பல்லவி
வடிவேலன் வருவாரோடி -சகியே
வள்ளலை நினைத்து வணங்கினால் (வடிவேலன்)
அநுபல்லவி :
படியேறி வருவோர்க்கு விருந்தானவன் -பிறர்
பாவங்கள் தீர்க்கின்ற மருந்தானவன் (வடிவேலன் }
சரணங்கள்
1. கனிக்காக சினம்கொண்டு மலையேறினார் -தமிழ்க்
கனியாக உருமாறி நமை யாள்கிறார்
இனிதாக குருநாதன் புகழ் பாடலாம் -நமது
இதயத்தில் குடியேற அவர் நாடலாம் (வடிவேலன்)
2.அசுரர் படை அழிக்கவந்த அமரேசனே -அவர்
அடியாரைக் காத்து நிற்கும் குமரேசனே
சிவனாரை மகிழ்விக்கும் சிவநேசனே -நீதி
சிறப்பாக காக்கின்ற விசுவாசனே
3.மலைதொறும் குடியேறும் மணவாளனே -நம்
மனவாசை தீர்க்கின்ற மதிரூபனே
கலையாவும் குடிகொண்ட கந்தவேலனே -என்றும்
கருணைக்குப் பெயர்பெற்ற கதிர்காமனே (வடிவேலன் )
வடிவேலன் வருவாரோடி -சகியே
வள்ளலை நினைத்து வணங்கினால் (வடிவேலன்)
அநுபல்லவி :
படியேறி வருவோர்க்கு விருந்தானவன் -பிறர்
பாவங்கள் தீர்க்கின்ற மருந்தானவன் (வடிவேலன் }
சரணங்கள்
1. கனிக்காக சினம்கொண்டு மலையேறினார் -தமிழ்க்
கனியாக உருமாறி நமை யாள்கிறார்
இனிதாக குருநாதன் புகழ் பாடலாம் -நமது
இதயத்தில் குடியேற அவர் நாடலாம் (வடிவேலன்)
2.அசுரர் படை அழிக்கவந்த அமரேசனே -அவர்
அடியாரைக் காத்து நிற்கும் குமரேசனே
சிவனாரை மகிழ்விக்கும் சிவநேசனே -நீதி
சிறப்பாக காக்கின்ற விசுவாசனே
3.மலைதொறும் குடியேறும் மணவாளனே -நம்
மனவாசை தீர்க்கின்ற மதிரூபனே
கலையாவும் குடிகொண்ட கந்தவேலனே -என்றும்
கருணைக்குப் பெயர்பெற்ற கதிர்காமனே (வடிவேலன் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக