எனையாளும் பெருமாளே நீதானய்யா -உன்னை
எந்நாளும் துதிக்கின்ற உயிர் தானையா
நினைவோடு வாழ்கின்ற இப்பூமியில் -என்றும்
நினையன்றி யாருண்டு எப்போதுமே (எனையாளும் )
மலர்களும் தோட்டத்தில் மலர்ந்தாடுது -உனது
மலர்ப்பதம் வேண்டியன்றோ விழுந்தோடுது
கலையாவும் உன்னிடமே குடிகொண்டது -நீ
கதியென்று வருவார்க்கு நற்பலன் கூடுது (என்னையாளும் )
சிலையான கல்கூட ஜீவன் பெற்றது -நீ
சிரித்தாலே முத்துக்கள் சிறப்பானது
நிலையாக நின்றாயே மலைமீதிலே - உனை
நெஞ்சார நினைத்தாலே சுகமானது (என்னையாளும் )
அலைமேவும் கடல்மீதில் குடியேறினாய் -உனது
அடியார்கள் துயர்நீக்க விரைவாகினாய்
பிழையேதும் செய்தேனோ பொறுப்பாய் ஐயா -இனி
பின்னாளில் உன்பாதம் கிடப்பேன் ஐயா (என்னையாளும் )
மதுராவை அரசாளும் மகராசனே -எல்லா
மனங்களை ஆள்கின்ற எழில் வாசனே
வினைதீர்க்க வந்த எங்கள் வேங்கடேசனே -நீ
விரைந்தோடி வருவாயே இப்புவி காக்கவே (எனையாளும் )
எந்நாளும் துதிக்கின்ற உயிர் தானையா
நினைவோடு வாழ்கின்ற இப்பூமியில் -என்றும்
நினையன்றி யாருண்டு எப்போதுமே (எனையாளும் )
மலர்களும் தோட்டத்தில் மலர்ந்தாடுது -உனது
மலர்ப்பதம் வேண்டியன்றோ விழுந்தோடுது
கலையாவும் உன்னிடமே குடிகொண்டது -நீ
கதியென்று வருவார்க்கு நற்பலன் கூடுது (என்னையாளும் )
சிலையான கல்கூட ஜீவன் பெற்றது -நீ
சிரித்தாலே முத்துக்கள் சிறப்பானது
நிலையாக நின்றாயே மலைமீதிலே - உனை
நெஞ்சார நினைத்தாலே சுகமானது (என்னையாளும் )
அலைமேவும் கடல்மீதில் குடியேறினாய் -உனது
அடியார்கள் துயர்நீக்க விரைவாகினாய்
பிழையேதும் செய்தேனோ பொறுப்பாய் ஐயா -இனி
பின்னாளில் உன்பாதம் கிடப்பேன் ஐயா (என்னையாளும் )
மதுராவை அரசாளும் மகராசனே -எல்லா
மனங்களை ஆள்கின்ற எழில் வாசனே
வினைதீர்க்க வந்த எங்கள் வேங்கடேசனே -நீ
விரைந்தோடி வருவாயே இப்புவி காக்கவே (எனையாளும் )