அழகிய புது மலர் ஒன்று -ஏனோ
ஆசையில் துடித்த்து அன்று
பழகிட வேண்டும் என்று -அது
பாசத்தி ல் நினைப்பது நன்று
நிலவினில் அழகுகள் தெரியும் -அதனை
நினைத்திட ஆசைகள் விரியும்
களவுக்கு ஏதம்மா எல்லை -மனிதர்
காதலும் மனதிற்கு தொல்லை
மலரினை வண்டுகள் நாடும் -அதில்
மதுவினைத் தேடியே பாடும்
களவுகள் இரவிலே நடக்கும் -ஓடும்
காலங்கள் இதனையும் கடக்கும்
சில்லென வீசிடும் காற்று -தானும்
சிரித்து ஆடுதுபார் நாற்று
நில்லெனச் சொன்னேன் நேற்று -சற்றே
நிற்குமோ என்னிடம் காற்று
உண்டவர் கொஞ்சம் அயர்வார் -நாளும்
உழைத்தவர் ஒருநாள் உயர்வார்
கண்டது கேட்பது உலகம் -நீ
கவனத்தை இழந்தால் கலகம்
இருத்ததை நடப்பதைச் சொல்வேன் -என்றும்
இயற்கை ரசிப்பினைக் கொள்வேன்
விருந்தெனக் கண்களில் காட்சி -நம்மை
விட்டுவிலகுமோ இறைவனின் ஆட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக