்

எந்நாளும்     உனைஎண்ண    மறவேனே -உன்
எழில் கண்டு   பல   பாடல்    புனைவேனே
கண்ணாக    உனையெண்ணி   தினம்   போற்றுவேன் -தமிழ்
கவிதையின்    வழியாக     உந்தனை     வேண்டினேன் 

ஜெகம் 382

மலையேறி    வருகின்றேன்    மாதவா -ஏழு
மலைகள்   சூழ்ந்திட    அரசாளும்   கேசவா
திருமாலே    உந்தன்   மார்பில்    ஸ்ரீதேவி -நோக்கும்
திசை யெல்லாம்   பொன்னாகும்   உன்னருள்   மேவி

அமைகின்ற    வாழ்வு   எல்லாம்   உன்னாலே -நல்ல
அருள்   வேண்டிப்    பாடினேன்   இந்நாளே
கத்தும்   கடல்    நடுவே  தனி  வீடு -அதில்
காண்பதை    பாடி  வைத்தார்    அன்போடு

சுற்றிச்    சுழன்று    வரும்    சுதர்சனம் -அதன்
சுழற்சியிலே   நன்மை    தரும்    நிதர்சனம்
பற்றி யே   உந்தன்   பாதம்   பணிந்திடுவேன் -நான்
படுகின்ற  துன்பம்    இனிமேல்   பறந்தோடுமே

வெற்றி   மகள்   ஸ்ரீலட்சுமி   உடனிருக்க -உனது
வெண்  கொற்றக்   குடையாய்   கரு நாகமிருக்க
சுற்றியேழு    உலகோர்   தொழுது நிற்க  -மது
சூதனே  உடன்  வருவாய்    அருள்  சுரக்க

மலையேறி   வந்தார்க்கு     அபயம்    நீயே -ஏழை
மன வீட்டில்    அமர்ந்திருக்கும்    பெருமாளே
கலை யாவும்    பணியும்    உந்தன்    காலடியில் -உன்
கனிவாலே இந்த  ஜெகம்   வாழும்   மென்மேலே 

சண்முகன் 381

                              பல்லவி :
வந்தால்    வர ச்    சொல்லடி -தோழி
வடிவழகன்   முருகன்   வள்ளி மணாளன்   (வந்தால்)
                             அனுபல்லவி
புள்ளி மயில்  ஏறிவரும்   பொன்னிற   ரூபன் -இந்த
பூமியைக்    காத்திடும்    புண்ணிய   சீலன்  (வந்தால் )
                             சரணங்கள்
சூரனை   வதைத்திட்ட   எங்கள்  சுப்ரமண்யன் -குண
சுந்தரி   தெய்வ யானை   சுகம்  பெறும்   பாலன்
ஆறுமுகம்  கொண்ட   அமிழ்தினும்   இனியன் -தினம்
அடியவர்   தொழுதிட    நலம்  பெறுவார்   என்றே  (வந்தால்)

முத்தமிழ்   காத்திடும்    மூர்த்தியும்    அவனே -வரும்
மோக   இருள்    நீக்கும்    மோகனன்   அவனே
எத்திசையும்    போற்றும்    எங்களின்   பெருமானே -தூய
ஈசனார்    திருமகனே    ஏழைகள்    தலைவனே   (வந்தால்)

வேலினைக்   கொண்டே   வரும்  வினைகள்   தீர்ப்பான் -கொடும்
வெஞ்சமர்   களத்தினில்  வெற்றியே   குவிப்பான்
காலினில்   சிலம்பு   கொஞ்ச  நம் கந்தனும்   வருவான் -இளம்
கன்னி    எனைகூடியே   களிப்பினை   தருவான்  (வந்தால்)

மலையினில்   குடியிருக்கும்   திருமாலின்   மருகன் -வாடும்
மக்களின்   துயர்  நீக்கும்   பொக்கிசம்   குகனே
கலைகளின்    அதிபன்    கண்கவர்    முருகனே -நல்ல
கற்பகத்    தருவாய்    பல  அற்புதங்கள்    செய்பவன்  (வந்தால் )

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

பின்னல் 380

வண்ணக்   கரு விழி 
கன்ன   கதுப்பிலே 
வந்து    அழைப்பதுவோ 

கண்ணன்  எனப்படும் 
கள்வனவன்   செயும் 
காதல்   கலை யல்லவா 

கற்றும்    தெளிந்திட 
முற்றும்   உணர்ந்தவர் 
சுற்றம்    அறிந்தவரோ 

கொற்றம்    அடைந்தவர் 
குற்றம்    புரிந்தவரோ 
பற்றும்    மறந்தவரே 

உண்மை    பேசுவோர் 
உலகில்   சிறந்தவர் 
உன்னதம்  பெற்றவரே 

தன்னை   அறிந்தவர் 
தானாய்   ஆனவர் 
தலைவன்    ஆனவரே 

பின்னல்    சடையினை 
பின்னி   இழுத்தவன் 
கன்னியின்  காதலனே 

எண்ணி    அவனை நிதம் 
ஏற்றுத்     துதிப்பவர் 
எல்லாம்  பெற்றவரே 

பெற்றவை  அனைத்தையும் 
விற்றுத்    துணிபவரோ 
வித்தைகள்   புரிபரோ 

தமிழைத்   தினம் தினம் 
தனதெனக்   கொண்டவர் 
தர்மம்     காத்தவரே 

ஜோடி 379

கடனைக்    கேட்டா    மொறைக்கிறே -நீயும்
வாயில்    கண்டபடி    திட்டுறே
இதுவனக்கு    சரிதானா    சொல்லடி -அட
இளங்கிளியே    எனக்குப்    பதில்    சொல்லடி

மரியாதை    கொடுத்துப்       பேசு -உன்
மஞ்சக் கறை    பல்லும்    போகும்
தெரியாதா    உன்பவுசு    எனக்கு -நானும்
தீர்க்கப்    போறேன்    உன்னுடைய    கணக்கு

கோபம்     எதுவும்     கொள்ளவேணாம் -நீ
குடும்பம்    நடத்த    வந்தா    போதும்
மாமன்    மேல    இந்தக்    கோபம்  என்னடி -என்னை
மயக்க    வைக்கும்    அழகுள்ள    பெண்ணடி

என்ன    சொல்லியும்    விளங்கவில்லை -தினம்
எனக்கு    எனோ    இந்த    தொல்லை
கன்னம்    சிவக்க    வைக்கப்    போறேன்    புரியுதா -நான்
காலியாகி    உன்னை இனி    வதம்   செய்யவா

காமன்    கணைகள்    என்னையும்    கொல்லுதே -நீ
கனிஞ்ச    பழம்    உன்னிடம் தான்    கெஞ்சுவேன்
ஊரை க்    கூட்டி   உன்னை    மணம்    செய்யவா -உன்
உசந்த    அழகு   எனக்கு    மட்டும்    அல்லவா

வம்புச்     சண்டை    போட   வேண்டாம்     (பெண் )


வாங்கிய    காசு    கடனும்    வேண்டாம்    (ஆண் )


பொங்க    வைக்க    கோயிலுக்குப்    போகணும் (பெண் )


நானும்    கூட   வாறேன்    நீயெந்தன்    ஜோடி   யாகணும் (ஆண் )

சிரஞ்சீவி 378

அண்ணனும்    தம்பியும்    வாங்கப்பா -நான்
அன்பால்    சொல்வதைக்    கேளப்பா
சும்மா    திரிந்தால்    போதுமா -நாம்
சுகம் பெற    வழி வகை    தேடணும்

உடலை    மனதை    உறுதி  செய் -என்றும்
உத்தமனெனப்   பெயர்    எடு
கடமை    நல்லதைக்    கொள்ளுவாய் -உனது
கவனம்    இழுக்கும்    தீயன    தள்ளுவாய்

பெற்றவர்    அன்பிலே    திளைத்திடு -நீங்கள்
பெரும் பொருள்   ஈட்டிட    உழைத்திடனும்
உற்றவர்    தம்மையும்    மதித்திடு -சில
உலுத்தரைக்    கண்டிடில்   மிதித்திடு

கூடி வாழ்வது    ஒன்ரே    மிக நல்லது -பல
குடும்பங்கள்    வறுமையில்   உள்ளது
ஓடியாடி    நன்றாய்    உழைத்திடு -அதுவே
உயர்வினைத்    தந்திடும்    அறிந்திடு

பிறந்த    மண்ணினைப்    போற்றுவாய் -நாட்டில்
பிற்பட்டோர்    வாழ்வினை    மாற்றுவாய்
சிறந்த     பிள்ளைகளாய்    மாறனும் -நீங்கள்
சிரஞ்சீவியாக    உலகிலே    வாழனும்

கண்ணா 377

நீராடும்     பொழுதிலே    என் தோழி -அவா
நினைவு    எங்கும்    பொங்குமே   தோழி 
போராடும்    மனதினைக்    கொண்டேன் -உடனே 
புறப்பட்டு    வருவாரென    வாசலில்    நின்றேன் 

யார்  யாரோ    வந்திங்கு    சென்றார் -என் 
அய்யன்    இன்னும்    வரக் காணேன்  சகியே 
ஊர்       மாறிப்    போனாரோ    அவரே -நான் 
உறவின்றி   உணர்வின்றி    நிற்கும்   மண் சுவரே 

காலங்கள்    நில்லாது    ஓடும் -என் 
கண்ணாளர்    இல்லாத    நிலையென்று    தீரும் 
கோலங்கள்    மாறிடவும்    வேண்டும் -இந்த 
கோதைக்கு    புது வாழ்வு    வந்திடுமோ   தோழி 

மலருக்கு    மலர்     தாவும்     வண்டு -அவரது 
மனதிலே     மணக்கின்ற    வாச மலர்ச்    செண்டு 
உலா வரும்  தென்றலை    தூது    கேட்பேன் இனி 
உடன் வந்து   எனைக்காக்க   வரமொன்று    கேட்பேன் 

ஒரு பிள்ளை    எனக்காக    வேண்டும் -அவரது 
உறவு சொல்ல    எனைக்காக்க    துணையாக  வேண்டும் 
பெரும் பிழைகள்    நான்  என்ன    செய்தேன் ?-இந்த 
பேதை மனம்   களித்திட   இவண்  வாயென்   கண்ணா 

திங்கள், 23 ஏப்ரல், 2018

சிங்கத் தம்பி 376

 நானும்    நீயும்    நண்பராகினோம் -பல
நன்மைகள்   சூழ்ந்திட    நன்கு    வாழுவோம்
வாழும்     காலம்    வள்ளலா    கினோம் -நாம்
வாரிக்    கொடுப்பதில்    பாரி    யாகுவோம்

ஏழை    எளியவர்    எங்கள்    சாதியே -நம்
எல்லோருக்கும்   என்றும்   ஒரே    நீதியே
கோழை    என்பதை    மனதில்     நீக்கியே -நல்ல
கொள்கைப்    பிடிப்புடன்    வாழ்ந்துமே    காட்டு

கல்விச்  செல்வம்    கருத்துடன்    காத்து -இங்கே
கணக்கற்ற    ஏழைக்கும்    கருணையாய்   தருவாய்
அள்ளிட    அள்ளிட    அழியாச்    செல்வம் -இதை
அழகாய்    எடுத்து    அனைவர்க்கும்    தருவாய்

உள்ளவர்    வறியவர்    உள்ளத்தில்    வேண்டாம் -மண்ணில்
உயர்ந்தவர்    தாழ்ந்தவர்    உரைகல்    வேண்டாம்
நல்லவர்    தீயவர்    நம்மிடை    உண்டு -நாளும்
நன்றாய்    உணர்ந்து    நலம்பெற    வாழ்வாய்

பெண்கள்    நமக்கென்றும்    பின்பலம்    தானே -இதன்
பின்னணி    புரிந்திடில்    பிரச்சினை    விலகும்
கண்களைப்    போன்றது    மகளிர்    கற்பு -அதனை
காத்து    நிற்பது    அனைவரின்     பொறுப்பு   

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

தர்மம் 375

குளிரடிக்குது    அடியே   குளிரடிக்குது -வாடி
கோல  நிலவிலே    குளிரடிக்குது
வாலைக்    குமரிக (ள் )  வாங்கடி -தெருவில்
வட்டம்    போட்டு    ஆடுவோம்

குனிந்து    நிமிர்ந்து    ஆடினால் -நமக்கு
கொள்ளை    இன்பம்  கூடுமே
கொஞ்சும்    தமிழில்    பாடினால் -பல
கோடி    மகிழ்ச்சி    பொங்குமே

நிலவில்    ஆடியே    திரிவதில் -புதிய
நிம்மதி    மனதில்    பெருகுமே
கருத்தில்    தெளிவு    பிறக்குமே -வரும்
கவலை    ஓடியே    மறையுமே

இரவில்    தூக்கம்    அசத்துமே -இனி
இளமை    பொங்கி    வழியுமே
சிறக்கும்    வாழ்வு    சேருமே -முகம்
சீதள     நிலவென    ஜொலிக்குமே

உடலும்    மனதும்    உருப்படும் -நமக்கு
உசந்த     வாழ்வு    வசப்படும்
தடங்கள்    தெளிவாய்    புலப்படும் -உலகில்
தர்மம்    ஒன்றே    ஜெயித்திடும் 

இன்று 374

நிலவும்    வானும்    கசந்து    போச்சு -அவர்க்கு
என் நினைவு    எனோ  மறந்து    போச்சு
வீசும்    சூடாய்    காற்று    ஆச்சு -நான்
வெம்பித்   தவிக்கும்    நிலையுமாச்சு

கண்ணில்    கண்ணீர்    வழியலாச்சு -கொண்ட
காதல்    என்னையே    வருத்தலாச்சு
விண்ணில்  மறையும்  மேகம்   போல -என்னை
விரும்பி       வந்திடும்    தூக்கம்    போச்சு

தோழிக (ள் )   சேர்ந்து    சிரிக்கலாச்சு -எனது
சுற்றம்    கேலிகள்    பேசலாச்சு
ஆழியலை    போலவே    நெஞ்சம் -தினம்
அவரை    நினைத்துப்    பொங்கலாச்சு

நாளும்    தேதியும்    மறந்து    போச்சு -எனக்கு
நடக்கும்    சேதியும்    நினைவில்    போச்சு
வாழும்    வாழ்க்கை    கேள்வி     ஆச்சு -அவர்
வருவாரெனும்    எண்ணமும்    போச்சு

மண்ணில்     காதல்    பாவமா -எந்தன்
மன்னவர்க்கு    என்மேல்    என்ன கோபமோ
உன்னில்    நானும்    ஒன்று  தான் -நீங்க
உடனே     வாங்க    இன்றுதான் 

சனி, 21 ஏப்ரல், 2018

மதி மயக்கம் 373

நிலவைப்     புடிக்க     ஆசை   வைச்சேன் -எனோ
நித்தம்    எழும்பி     நானும்     குதிச்சேன்
தலையை     சுத்த      கீழே     விழுந்தேன் -செல்லம்மா
தழுவ  நீயும்     ஒரு வழியை    சொல்லம்மா  (ஆண் )

கிறுக்குப்     புடிச்சுப்     பேசுறியே -அட
கேனத்தனமா    நீயும்     அலையுறியே
வட்ட நிலா    உனக்கு    இங்கே    கிட்டுமா -நீயும்
வாங்கப்போறே    பூசைகளை    மொத்தமா  (பெண்)

எடுத்த     வேலை     நானும்     முடிக்கவில்லை -எனக்கோ
இரவு  பகல்      தூக்கம்     வல்லை
தடுத்து     நீயும்     மிரட்டுறியே     கண்ணம்மா -நான்
தாகம்     தீர்க்க    வந்திடுஎன்     பொன்னம்மா  (ஆண் )

இருக்கும்    வேலையோ    முடியாது -நீயும்
எம்பிக்      குதித்தும்      ஆகாது
பொழப்பை  பாக்க  வேணும்    புரியுதா -இப்படி
புலம்புவதால்    பலனும்   இல்லை    தெரியுதா  (பெண் )

மனசில்     உள்ளதை    சொல்லி     புட்டேன் -உன்னால்
மதி மயக்கம்     தீர்த்துக்   கிட்டேன்
கனவில்    வரும்     கட்டழகி     நீயடி -நீ
கருணை    காட்ட     மனசுக்குள்ளே    தேனடி  (ஆண் )

ஊரை     அழைச்சுப்     பேசவேணும் -எனது
உறவு முறை     வரவும்    வேணும்
கூரை வீடு     எனக்கு  வேணும்     வாங்குய்யா -உனக்கு
கொழந்தை     பலவும்    பெத்துத்   தருவேன்   நானய்யா (பெண்)

காதல் உறவு 372

கண்ணை    சுழட்டி    இழுக்கிறயே -கண்ணம்மா
நாம   களத்து   மேடு    பக்கம்    போவமா  (ஆண் )

பல்லை    உடைச்சு    கையில    கொடுப்பேன் -உன்னை
பட்டம்    போல    பறக்க    வைப்பேன்   (பெண் )

கிட்ட    வந்தால்    முட்டுறியே    கண்ணம்மா -நானும்
கிடுக்கிப் பிடி     போட்டுப்   மயக்கிடுவேன்    தெரியுமா  (ஆண் )

ஊரிலே    மேஞ்சு   திரியும்    உதவாத    மாடு  நீ --உன்
பேரைக்    கெடுத்தா    ஓடிப்போவே     புரியுதா  (பெண் )

தங்கத்தால்    புது தாலி      செய்வேன் -உன்னை
தாரமாக்கி    நானும் அழகு    பார்ப்பேன்  (ஆண் )

பங்கப்பட்டு     நாம     நிக்க   வேணாம் - கொஞ்சம்
பகல்   இரவும்     பாக்க   வேணும்   (பெண்)

சிங்கம்     போல நான்     இருப்பேன்   செல்லம்மா -நீ
சித்த  நேரம்        கூட    வாடி    என்னம்மா  (ஆண் )

தங்கத்     தமிழின்     இனிமை  போல -நம்மை
தழுவிச்    செல்லும்     தென்றல்    போல  (பெண் )

பொங்கி    வரும்     பொங்கல்     போல -விளைஞ்ச
புத்தரிசி     மணமும்      போல (ஆண் )

எங்களுக்கும்     காலம்     உண்டு -நாம
இணைஞ்சுடுவோம்    காதல்  உறவு  கொண்டு  (இருவரும் )


வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அழகு நிலா 371

நீரில்     வாழும்     மீனினம் -ஏன்
நில்லாமல்     எங்கும்    ஓடுது
வேரைக்     கொண்ட     மரங்களோ இங்கு
விரும்பித்     தலையை     ஆட்டுது

பசுவை     விட்டு  கன்றுக் குட்டி -எதற்கு
பாய்ந்து     பாய்ந்து     ஓடுது
சிசுவின்    காதில்     தாயும் -நன்கு
சிரிக்க     சேதி     சொல்லுது

மொட்டு     அவிழ்ந்த     முல்லையோ -மனதில்
மோக     வெறி    ஊட்டுது
கட்டவிழ்ந்த     மேனி     என்னவோ -புது
காதல்     சுரம்     ஏற்றுது

புள்ளினங்கள்   வானில்     பறந்து -ஒரு
புதிய  செய்தி     கொண்டு     போகுது
அள்ளி     வரும்     அழகினிலே -வானில்
அழகு     நிலா     சிரிக்குது   

கானில்     வாழும்     உயிரினங்கள் -அட
கணக்கு     பார்த்தல்     இல்லையே
வீணில்     எதற்கு     சண்டைகள் -நீவிர்
விரைந்து     ஒன்றாய்     சேர்கவே


புகையிலை 370

விட்ட    புகை    கொஞ்சமில்ல -எனக்கு
விவரம்    ஒன்னும்    வெளங்கவிலே
பட்ட கதை   சொல்லிடுறேன்   கண்ணம்மா -நீ
பக்குவமா   கேட்கோணும்    என்னம்மா

அஞ்சு கட்டு     பீடி     பிடிப்பேன் -தெனம் -
அயிர மீனு   கொழம்பு    வைப்பேன்
நைஞ்சு    போயி   கிடக்கிறேனே -கேளம்மா
ராப்பகலா  தூக்கம்  போச்சு  செல்லம்மா

புத்து மண்ணை  எடுத்து    வந்தே -இங்கு
புனிதமாக    பூசை    செய்வார்
பற்று மில்லா    பாவியாகிப்    போனேன் -எனோ
புத்து நோயை    பீடி மூலம்    வலிச்சேன்

உண்ணும்    சோறு   செரிக்கவில்லை -இருக்கும்
உறவும்   என்னையே    மதிக்கவில்லை
கண்ணிருந்தும்    குருடனாகிப்   போனேன் -நான்
கால் தவறி    சாக்கடையில்   விழுந்தேன்

புகையிலையை    மறக்க    வேணும் -உங்க
புள்ளே  குட்டி    பொழைக்க    வேணும்
நமையழிக்கும்    புகையிலையை    அழிப்போம் -நம்நாடு
வாழ்ந்திட    என்றைக்குமே    உழைப்போம்  

கன்றும் பசுவும் 369

குடித்தனத்தை   நடத்த    வேண்டி -கோதை
உந்தன்    கையைப்    புடிச்சேன்
மடப்பயலா   நடக்கிறேனே   தெரியுமா -உனது
மகத்துவத்தை   சொல்ல  எனக்கு   முடியலே

ஆனமட்டும்    பேச்சு    பேசு -நீ
அம்புட்டதை   எடுத்து   வீசு
ஈனப்   பொழப்பு   எனக்கினியும்   வேணுமா -தெனம்
விசத்தை   வாங்கி  குடிக்கிறயே   ஞாயமா

குடியினாலே  எங்குடலு    போச்சு -நாட்டில்
கொள்ளை    கொலையும் பெருகலாச்சு
படிப்படியா   நிறுத்திடுவேன்   கண்ணம்மா -நீ
பரவசத்தில்   மூழ்கப்   போறே  என்னம்மா

கேட்டுக்  கேட்டு    புளிச்சுப்    போச்சு -இங்கே
கேவலமாய்    நாமும்    ஆச்சு
வீட்டோட    கிடக்கோணும்    தெரியுதா -உம்மேல
விருப்பமாக   நானிருப்பேன்   புரியுதா

இன்றோட    குடியை    விட்டேன் -இனி
இரவு பகல்   உழைக்கப்    போறேன்
கன்றும் பசுவும்  போல சேந்து   வாழுவோம் -அந்த
கடவுளுக்கும்   நன்றி சொல்லிப்   பாடுவோம்  

முத்தமிழ் 368

திருமால்   மருகன்    அழகேசன் -அவன்
திருக்குமரன்   என்றிடும்  அருள் நேசன் 
வருவான்    உனைத் தேடி   மயில் மீதில் -நல்ல 
வளமே    பெறலாம்    புவி  மீதில் 

குருவாய்    அமர்ந்தான்    சுவாமிமலை -திரு 
குகனாய்    நின்றான்      திருப்பழனியிலே 
ஒரு நாள்   திருநாள்    அவன் வருநாளே -நீ 
உயர்வே    அடைவாய்    இனிமேலே 

தமிழைக்    காப்பான்    எந்நாளும் -அந்த 
தலைவன்    புகழோ    வெகு  நீளம் 
அமிழ்தாய்    இனிப்பது   அவன் குரலே -நம் 
ஆனைமுகன்    அவனது    உடன்பிறப்பே 

மனதால்   துதித்திட    வருவானே -குற
மாதினைக்   கொண்டான்    துணையாக 
அழகாய்    முருகனும்    தெரிவானே -அவன் 
அடியார்   மனதிலே    உறைவானே 

திருவாய்    சொல்லும்    அவன்பேரை -என்றும் 
திரளுமே     கூட்டம்    செந்தூரில் 
முருகா   வென்று தான்   அலை    மோதும் -நமது 
முத்தமிழ்    காப்பான்    எப்போதும் 

வியாழன், 19 ஏப்ரல், 2018

காவிரி 367

நீரும்     நிலமும்     பொதுவன்றோ -இதனை
நினைத்துப்     பார்ப்பது     சரியன்றோ
தானம்     தந்தவர்    வாழ்கின்றார் -அதனை
தடுத்தவர்     ஒருநாள்     அழிந்திடுவார்

வானம்     தருகின்ற     மழை நீரை -நீவிர்
வாரியே     வழங்குதல்     வேண்டாமா
வீரம் பேசி     உறவு கல்     கெட்டிட -விசம
வேலைகள்     செய்திட     வேண்டாமே

இருப்பது     எல்லாம்     பொதுவுடமை -என்ற
எண்ணம்    வருதல்     நலமன்றோ
கொடுப்பது     என்பது     முடிவானால் -பல
கோடி     உயிர்கள்     வாழுமய்யா

தாகம்     தணிப்பது     உம்கடமை -நீரை
தாவெனக்     கேட்பது     எம்மூரிமை
மேகம்     பொழிந்திட்ட     நீர் தருவீர் -என்றும்
மோச     செயல்தனை     விட்டிடுவீர்

எல்லா     மக்களும்     ஒன்றென்போம் -நாம்
இந்தியர்     என்ரே     நினைந்திடுவோம்
பொல்லாப்    போக்கினை  கைவிட்டு -புதிய
சரித்திரம்     படைத்திட     வந்திடுவீர் 

அன்பு 366

அன்பு   என்றும்    வாழுமே -இது
அகிலம்    சொல்லும்    நீதியே
பண்பு    நெறியில்   வாழ்பவர் -இந்த
பாரில்    தோற்றதும்   இல்லையே

அன்பை   எங்கிலும்   விதைக்கலாம் -அதனால்
ஆயிரம்    நன்மைகள்    விளையுமே
பண்பாய்   பிறரிடம்   பழகுதல் -இங்கு
பலரின்    உயர்வுக்கு    அடிப்படை

அன்பு   சொன்ன   ஏசுவும் -நம்
அருமை   புத்தர்   காந்தியும்
அன்று   சொன்னதை    நினைப்பீரே -நீவிர்
அனைவர்க்கும்   உதவியாய்   திகழ்வீரே

கூடி யே   வாழ்தல்    சிறப்பு தான் -நல்ல
குடும்பம்    நமது    பொறுப்புதான்
தேடியே    செல்வம்   பெருக்கலாம் -இந்திய
தேசம்   உயர்ந்திட   செய்யலாம்

வாழும்    காலம்    யாவிலும் -மண்ணில்
வளமை   பெருகிட    உழைக்கலாம்
சூழும்     பகையை     அழிக்கலாம் -நல்ல
சுதந்திர    மனிதனாய்  வாழலாம்

நாடு   என்பது   ஒன்றுதான் -மனிதர்
நல்வழி    நடப்பது    என்றுதான்
ஏடுகள்    போற்றிட    வாழுவீர் -பிறர்
இதயத்தை    என்றுமே    ஆளுவீர் 

காலம் 365

தன்னைப்   போல   உலகிலே -நல்ல
தர்மம்   காத்து    நிலைக்கவே
பெண்ணைப்    படைத்தார்  இறைவனே -இனியாகிலும்
பெண்களை    போற்றுக   ஆண்களே

வாயை    வைத்துப்    பிழைப்பதும் -வீணில்
வறட்டு    ஜம்பம்    கொள்வதும்
நாயைப்    போலவே    அலைவதும் -இங்கு
நல்லவர்    செய்திடும்     செயலாமோ

மனைவி    தவிர    மற்றதை -நம்
மனதில்    நினைப்பது    தவரன்றோ
குணத்தை    இழந்து    வாழ்வதோ -பல
குடும்பங்கள்   அழிந்து    போவதோ

அன்பு    காட்டு   பிறரிடம் -நீயும்
அள்ளிக்    கொடு   ஏழைக்கு
பண்பு    பெருகியே  வளரனும் -நம்ம
பாரதம்    உயர்ந்து    செழிக்கனும்

பெண்ணை    வைத்துப்    பிழைப்பவர் -பிறரிடம்
பேதம்    பெருக்கி    வாழ்பவர்
கண்கள்    இருந்தும்    குருடரே -அவர்க்கு
காலம்   வழங்குமே    நல்ல தண்டணை 

காந்தி 364

கையைப்    புடிச்சு    இழுக்கிறான் -அவன்
ரொம்ப    கணக்காகவே   நடிக்கிறான்
பையப்    பைய வே    பேசுறான் -அந்த
பாவி     ஏன்தான்   பிறக்கிறான்

பெண்களை    பேசியே    வளைக்கிறான் -அவளை
பின்னப்    படுத்திப்    பாக்கிறான்
கண்களைக்  குத்தியே   ரசிக்கிறான் -அந்த
கயவன்    ஏன்  இன்னும்   இருக்கிறான்

ஊரை   ஏச்சியே   பிழைக்கிறான் -தனது
உறவைத்    தள்ளியே   வைக்கிறான்
பேரைக்    கெடுத்துக்    கொள்கிறான் -மண்ணில்
பித்தன்    போலவே    வாழ்கிறான்

ஆடும்    ஆட்டம்   சரியில்லையே -எனோ
அவனும்    இன்னமும்    திருந்தல்லியே
வீடும்    செல்வமும்    நிலையில்லையே -இந்த
விவரம்   ஒன்றுமே    புரியல்லியே

மனிதனாக    மண்ணில்    வாழ்பவர் -நல்ல
மகான்     போலவே    ஆகலாம்
புனிதர்   காந்தி  யன்று   சொன்னதை -நாம
பொன்னைப்   போலவே    காக்கணும்

கயமை    எண்ணமோ    வளருது -எங்கும்
கற்பழிப்பு     இன்றும்    தொடருது
பயல்க (ள் )திட்டம்     நடக்குது -இறைவா
பார்த்து    நீங்க தான்    முடிக்கணும் 

புதன், 18 ஏப்ரல், 2018

வள்ளல் 363

வாழ்கின்ற    வாழ்க்கையில்
வள்ளலாக     மாறலாம்
சூழ்கின்ற      துயர்களை
தூசெனவே   தள்ளலாம்

பேசுகின்ற     பேச்சினில்
பெருந்தன்மை  காட்டலாம்
வீசுகின்ற     காற்றினில்
விவரம்கூட  அறியலாம்

நீயும் நானும்  ஒன்றென
நினைவிலே  வாழலாம்
நோயுமின்றி  உலகிலே
நூறு வருடம்   வசிக்கலாம்

ஆணும் பெண்ணும்  சரிசமம்
ஆன்றோர்  அன்று சொன்னது
வீணில் பெருமை   பேசுதல்
வெட்டிப்  பேச்சு   அல்லவோ

கண்ணில்    காதலும்
கருத்தில்    மோதலும்
மண்ணிலே  நிச்சயம்
மனதிலே    கொள்ளுவாய்

வீரமின்றி    வாழ்பவர்
வீழ்ந்த மரம்   போன்றவர்
யாருமின்றி    வாழ்வதோ
முடிந்த நன்மை   செய்குவீர் 

கொள்கை 362

நெஞ்சத்தில்    வைத்தே
நினைத்து    மகிழ்வேன்
கொஞ்சும்    தமிழே
குலவி      சிரிப்பேன்

வானப்    பறவைகளே
வார்த்தை    கேளீரோ
மோன    நிலவினுக்கு
முதலில்    என்வணக்கம்

கத்தும்    கடல் அலையே
காலை  தொடும் நுரையே
நித்தம்    அலைவதென்ன
நேரில்    காண்பதென்ன

பாடும்     குயிலினமே
உன் பாடல்    யாருக்கடி
ஓடும்     அருவிகளே
உன்னுள்ளே   இருப்பது யார் ?

கழுத்து    மணியோசை
காற்றில்    வருகுதடி
சிறுத்த    இடையினிலே
சிங்காரம்    தெரியுதடி

ஆடும்   மயிலினமே
ஆசையை     யாரறிவார்
கூடிடும்     கூட்டங்களே
கொள்கையை    விற்றிடவா 

அல்லிக்குளம் 361

அல்லிக்    குளத்தின்  ஓரம் -ஒரு
அழகிய    சோலை    தன்னிலே
புள்ளி    மயில்     வேலன் -வந்தே
புகன்ற    மொழி    நினைவிலில்லையா

கண்களில்   முத்தம்    வைத்தார் =என்
கனியிதழ்   சுத்தம்   செய்தார்
என்னையே   சிலிர்க்க   வைத்தார் -அவர்
இன்னும்   என்னிடம்   வரவில்லையே

கத்தும்   கடல்   நடுவில் -பலமுறை
காதல்    பயணம்   போகையிலே
முத்தம்   நித்தம்   தந்தவர்க்கு -எனோ
மோக     நினைவு   இல்லையோ

தன்னந்    தனியாக   நானும் -காதல்
தாகத்தில்   துடித்துமே  தவிக்கையிலெ
கன்னம்   சிவக்க   வைத்த -எந்தன்
 கந்தனுக்கு    என்ன   வேலையோ

பின்னல்   சடையினை    இழுத்தார் -எனக்கு
பேரின்பம்   கோடி    தந்தார்
அண்ணல்   அவரை    மறவேன் -இன்றே
ஆறுமுகனை   வந்திடச்   சொல்லடி

ஊரும்    உள்ள உறவும்    போச்சே  -தினமும்
உழன்று    தவித்திட     லாச்சே
ஏறு மயில்    வேலன்   என்னை நாடி -கன்னி
என்னிடம்   எப்போ    வருவாரடி  

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

நல்லன 360

தனியே    இருந்தேன்
தமிழாய்   வந்தாய்
கனியே   யென்றேன்
கன்னம்   சிவந்தாய்

துணையாய் கொண்டோம்
சுகமே    கண்டோம்
மணியாய்  பிள்ளைகள்
மகிழ்வே    தந்தனர்

நாளும்   வந்தது
நல்லன  நடந்தது
கோல   குமரனால்
குடும்பம் செழித்தது

தாயை   நினைத்தேன்
தமிழால்   வளர்ந்தேன்
வாய்மை  வழியினில்
வாழ்க்கை  பயணம்

உலகோர்   வருந்திட
ஒருநாள்   நினையேன்
கள்ளம்   வாழ்வில்
கண்டதும்   இல்லை

உலகம்   சிறந்திட
உழைத்திட   வேண்டும்
கலகம்  அழிந்திட
கடவுளே   வேண்டும் 

தமிழ்க்கனி 359

உனையே    மறந்தேன்
உணர்வில்   மிதந்தேன்
இனிமேல்  மறவேன்
எனையாள்  முருகா

தனியே    சென்றாய்
தவமாய்  கனிந்தாய்
கனியால்  அன்றே
கசந்தே    பிரிந்தாய்

வானவர்   படையின்
வல்லமைத்   தலைவன்
மோனப்    பொருளின்
மூர்த்தமாய்  திகழ்பவன்

குறமகள்  வள்ளியின்
குடும்பத்  தலைவன்
மலைவாழ்  உமையின்
மகனாய்   வளர்ந்தவன்

மதுரையில்  தமிழினை
மணம்பெற  வைத்தவன்
கதியென    வந்தவர்
கலக்கம்   தீர்த்தவன்

வாழ்நாள்  முழுவதும்
வந்தனை   செய்வோம்
ஊ ழ் வினை  நீங்கவே
உன்னையே  பணிவோம்  

காமன் கணை 358


கத்தும்   கடல்   அலையோ  -அவனது
கருமை     நிறக்   கூந்தல்
முத்து போல    மோகனப்  பல் வரிசை -நான்
சித்தம்   கலங்கிடவே  சிறந்த  பேரழகன்

நீண்ட    நெடு    உயரம்  -என்றும்
நிமிர்ந்த     சிங்க  நடை
தூண்டில்   போட்டு    இழுத்தான் -அடியே
அவனால்   சுகம்  பெற   வழியு முண்டோ

அள்ளியே   என்னையும்  கட்டி  அணைப்பானோ -இனி
எனது    ஆவியில்   என்றும்   கலப்பானோ
கள்ளியே    நீயும்   சொல்லடி  -அந்தக்
கள்வன்    பெயர்   என்ன   கேளடி

இளமைத்    திமிர்   அடக்கிட  -அவன்
இறைவன்   தந்திட்ட   வரமோ
புலவர்   பாடும்    தமிழில்  -ஒரு
புறாவை  தூது   விடுவோமா

கண்கள்   ஒன்றெனக்   கலந்தது  -உடனே
காமன்   கணையும்  பாய்ந்தது
 பெண்கள்   அவனைக்  கண்டாலோ -தலையில்
பித்தம்   அதிகமாய்    சுரந்தது

சீக்கிரம்   நீயும்   அழைத்து  வாடி -புது
சீதனம்    தருவேன்    நானடி
பாக்கு   வெற்றிலை    மாற்றலாம் -இனிமேல்
பகலிலும்   இரவினைக்   காணலாம்  

திங்கள், 16 ஏப்ரல், 2018

திரு முருகன் 357

இறைவன்   முருகன்   வருவாரா -மனதில்
இந்த ஏழைக்கோர்   இடம்   தருவாரா
கரையில்   மோதும்   அலையானேன் -அவரது
காதலில்   உருகிடும்  மெழுகானேன்

அல்லும்   பகலும்   நினைக்கின்றேன் -அவரை
அடியாள்   மனதில்   தொழுகின்றேன்
கொல்லும்  இரவையும்  வெறுக்கின்றேன் -அந்த
கோல   முகத்தினை  ரசிக்கின்றேன்

மயில் மீதில்   ஏறியே  வருவாரென்றே -என்
மனதில்  ஆசைகள்   வைத்துள்ளேன்
குயிலின்   பாட்டும்   பிடிக்கவில்லை -எனது
குறையை   தீர்த்திட   வருவாரா

உணவும்   எனக்கு    ருசிக்கவில்லை -உள்ள
உறவும்   எனக்கேனோ   இனிக்கவில்லை
கனவில்   வந்திட்ட   திரு முருகன் -எந்தன்
கரங்கள்   பற்றிட   வருவாரா

மயில்கள்   ஆடிடும்   சோலைதனில் -இள
மங்கை   நானும்     இருப்பேனே
உயிரில்    கலந்த   செந்தில்   வேலன் -இன்றே
உகந்த    பதிலினைத்   தருவாரா 

காதல் கிளி 356

அங்கு   மிங்கும்  அலைந்து   திரிந்தேன் -மன
அமைதி   நாடி   நித்தமும்   வெந்தேன்
மங்கை உனையே   வழியினில்   கண்டேன் -அன்றே
மையல்  அதிகம்  நானும்   கொண்டேன்

நிழலைப்  போல நான்  பின்னால்   நடந்தேன் -நீ
நினைவில்   எதனையும்   கொள்ளவில்லை
பழகிட   நினைத்த   என்னை எனோ -தினம்
பார்த்ததும்   ஏன் ஒன்றும்   சொல்லவில்லை

அன்பை தேடியே   அலைந்த   எனக்கு -நீயும் -
அமுதம்   ஊறும்   இடமல்லவா
பண்பு  காட்டியே   பழகிடுவாயே -இந்த
பாவிக்கு   நல்லின்பம்   தந்திடுவாயே

வானம்   வந்தெனை   வழி மறித்தாலும் -இங்கு
வம்பு  தும்புகள்   வளைத்திடும்  போதும்
 கானக   குயிலே  உன்னையும்   பிரியேன் --நீ
கடிந்து  கொண்டால்  என் உயிர்   துறப்பேன்

ஞாலம்   என்பது   உள்ளவரை  -அதில்
நியாயம்   என்றும்   வெல்லும் வரை
காலம்  முழுதும்   உனையே    தொடர்வேன் -எந்தன்
 காதல்  கிளியே   என்றும் நான் மறவேன்

அற்புதம் 355

வெள்ளைத்  தாமரையில்  வீற்றே  இருப்பாய் -நல்ல
வீணை   கூட்டும்   ஒலியில்  தெரிவாய்
கள்ளமற்ற   குழந்தைகள்   வாழ்வில் -தினம்
கல்வியை   யருளும்  கருணைத்  தேவியே

படைக்கும்   பிரமன்   பக்கம்   இருப்பாய் -பண்பில்
மேலோர்    பணிந்துனை   தொழுவார்
விஎடைக்குள்   நிறைந்திடும்   வித்தகி  நீயே -நாங்கள் -
வேண்டி யே   அழைததோம்  விரைந்து   நீ  வா  வா

கொடுத்ததை   திரும்ப நீ     வாங்குவதில்லை -உனது
கோலஉருவம்  என்றைக்கும்   வெள்ளை
எடுத்த வேலை   முடித்திட    வேண்டி  -உன்னை
என்றுமே   தொழுவோம்  எமக்கருள்   செய்வாய்

நாவில்   அமர்ந்தால்   நல்லது   நடக்கும் -இந்த
நானிலம்   சிறந்திட   நன்மையும்  பெருகும்
பாவினில்   உறைந்திடும்   பத்தினி  நீயே -உலகில்
பக்தரைக்   காத்திடும்    உத்தமித்   தாயே

எண்ணிய   யாவையும்   இனிதாய்   நடக்க -வாடும்
ஏழையின்   மனதில்   என்றுமே   நிலைப்பாய்
கண்ணினைப்  போலவே   காவல்   காக்க -என்றும்
கற்றவர்   போற்றிடும்   அற்புதம்    நீயே

திருமகள் 354

திருமகளே  உனையன்றித்   துணை யாரம்மா -உந்தன்
திருவடி   ஒன்றுதான்   கதியே  அம்மா
பெருமாளின்   திரு மார்பில்   உறைபவளே -அழியா
செல்வங்கள்  பல கோடி  தருபவளே 

கடல் நீரின்   நடுவில்   அன்றோ   குடி இருப்பு -இங்கு
கதியற்றோர்    நல  வாழ்வு   உன்பொறுப்பு
உடல் ஆவி   பொருள்  யாவும்   உனதல்லவா -என்றும்
உயர்வாக   நான் வாழ    வழி செய்யம்மா

கண் திறக்க   வரும் கவலை   பறந்தோடுமே --கொடிய
கரு நாகக்   குடைக் கீழே   அமர்ந்தவளே
மண் சிறக்க   மனைதோறும்   வருபவளே -உலகில்
மகாலட்சுமி   எனும் நாமம்   மகத்தானதே

அழகான   திருமாலும்   உனக்கானவர் -நீயோ
அழைத்திடும்   போது வரும்  கணக்கானவள்
நிலம் யாவும்   செழித்தோங்க வரம்  தாருமே -எனது
நினைவெல்லாம்   மலராக்கி   உனைப்  பாடுவேன்

உலகோர் கள்   நலம் வாழ   வழி செய்கவே -உயிர்கள்
உள்ளத்தில்  உண்மை யன்பு  நிறைந்தோங்கவே
கலகங்கள்    போர் மூளும்   நிலைமாறவே -எங்கள்
கஜலட்சுமி   தாயே உந்தன்   அருள் வேண்டினேன்

வல்லபி 353

உற்ற துணை   எனக்கு   நீயல்லவா -நல்
உத்தமியே    சக்தி  இமவான்  திருமகளே
கற்றிட்ட   கலை  உந்தன்  கருணையாலன்றோ -அடியேன்
கவிதையின்   கருவாய்   கனிந்தவள்  அன்றோ

பரமனை   மணந்திட  மாதவம்   செய்தாய் -சிவனார்
பக்தியினாலே   அவரையே   மணந்தாய்
சுரங்களில்   இசையாய்   சூழல் பவள்  நீயே -சிவ
காம சுந்தரி    எங்களின்  சங்கரி தாயே

ஆனைமுகன்   வேலன்   அன்னையுமானாய் -என்றும்
அடியவர்க்  கருள்தரும்   அபயகஸ்தம்   நீயே
மோனப்   பொருள் கூறும்   மூகாம்பிகை  தாயே -கொடிய
மூகாசுரனை   வதைத்திட்ட   மோஹினி   போற்றி

நாவினில்   நீதான்   நர்த்தனம்   ஆடுகிறாய் -இந்த
நானிலம்   நலம் பெற   நாயகி  யருள்வாய்
பாவினில்    உறையும்   பார்வதியே   அம்மா -உனது
பக்தரைக்   காத்திடும்   பரம்பொருள்   தாயே

வல்லமை    திறத்தால்   வளங்கள்   தருக  -உலகில்
வறுமைகள்   நீக்கிடும்   வல்லபியே   அம்மா
தொல்லைகள்   போக்கியே   சுகம் பெற  செய்வாய் -உனது
தூய பாதம்  பற்றித்   தொழுதே  நிற்போம் 

சனி, 14 ஏப்ரல், 2018

வசந்த காலம் 352

வசந்தக்    காலக்    கோலமே -நீல
வானில்    உலவுது    மேகமே
இசைந்த    காதலர்    வாழ்விலே -புதிய
இன்பம்    வந்து    சேருமே

மரங்கள்     பூத்துமே    குலுங்குமே -இங்கு
மந்த    மாருதம்    வீசுமே
குயில்கள்    பாட்டு    பாடுமே -அது
கொள்ளை    இன்பம்    சேர்க்குமே

பறவைகள்    பறந்து     திரியுமே -மனதில்
பருவ    நினைவுகள்    மலருமே
இரவும்    பகலாய்    தெரியுமே -அவை
இணைகள்    தேடி    அலையுமே

நதிகள்    பெருகி    ஓடலாம் -நமக்கு
நாளும்    மழையும்    பொழியலாம்
விதிகள்    ஒரு நாள்    மாறலாம் -தினம்
வெற்றி    மாலை     சூடலாம்

மயில்கள்     ஆட்டம்    காட்டுமே  -இள
மான்கள்    கூட்டம்    மேயுமே
கலைகள்    பெருகி    வளருமே  -அந்த
கடவுள்    அருளும்    கிடைக்குமே

வசந்தம்    வந்து    பேசுதே -வானம்
வர்ண ஜாலம்    தீட்டுதே
உசந்த    நேரம்    வந்ததே -வாழும்
உலகில்    இன்பங்கள்    சூழ்ந்ததே

சித்திரைப் பெண்351

சித்திரைப்  பெண் நீ    நில்லடி -உனக்கு
நல்ல  சேதி    சொல்கிறோம்   கேளடி
முத்திரை   பதித்திட   வருபவளே -உலகில்
மூளும்   பகைதனை   அழிப்பவளே 

மாதம்   மும்மாரி   மழை   பொழிய -இனி
மண்ணகம்   எங்கும்   செழித்திருக்கும்
வேத  நெறி   முறை   நிலைத்திருக்கும் -அதில்
மேம்பட்ட   கலைகள்   வழி  நடத்தும்

ஏறிய   விலை வாசி   குறைந்து  விடும் -நம்
இதயங்கள்   மகிழ்ச்சியில்   நிறைந்துவிடும்
காரியம்    யாவும்   கை  சிறக்கும் -புதிய
கவிதைகள்   எங்கிலும்   பிறப்பெடுக்கும்

தண்ணீர்ப்    பஞ்சமும்   தீர்ந்து  விடும் -அறிவுத்
தாகம்     எங்குமே    தலை யெடுக்கும்
கண்ணீர்   வடித்திட   வழி யில்லாமல் =என்றும்
கடவுள்   நமக்கென்றும்    துணையிருக்கும்

நீரும்    நிலமும்     கொழித்திருக்கும் -இங்கு
நிம்மதி    ஒன்றுதான்    கை கொடுக்கும்
கூறிடும்    செய்திகள்   அனைத்தையும் -இந்த
குவலயம்    பெறுவது    நிச்சயமே

சித்திரைப்     பெண்ணின்   சிறப்பு   சொல்லி -இன்று
சிங்காரப்     பெண்களே   சேர்ந்து    கும்மியடி
இத்தரை    வாழ்ந்திடப்    பிறப்பெடுத்தாள் -அந்த
இன்பத்தில்    நாமும்     மகிழ்ந்திடுவோம்

தமிழ்  வருடப்   பிறப்பு  பற்றிய   சிறப்புப்   பாடல் 14-4-2018;

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

அழகன் 350

அழகா   முருகா   வடிவேலா -அடியேன்
அருகில்  நீயும்   வருவாயா
பதமாய்   இனிப்பாய்  பக்தருக்கே -உனைப்
பணிந்தவர்  வாழ்வார்    சத்தியமே

மலைகள்   தோறும்  குடியிருப்பு -இள
மங்கையர்  இருவர்  உன்பொறுப்பு
கலைகள்  நிறைந்த  எழிலோனே -இன்றே
கருணை  செய்ய  வா  மயிலோனே

பிறவா   வரமது  தர வேண்டும் -உன்
பெருமை  சொல்லி   தொழ  வேண்டும்
மறவா  திருக்கும்  மனம்  வேண்டும் -என்
மனதில்   கோவில்    கொளவேண்டும்

அடியார்  தொழுவார்   பல கோடி -நீயோ
அழைத்திட  வருவாய்  நல்லிடம்  தேடி
படியாய்க்  கிடந்து நான்  உய்வேனோ -உனது
பதமலர்   பற்றியே  மகிழ்வேனோ

கவிதைகள்   பாடிடத்   துணையானாய் -உனது
கருணையில்   நானும்  பாடுகிறேன்
அமிழ்தினும்  இனித்திடும்  அருமருந்தே -என்றும்
அடியவர்   கண்களில்  பெரு விருந்தே

இறவாத  தமிழினைப்  படைத்ததும்  நீ -இங்கு
ஏழை  வீட்டில்  இருப்பதும்  நீ
 மறவேன்  முருகா  உனது  திருப்பெயரை -நானும்
மகிழ்வுடன்   வாழ்ந்திட  ஒரு வரமருளே 

வீரம் 349

பெண்ணின்  பெருமை  இதுதானா -இன்று
உனது  பேச்சும்  செயலும்  சரிதானா
கண்களை  போன்றது   கற்பு நெறி -வீணில்
கடைச்   சரக்காவது  முறை தானா

மானத்  தமிழர்  தம் மரபினிலே -நம்மில்
மங்கையர்  திலகம்   வாழ்ந்ததுண்டு
ஈனப்   பொருளிற்கு  ஆசைப்பட்டு -நீ
இழிவான   செயல் தன்னை  செய்யலாமா

வீரம்   விளைக்கும்   தாய் நாடு -அதில்
வேங்கையாய்  வாழ்வது  பண்பாடு
சோரம்   போகும்  நிலையானால் -நமது
சொரணை  எங்கோ  போய்விடுமே

மொழியைக்  காத்திட  உயிர்  கொடுத்தார் -சிலர்
உயிருக்குப்  பயந்து  ஒளிந்து  கொண்டார்
பழியை  சுமந்தவர்  பலபேர் கள் -அதை
பார்த்தும்  தெளிந்திட  மனமில்லையோ

கூடி வாழ்வது  நன்மை  என்றார் -எனோ
குறுக்கே  வந்து  கோடு  போட்டார்
நாடி வந்தவரை  இன்னுமேன்  நம்பவில்லை -அவர்
நலம் பெற  வழி யொன்றும்  செய்யவில்லை

ஆனவரை ஏட்டிலே  எழுதி  வைத்தார் -அதை
அடுப்பிலே  வைத்தே குளிர்  காய்ந்தார்
மானமுள்ளவர்  வந்திட  வேண்டுமென -ஏழை யர்
மனங்களும்  நாளுமே   விரும்புதம்மா

  

பெண் ---நிலவு 348

நில்லு     நில்லு    நிலவம்மா -இப்போ
நித்தமும்    போவது    எங்கம்மா
சொல்ல    முடிந்தால்    சொல்லிவிடு -நீ
புதிய    சுகம்    எனக்கு   தந்துவிடு    (பெண் )

ஊரை  சுற்றியே    நான்  வருவேன்  -தினம்
புது உறவும்    பலமும்    தான்    தருவேன்
பெயரை   என்றும்    நான்    காத்திடுவேன் -தினம்
பிறர்க்கு    அதிகம்    இன்பங்கள்   தந்திடுவேன்   (நிலவு )

கவிஞர்கள்   பாடல்கள்   உனைப்    பாடும் -பெரும்
காட்டினில்    பறவைகள்    நல் லிசை   கூட்டும்
புவியின்  பெருமைகள்    சுமந்து  வரும்  -என்றும்
புனிதம்   கொண்ட    எங்கள்   திருமகளே    (பெண்)

நிலத்தில்    வாழும்    உயிர்கள்   எல்லாம் -வரும்
நிலவால்   நிஜமாய்   நித்தமும்   மகிழ்கிறது
உழைத்துக்    கலைத்தவர்    உறங்கையிலே -நான்
ஊர் சுற்றிக்    காவல்    செய்திடுவேன் -(நிலவு )

காலம்    வேகமாய்   ஓடியே    போனாலும் -வாழும்
கவிதைகள்   வடிவில்   என்றுமே    நீயிருப்பாய்
கோல    நிலவொளி    காட்டி     மனிதர்கள் -மனம்
குளிர்ந்திடல்   செய்குவாய்    நிலவுத் தாயே (பெண் )

மாமன் மகன் 347

வாடி   தோழி   வண்தமிழ்  செல்வி -நீ
வாடிப்   போனது   ஏனடி
ஓடியே   வந்தது   என்னடி -என்னிடம்
உண்மையை   சரிவர   சொல்லடி -(தலைவி )

தனியே    நின்றேன்    அம்மா  -தனக்கு
தாகம்    என்றான்    சும்மா
கனியே   கரும்பே    என்றான் -எனது
கன்னத்தில்    முத்தமே   தந்தான்  (தோழி )

அறிவுக்குப்   பஞ்சமா    உனக்கு -இங்கு
அயலான்    கடையில்   நீயும்  சரக்கா
எரியும்    நெருப்பாய்   இருப்பாய் -உடனே
எதிர்த்து    பூசைகள்   கொடுப்பாய்   (தலைவி )

என்னதான்    செய்வேன்    நானும் -இதில்
அவன்    எனது    மாமனின்   மகனே
கன்னி   என்மனசோ   வெள்ளை -அவனது
காதல்   எனக்கு தான்    தொல்லை    (தோழி )

மாமன் மகன்  என்றால்   மட்டும்   சரியா -அவன்
மதி  கெட்டு    நடப்பது    முறையா
காமம்  என்பது   மிகவும்   கொடிது -நாளும்
கவனத்தில்    கொள்ளடி    இனிது    (தலைவி )

பெண்ணெனில்   பலருக்கு   எளிது -அவர்க்கு
பெருமைகள்    தருவது    அரிது
கண்களை    போன்றது    கற்பு -இதனை
கவனத்தில்     கொள்ளடி    இனிது     (தலைவி) 

வியாழன், 12 ஏப்ரல், 2018

வெற்றி 346

நிலவின்   மடியில்
நினைவு   மலரும்
உறவின்   பிடியில்
உயிர்கள்  பிறக்கும்

இரவைப்   போக்க
பகலும்    தொடரும்
இணைகள் சேர்ந்தால்
ஒன்று   வளரும்
 
வளர்ச்சி   என்றால்
வாழ்வின்  முயற்சி
தளர்ச்சி  என்றால்
தருவது   தோல்வி

உள்ளம்  என்றால்
உறவுகள்  தொடக்கம்
கள்ளம்  புகுந்தால்
கவலைகள்  வளரும்

எண்ணம்   இனித்தால்
எங்கிலும்   மகிழ்ச்சி
இதயம்   திறந்தால்
எங்கும்   வெற்றி

நன்றி   சொன்னால்
நன்மை   மலரும்
நாளும்   உழைக்க
நாடு    செழிக்கும்



திருச்செந்தூர் வேலன் 345

அலைவாய்க்    கடலின்  கரையோரம் -நல்
அழகிய   செந்தூர்   தலமதிலே
நிலையாய்க்   கொண்ட   திருவருளே -எம்
நெஞ்சம்  நிறைந்திடும்   செந்தில்  வேலோனே

சக்தியின்   மகனெனப்   வளர்ந்தாலும் -அன்று
சரவணப்   பொய்கையில்   மலர்ந்தாயே
பக்தரைக்   காத்திடும்   பரம்பொருளே -உனது
பாதங்கள்   நினைந்தே   வணங்குகிறோம்

இறவாத்   தமிழினை   நீயளித்தாய் -மாந்தரின்
இதயங்கள்   தன்னையும்   சிறையெடுத்தாய்
மறவோம்   உந்தன்   திருநாமம் -உனது
மகிமை   போற்றி   பாடிடுவோம்

சூரன்   அழிந்திடப்    போரிட்டாய் - சிவ
சுப்ர  மன்ய  ரன்ரே   பேரெடுத்தாய்
பேறுகள்   பெற்றிட  செய்வாயே -எங்கள்
பெம்மான்    முருகா   அழகேசா

செந்தூர்   வந்தால்   சுபஜெயமாகும் -வரும்
தீவினை   யாவுமே   பறந்தோடும்
பைந்தமிழ்   உலகினில்   அரசாளும் -அடியேன்
பாடலும்   முருகன் காலடி   மலராகும் 

நிலவுப் பெண்னே 344

நிலவுப்   பெண்னே   நில்லடி -உன் 
நினைவில்   உள்ளவன்   யாரடி 
கலைகள்   முழுவதும்   கற்றவனோ -அவன் 
கனிவாய்   நடந்து   கொள்வானோ 

நீரில்   இருந்து   வந்தானோ -உனக்கு 
நிம்மதி   அதிகம்   தந்தானோ 
ஊரில்   சிறந்த   உத்தமனோ -என்றும் 
உயிரையும்   பரிசாய்த்   தருவானோ 

இரவு   முழுவதும்   சுகிப்பானோ -இல்லை 
எங்கோ   ஓடியே   போவானோ 
உறவைத்   துணையாய்   கொள்வானோ -இந்த 
உலகம்    மெச்சிடவே   செய்வானோ 

தனிமைச   சிறையினில்   வைப்பானோ -நித்தம் 
தழுவியே    இன்பம்   கொடுப்பானோ 
இளமை   மழையினைப்  பொழிவானோ -நமக்கு 
ஏற்றிட்ட   வகையில்   நடப்பானோ 

நிலமை   அறிந்தே   நடப்பானோ  -நல்ல 
நேர்வழி   தன்னிலே   நிலைப்பானோ 
உலவிடும்   காற்றிலே   நுழைந்தானோ -உனது 
உயிரில்  உயிராய்க்   கலந்தானோ 

மஞ்சம்    கலைந்திட   நல் இரவினிலே -காதல் 
மயக்கம்   தீர்த்தவன்   யாரடி 
நெஞ்சம்   திறந்து  நீ  சொல்லடி -எந்தன் 
நிலவுப்   பெண்   கொஞ்சம்   சொல்லடி 

புதன், 11 ஏப்ரல், 2018

ராணி 343

பூமகள்   ராணி
பொங்கிடும்  மேனி
மலர்களில்  வாணி
மயங்கிட    வா நீ

அழகினில்  மயக்கம்
அணைத்திட  தயக்கம்
பழகுதல்   வழக்கம்
பறித்திட  துடிக்கும்

கண்களோ  வண்டு
கனி இதழ்  செண்டு
பெண்களை   கண்டு
பிறழ்ந்தவர்   உண்டு

சோலையில்   மாலை
சுகம் பெறும்  வேலளை
அவளோ   கரும்பு
அன்பிலே  விரும்பு

காதலோ  நெருப்பு
கண்களே  பொறுப்பு
வேதனை  உச்சம்
வெறுப்பே  மிச்சம்

இசையினில்  ஆட்டம்
இயங்குது  கூட்டம்
எதிலோ   நாட்டம்
எதற்கினி  ஓட்டம் 

வேலி 342

வெட்ட  வெளியினில்  போராடி -வரும் 
வியர்வைக்  குளத்தில்  நீராடி 
பட்ட   சுகத்தினை  மறவேனே -என் 
பத்தினி  உன்னை நான்  வெறுப்பேனோ 

அள்ளியே  அணைத்திடும்     எம்மாமனே -உம்மேல் 
ஆசைகள்  அதிகமாய்   வைச்சேனே 
பள்ளியில்  படிச்சது  தெரியாதா --நான் 
பக்கபலம்  உனக்கெனப்   புரியாதா 

ஆசையை  நிறையவே   நானும்  வச்சேன் -உன்னை 
அசத்தவே  எனக்கும்  மீசை  வச்சேன் 
தின்னவே  திகட்டாத  புது தேனல்லவா -நித்தம் 
தேடியே   ஓடிவரும்   வண்டல்லவா 

பொங்கியே  வழியுது   தேனாறு -அதிலே 
புகுந்து   குளிச்சுமே   நீ  பாரு 
சிங்கம்   தானய்யா   நீஎனக்கு -இந்த 
சிறுக்கியும்   போடுவாள்  மனக்கணக்கு 

உடம்பினுள்  உசுரு   உள்ளவரை  -அடி 
உன்மனம்  தானெனது   பள்ளியறை 
கரும்பு  தின்னவே   கூலியாடி -நாளும் 
காவல்   செய்திடும்    வேலியடி 

கடவுள் 341

நல்லவர்    வாழ்ந்திடக்   காலமில்லை -இங்கே
நடக்கிற   நாடகம்   ஒன்றுமே   புரியவில்லை
கொள்ளை   யடித்தவன்   வாழுகிறான் -அதை
குற்றமெனத்  தடுத்தவன்    மாளுகிறான்

பாலினில்   நீரையும்  கலக்கின்றான் -பாழும்
பரத்தையை   உயர்வாய்   மதிக்கின்றான்
வேலியைப்   பிரித்துமே  எரிகின்றான் -வயலில்
விளைஞ்சதை   திருடியே  செல்கின்றான்

பெண்களை  அடிமையாய்   நினைக்கின்றான் -அவர்
பெரும் பொருள்  அனைத்தையும்  பறிக்கின்றான்
கண்களை  விற்று சித்திரம்  வாங்குதல் போல் -நல்ல
கருத்தினை  இழந்து  எங்கோ  திரிகின்றன

அறிஞர்கள்  சொன்னதைக்  கேட்கவில்லை -அவரடி
பற்றி  நடந்திட  என்னவோ  மனமுமில்லை
எரிதழல்  நடுவினில்  சிரிக்கின்றான் -எதற்கு
பூமியில்  இன்னும்   இருக்கின்றான்

சொல்லிக்  கொடுத்தும்  பழனில்லையே -நன்கு
சுகம் பெற   வழியின்னும்  பிறக்கலியே
கள்ளமுள்ள  மனிதர்கள்  திருந்தலியே -அந்த
கடவுள்   மீண்டுமிங்கே  எனோ பிறக்கலியே  

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஆனைமுகன் 340

ஆனை முகனே   எங்கள்  அத்தன்  மகனே -நல்
மோனப்  பொருளே   மூலத் திரு  உருவே
பானை   வயிறும்   பரந்த   மார்பும்  கொண்ட நல்ல
நான் மறை  வணங்கிடும்    நாயகா   வா வா

தாயினைப்  போலவே   தாரம்  வேண்டி -அன்று
ஆற்றங்   கரைதனில்   அழகாய்   அமர்ந்தாய்
நம்பிக்கை   கொண்டு  நாடிடும்  பேர்க்கு -தன
தும்பிக்கை   நீட்டியே   துயர்கள்  களைவாய்

அவ்வை  கிழவிக்கு   அமைந்த  நற்  தோழா -அந்த
அம்மைக்கு   முதுமையை  அளித்திட்ட  சீலா
எலியின்  மீதினில்  ஏறியே யமர்ந்து -வாடும்
ஏழைகள்  ஏற்றம்    தர நீ   வா வா

சக்தியின்   மகனாய்  சாதனை  புரிந்தாய் -மனிதர்
புத்திக்குள்  நீதான்  புதுமைகள்   தந்தாய்
நித்தியம்  உன்னை  நினைப்போர்  தமக்கு -கோரிய
அத்தனை   யாவையும்  அருளிடும்  தேவனே

காதுகள்  பற்றியே   கரணம்  போட்டால் -நீ
காணலாம்   வெற்றியெனக்  கருத்துமே  சொன்னாய்
வேதப்  பொருளே  வரும்  விக்கினம்  தீர்ப்பாய் இங்கே
நாளும்   உனைநான்  நன்றியாய்   நினைப்பேன்  

ஏற்றம் 339

வாடி   பொன்னே   வாயாடி -இன்று
உன்னை   வலைச்சு   போட்டா   என்னாடி (அவன்)

கேடியைப்   போலவே   பேசாதே  -உனது
கெட்ட  புத்தியைக்    காட்டாதே =(அவள் )

ஊரை   அடிச்சுமே   உலை   வைப்பேன் -உன்னை
என் உச்சந் தலையினில்   சிறை   வைப்பேன் (அவன் )

பேரைக்   கெடுக்கப்   பாக்குறயே  -உன்
பெருமையை   யள்ளியே    வீசறாயே  (அவள்) 

பொய்யும்  புரட்டுமே   எனக்காச்சு -நல்ல
புத்தி   என்பதும்    கிடையாது (அவன் )

திருந்தி    வாழ்ந்திடக்   கத்துக்கணும்  நீ
தீயவை   யனைத்தையும்  விட்டுடனும் (அவள்)

திருத்திட   வாடியென்   செல்லப்  புள்ளெ -அதுவே
திரு நாள்   எனக்கென்று   சொல்லு புள்ளெ (அவன்)

இருக்கிற   வேலைகள்   போதாதா -என்னை
இழுக்கிற   வேலையும்   கூடாது  (அவள்)

உனக்கென   மாறுவேன்   உத்தமனாய் -இனி
உன்னடி     தொழுவேன்   சத்தியமாய் (அவன்)

காதல்   என்பது   மாற்றம்  தரும் -அதில்
கலந்தவர்   வாழ்க்கை யில்   ஏற்றம்   வரும்  (இருவரும் )






திங்கள், 9 ஏப்ரல், 2018

விருந்து 338

ஒருநாள்  இரவில்   தனியாக -எதிரில்
ஒருத்தி   வந்தாள்   அழகாக
பல நாள்   பார்த்திட்ட   ஓர்நினைவு =இனி
பரவசம்   தருமோ   அவள் உறவு

கணைகள்   வீசியே   கொல்வாளோ -இல்லை
காதல்   பேசிஎன்னை   வெல்வாளோ
இணையாய்   துணையாய்   வருவாளோ -தனது
இளமையை   பரிசாய்த்   தருவாளோ

பிறவி கள்   தோறும்   தொடர்வாளோ -நாளும்
பின்னிப்   பிணைந்து   செல்வாளோ
உறவின்   பயனை  நான்   அடைவேனோ -என்னிடம்
உயிருக்   குயிராய்   அவள்   இருப்பாளோ

காதல்   கலைகள்  மிக அறிவாளோ -தினம்
கட்டிலில்   புதுக் கதைகள்   படிப்பாளோ
மோகன   வலைதனை   விரிப்பாளோ -வீணாய்
மோதும்   போக்கினை   உடையவளோ

உறவில்   ரசித்திட   அழகாய்   நடப்பாளோ -அவள்
ஒவ்வொரு   கணமும்   துடிப்பாளோ
பறவை   போலவே   பறப்பாளோ -எனது
பசிக்கு    விருந்தாய்    கிடைப்பாளோ 

முருகன் 337

நாளை  நடப்பதை  யார்  அறிவார் -அந்த
நாயகன்   தானே   அதை  அறிவார்
வேளை   வருமென்று  நீ காத்து இரு -கிடைத்த
வேலையை  நலமாய்   முடித்து விடு

குன்றுகள்  தோறும்   குகன்  ஆட்சி -அவன்
கோவை  இதழ்கள்   அழகிய  பொருட்காட்சி
மன்றம்  அவர்  தரும்  மணமாகும் -ஏழை யின்
மனங்களே   விரும்புகிற   இடமாகும்

முருகன்  வருவார்  மயில்  மீதில் -குற
வள்ளி  தேவ யானை  துணையோடு
திரு நாள்  அதுவே   நமக்காகும் -அவரது
திருப்புகழ்  பதிகம்  தனைப்  பாடு

திருமால்  மருகன்   அழகேசன் -திரு
செந்தூர்   உறையும்  முருகேசன்
பெறுவாய்  நல்லவோர்  எதிர் காலம் -அந்த
பெம்மான்   பழனியில்   த்வக் கோலம்

தனியாய்  முருகன்  நின்றாலும் -உலகில்
நம் தமிழைக்   காப்பான்  எந்நாளும்
இனியும்   ஒரு கணம்   தவறாதே -தமிழ்
இறைவன்   முருகனை நீ  மறவாதே  

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

விழி வாசல் 336

இரு விழி  வாசல்   வழியாக -உனது
இதயத்தில்  நுழைந்தேன்  எளிதாக
கரு விழி  தன்னில்  குடி  புகுந்தேன் -எனது
காதலை  வாடகையெனக்  கொடுத்தேன்

வில்லினைப்    போன்றது  உன்புருவம் -நீயோ
விளைந்து  கனிந்திட்ட   எழிற் பருவம்
கல்லால்  வடித்திட்ட  சிலையோடி -உன்னை
கண்டவர்  வாங்கிடா  விலையோடி

கண்களால்  உலகினை  வளைக்கின்றாய் -யாரும்
கண்டாலோ  சித்தத்தை  குலைக்கின்றாய்
எண்ணவோ  இனிப்பாய்  இருக்கின்றாய் -தினம்
எவ்வளவோ  பேர்களை  வதைக்கின்றாய்

உன் பெற்றோர்  செய்தது    பெருங்கொடுமை -நீ
பெண்ணாகப்  பிறந்ததோ  பெருந்தவறு
என்னால்   சொல்லிட  முடியல்லியே -ஒருமுறை
இணைந்து  வாழ்ந்திட  வழி இல்லையே

பித்தம்  பிடித்து  நானும்   அலையாமல் -உனது
பெருமையை  சொல்லியே  வாழ்வேனே
சத்தியம்  இதுதான்  உண்மையென -தேவி
சற்றே   நினைத்திடில்  போதுமடி

மெழுகாய்   உருகி  நான்  கரைந்தாலும் -உன்
மேலுள்ள  ஆசையை  நான் மறவேனே
பழுதில்லா   எந்தன்   காதலினை -தூய
பாதத்தில்   வைத்தே தினம்  போற்றிடுவேன் 

தெய்வத் தமிழ் 335

செந்தமிழ்  நாட்டுச்  செல்வங்களே - நான்
சிறப்பென  சொல்வதைக்  கேளுங்களேன்
நம் தமிழ்  மொழியென்றும்  பெரியதெனும் -நல்ல
உண்மையை  நன்மையை  உணர்வீரே

ஆயிரம்  கோடி  பேர்   பேசிடினும் -நம்
அன்னை த்  தமிழுக்  கீடாமோ
பாயிரம்  ஈர்க்கும்  மொழித்  திறமன்றோ -என்றும்
பல்லுழி  காலங்கள்  நிலைத்திருக்கும்

தீயினால்  வெந்தும்    மடியாது -பல
திருடர்கள்  திருடியும்  குறையாது
வாயினில்  பேசிட ன்  மணந்திடுமே -நாம்
வளம் பெற  நாள் வழியினைக்   காட்டிடுமே

எத்தனை  மன்னர்கள்  படை யெடுத்தார் -நமது
எல்லாச்  செல்வங்கள்  சூறை யிட்டார்
சத்திய  தமிழ் செல்வம்  வாழுதம்மா -அதன்
சாதனை  உலகினை  ஆளுதம்மா

இயற்கை   சீற்றத்தில்   அழியாமல்  -உள்ள
இளமை   என்றுமே  குறையாமல்
கற்பவர்  தொகையோ    பெரிதாகி -தெய்வ
கன்னியாய்   வாழ்கிறாள்  உயிராக

சனி, 7 ஏப்ரல், 2018

அன்னை 334

அம்மா  என்று  நாம்   அழைக்கயிலே -புதிய
ஆனந்தம்  பொங்கி  வழியுமம்மா
சும்மா  கிடந்த்திட்ட  மனதினிலே -நல்ல
சுகமும்   பலமும்   கூடுதம்மா

உதிரம்   தன்னையே   பாலாக்கி  -தினம்
உயிரை    வளர்த்தவள்   தாயல்லவா
புதிர்கள்   நிறைந்திட்ட  இந்தப்  பூமியிலே -நமக்கு
பொறுமை   அன்பு  உரைத்தவளே

ஊட்டி    நம்மையும்  வார்த்தாளே -தன
உயிரையும்   நமக்கெனத்  தருவாளே
கேட்டிட்ட  நீதிகள்   மறந்தோமே -வீணாய்
கேடு மதியாலே  எதற்கோ  அலைந்தோமே

தனக்கென  என்றைக்கும்  வாழாமல் -வெறும்
தலைக்கனம்   கொண்டே    ஆடாமல்
பிறர்க்கென   வாழ்தல்   பெருமையன்றோ -இதனை
பேணியே   காப்பதும்  நம் கடமையன்றோ

உலகம்  என்பது   இங்கு  உள்ளவரை -அதில்
உயிர்கள்   வாழ்வது   என்னும் வரை
நன்றி   நிறைந்திட   நாம்  இருப்போம் -ஒவ்வொரு
நாளுமே    நம் தாய்தனை  வணங்கிடுவோம் 

பொன்மலை 333

மீனே  மீனே   மீனம்மா -உனது
மேனி   மணக்குது  என்னம்மா 
தானே  வந்தால்   சரியம்மா -இனி 
தழுவிக்  கொண்டால்  என்னம்மா 

போய்யா  போய்யா  தெரியாதா -உன் 
பொழப்பு  என்னன்னு  புரியாதா 
காரியம்  ஆகவே   கால்   பிடிப்பாய் -பின் 
கழுத்தை  அறுத்திட   நீ துடிப்பாய் 

தப்பாக   எதுவும்   நினைக்காதே -உன்னை 
தாரம்   கொள்வேன்   மறுக்காதே 
அப்பாவி  என்பதும்  நான்  தானே -நாளும் 
அடங்கி   கிடப்பேன்  பொன்மானே 

எல்லாப்  பெண்ணையும்  ஏமாற்றி  -நீ 
இருப்பாய்  பல நாள்  உன்னை மாற்றி 
கல்லால்  அடித்தால்  போதாது -உன்னை 
கழுவினில்  ஏற்றிட  வேண்டாமா 
கண்ணுக்கு  கண்ணாய்  நீ   இருப்பாய் -உன் 
காலடி   பொன்மலை   நான் குவிப்பேன் 
இன்னும்  சொல்வது   புரியலையா -நான் 
ஏங்கித்  தவிப்பது   தெரியலையா 

பொன்னும்  பொருளும்   யார்  கேட்டார் -உன் 
பொறுக்கும்  புத்தியை   விட்டு விடு 
என் கண்ணில்  படாமல்  ஒளிந்துவிடு -என் 
காலணி   பேசும்  ஓடிவிடு