செவ்வாய், 29 அக்டோபர், 2013

வாயுபுத்திரர் -200 .

வாயுவின்  புத்திரர்  -நல 
 வளர்களைத்  தூயவர் 
 பாயும்   புலியவர் -தம் 
 பக்தரைக்  காப்பவர் 
 
 இராமனின்  சேவகர் -அன்று 
 இலன்கைக்குச்  சென்றவர் 
 சீதைக்கும்  தூதுவர்  -உலகில் 
 சிரஞ்சீவி   ஆனவர் 
 
 அனுமனெனும்   பேரிலே -இந்த 
 அவனியில்     ஆள்பவர் 
 அனுதினம்  தொழுபவர் -தம் 
 அவதியைத்  தீர்ப்பவர் 
 
 இராவணன்  செருக்கினை -நேரில் 
 எதிர்த்துமே  வென்றவர் 
 இலங்கையை  தீயினால் -முற்றும் 
 எரித்துமே  மகிழ்ந்தவர் 
 
 ராமநாமம்  சொல்லுமிடத்திலே -அங்கு 
 அனுமன்வருகை  ஆவது நிச்சயம் 
 வீரமளிப்பவர்  வெற்றிதருபவர் -காணில் 
 யாருண்டுலகில்  அனுமனைப் போலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக