ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கதிகாமன் -196.

                              பல்லவி

வடிவேலன்  வருவாரோடி -சகியே
 வள்ளலை  நினைத்து  வணங்கினால்   (வடிவேலன்)

                       அநுபல்லவி :

 படியேறி   வருவோர்க்கு  விருந்தானவன் -பிறர்
 பாவங்கள்   தீர்க்கின்ற  மருந்தானவன்  (வடிவேலன் }

                        சரணங்கள்

  1. கனிக்காக   சினம்கொண்டு  மலையேறினார் -தமிழ்க்
 கனியாக  உருமாறி  நமை  யாள்கிறார்
 இனிதாக   குருநாதன்  புகழ்  பாடலாம் -நமது
 இதயத்தில்   குடியேற  அவர்   நாடலாம்   (வடிவேலன்)

 2.அசுரர் படை  அழிக்கவந்த  அமரேசனே -அவர்
 அடியாரைக்   காத்து நிற்கும்  குமரேசனே
 சிவனாரை  மகிழ்விக்கும்  சிவநேசனே -நீதி
 சிறப்பாக  காக்கின்ற  விசுவாசனே

 3.மலைதொறும்  குடியேறும்  மணவாளனே -நம்
 மனவாசை    தீர்க்கின்ற   மதிரூபனே
 கலையாவும்   குடிகொண்ட  கந்தவேலனே -என்றும்
 கருணைக்குப்  பெயர்பெற்ற  கதிர்காமனே (வடிவேலன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக