புதன், 23 அக்டோபர், 2013

இயற்கை

அழகிய  புது  மலர்  ஒன்று -ஏனோ 
 ஆசையில்  துடித்த்து  அன்று 
 பழகிட  வேண்டும்  என்று -அது 
 பாசத்தி ல்  நினைப்பது நன்று 
 
 நிலவினில்  அழகுகள்  தெரியும் -அதனை 
 நினைத்திட  ஆசைகள்  விரியும் 
 களவுக்கு  ஏதம்மா  எல்லை -மனிதர் 
 காதலும்  மனதிற்கு  தொல்லை 
 
 மலரினை  வண்டுகள்  நாடும் -அதில் 
 மதுவினைத்  தேடியே  பாடும் 
 களவுகள்  இரவிலே  நடக்கும் -ஓடும் 
 காலங்கள்   இதனையும்  கடக்கும் 
 
 சில்லென  வீசிடும்  காற்று -தானும் 
 சிரித்து  ஆடுதுபார்  நாற்று 
 நில்லெனச்  சொன்னேன்  நேற்று -சற்றே 
 நிற்குமோ  என்னிடம்  காற்று 
 
 உண்டவர்  கொஞ்சம்  அயர்வார் -நாளும் 
 உழைத்தவர்  ஒருநாள்  உயர்வார் 
 கண்டது  கேட்பது   உலகம் -நீ 
 கவனத்தை  இழந்தால்  கலகம் 
 
 இருத்ததை  நடப்பதைச்  சொல்வேன் -என்றும் 
 இயற்கை   ரசிப்பினைக்  கொள்வேன் 
 விருந்தெனக்  கண்களில்  காட்சி -நம்மை 
 விட்டுவிலகுமோ  இறைவனின்   ஆட்சி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக