வாயுவின் புத்திரர் -நல
வளர்களைத் தூயவர்
பாயும் புலியவர் -தம்
பக்தரைக் காப்பவர்
இராமனின் சேவகர் -அன்று
இலன்கைக்குச் சென்றவர்
சீதைக்கும் தூதுவர் -உலகில்
சிரஞ்சீவி ஆனவர்
அனுமனெனும் பேரிலே -இந்த
அவனியில் ஆள்பவர்
அனுதினம் தொழுபவர் -தம்
அவதியைத் தீர்ப்பவர்
இராவணன் செருக்கினை -நேரில்
எதிர்த்துமே வென்றவர்
இலங்கையை தீயினால் -முற்றும்
எரித்துமே மகிழ்ந்தவர்
ராமநாமம் சொல்லுமிடத்திலே -அங்கு
அனுமன்வருகை ஆவது நிச்சயம்
வீரமளிப்பவர் வெற்றிதருபவர் -காணில்
யாருண்டுலகில் அனுமனைப் போலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக