செவ்வாய், 22 அக்டோபர், 2013

kudip pazhakkam -188.

தில்லாலங்கடி  தில்லாலங்கடி
 தில்லாலங்கடியோ  அடி  தில்லாலங்கடியோ
 இரவு எது  பகலும் எது  எனக்குப்  புரியலே -நான்
 இரண்டு  நாளா  குடிச்சும்கூட  இன்னும் ஏறலே

 அவள் :
 கண்ணை  மூடி  சும்மாநீ  கிடந்து  தூங்கணும் --நீ
 காசு  வந்தா  பத்திரமா  சேத்து  வைக்கணும்
 பொண்ணை  ஏன்னா  கேவலமா  நீயும்  நினைக்கிறே -நான்
 போட்டேன்னா  பொழைக்க மாட்டே  புரிந்து  நடந்துக்கோ

 அவன் :
 என்காசில்  குடிக்கிறேன்  என்னடி நீ  மிரட்டுறே -கொஞ்சம்
 ஒழுங்கா  இருந்தா  உதை  விழாது  தெரிஞ்சுக்கோ
 தலையும்  உடம்பும்  சும்மா  தானே  ஆடும் -அப்போ
 தாளம்  கூடவே சேர்ந்து  தப்பாய்   போகும்
 அவள்:
 குடிச்சுக் குடிச்சு உனக்குத்தானே  குடலும்  வெந்தது -நம்ம
 குடும்பம்  போற  போக்கிலே என்குலையும்  நடுங்குது
 எடுத்து எடுத்து  குடிச்ச்சதாலே   எலுமபும்  தெர்யுது -நா
 எவ்வளவோ சொன்னபோதும்  எங்கே  ஏறுது
 அவன் :
 எனக்கு ஏறும் போதை கூட உனக்கெங்கே  விளங்குது -என்
 இளவயசில் வந்த  பழக்கம்  விட்டு  எங்கே  போகுது
 கணக்கில்லாமே  குடிச்ச்சதாலே  நமக்கு  கடனும்  ஆனது -என்
 கண்ணாட்டி  உன்னைநினைச்சா எனக்கு கண்ணும்  கலங்குது
 அவள்:
 நமக்குப்  பிள்ளை குட்டி  அதிகம்  ஆச்சு -நமக்கு
 இங்கே  பெரிய  குடும்பம்  ஆகிப்  போச்சு
 நா சொல்லுறதை  கவனமா நீ  காதில்  வாங்கிக்கோ -நமது
 குடியைக்  கெடுக்கும் குடியை மறந்து திருந்தப் பார்த்துக்கோ
 அவன்:
 மனைவிசொன்ன  மந்திரமும்  என்மனசில் பட்டது -நான்
 மாபாவி என்னால் தானே நம்ம  மதிப்பு  கேட்டது
 இனியுமிந்த குடிபழக்கம் நானும் மறந்து  வாழுவேன் -நல்ல
 இந்தியனாய்  உலகினிலே இனியென்றும்  விளங்குவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக