செவ்வாய், 22 அக்டோபர், 2013

muthukkal-190.

அற்புத  அழகினைக்  கண்டேன் -அவள்
 அழகினை  அள்ளியே  உண்டேன்
 கற்பனை  செய்திடில்  காவியம் -நல்ல
 கலைஞன்  கைவண்ண  ஓவியம்

 காமனின்  துணைவி  ரதியாகும் -உன்னைக்
 காண்பவர்  தோற்பது  விதியாகும்
 நாலடி  நடந்திட  நாடகமாம் -அந்த
 நங்கை  உடலோ   பொன்  ஆடகமாம்

 விழிகள்  சுலன்றிடப்  பொர்க்களமே -எனது
 வெற்றி  உன்னிடம்  அடைக்கலமே
 இனியும்  ஏனடி  தாமதம் -நீ
 எது செய்தாலும்  எனக்கினி  சம்மதம்

 இருப்பதை  உனக்கே  தருகிறேன் -இனி
 எழிலே  அருகிலே  வருகிறேன்
 பொறுப்பினை  உணர்ந்து  முடிவெடுப்பாய் -எனது
 பொறுமையை   மதித்து  பிடிகொடுப்பாய்

 வாழ்ந்தால்  உன்னுடன்  வாழ்ந்திடுவேன் -நீ
 வரவில்லை  என்றால்  மாய்ந்திடுவேன்
 தாழ்வும்  வாழ்வும்  உன்மடியில் -அடி
 தங்கமே  நானுனது  கைப்பிடியில்

 இத்தனை சொன்னது  போதாதோ -என்
 இருவிழி  அழுவது  தெரியாதோ
 சித்திரை  மாதத்தின்  முழு நிலவே -நீ
 சிரித்தால்  உதிர்வது  நல்முத்துக்களே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக