சொல்லால் அடித்து சுகமாய் வறுத்தேன் --நீயோ
சுணக்கம் எதுவும் கொள்ளவில்லை
கல்லாலடி படும் கனியும் ஆனாய் --எனக்கு
காலம் தந்திட்ட துணையுமானாய் (சொல்லால் )
உள்ள சொந்தம் எல்லாம் நீ தந்தது --என்
உறவை மட்டுமே நான் தந்தேன்
கள்ளமில்லா வெள்ளை மனம் --எவரையும்
கடிந்து கொள்ளாத நல்ல மனம் (சொல்லால்)
பிள்ளைப் பாசம் நிறைய உண்டு --அவர்
பேசிடும் வார்த்தைகள் கற்கண்டு
கொள்ளை இன்பம் கொடுத்தவளே --எனக்கு
குறைகள் வந்திடாமல் தடுத்தவளே (சொல்லால்)
நினைவு என்பது உள்ளவரை --இங்கு
நித்தமும் நீதான் பள்ளியறை
தொடர்ந்து வந்த துன்பத்தினை -ஒரு
தூசெனத் தள்ளியே ஜெயித்தவளே (சொல்லால்)
மக்கள் போற்றிடும் தாயானாய் --எந்தன்
மனதில் வாழும் திறமானாய்
எட்டுத் திக்கும் உன்புகழ் முழங்குதம்மா --உன்னால்
என்குலம் மண்ணிலே விளங்குதம்மா (சொல்லால்)
குங்குமம் நிலைத்திடும் வரம் வேண்டும் --எங்கள்
குருவாயி அருளும் துணை வேண்டும்
எங்கும் அன்பு நிலை வர வேண்டும் --இங்கே
ஏழைகள் நல்வாழ்வு பெற வேண்டும் (சொல்லால்)
சுணக்கம் எதுவும் கொள்ளவில்லை
கல்லாலடி படும் கனியும் ஆனாய் --எனக்கு
காலம் தந்திட்ட துணையுமானாய் (சொல்லால் )
உள்ள சொந்தம் எல்லாம் நீ தந்தது --என்
உறவை மட்டுமே நான் தந்தேன்
கள்ளமில்லா வெள்ளை மனம் --எவரையும்
கடிந்து கொள்ளாத நல்ல மனம் (சொல்லால்)
பிள்ளைப் பாசம் நிறைய உண்டு --அவர்
பேசிடும் வார்த்தைகள் கற்கண்டு
கொள்ளை இன்பம் கொடுத்தவளே --எனக்கு
குறைகள் வந்திடாமல் தடுத்தவளே (சொல்லால்)
நினைவு என்பது உள்ளவரை --இங்கு
நித்தமும் நீதான் பள்ளியறை
தொடர்ந்து வந்த துன்பத்தினை -ஒரு
தூசெனத் தள்ளியே ஜெயித்தவளே (சொல்லால்)
மக்கள் போற்றிடும் தாயானாய் --எந்தன்
மனதில் வாழும் திறமானாய்
எட்டுத் திக்கும் உன்புகழ் முழங்குதம்மா --உன்னால்
என்குலம் மண்ணிலே விளங்குதம்மா (சொல்லால்)
குங்குமம் நிலைத்திடும் வரம் வேண்டும் --எங்கள்
குருவாயி அருளும் துணை வேண்டும்
எங்கும் அன்பு நிலை வர வேண்டும் --இங்கே
ஏழைகள் நல்வாழ்வு பெற வேண்டும் (சொல்லால்)