திங்கள், 21 அக்டோபர், 2013

ragasiyam-182.

வானில்  பறக்கும்
 வண்ணத்துப்  பூசிகளே
 வீணில  அலையும்
 விவரம்  சொல்வீரோ

 சிட்டெனப்  பறக்கும்
 சிட்டுக் குருவிகளே
 விட்டதை  தேடியே
 விரைவாகச்  செல்வீரோ

 சுற்றிச்  சுழலும்
 சூறாவளிக்  காற்றே
 பற்றுகளை  அழிக்கும்
 பாதகத்தை விடுவீரோ

 ஆர்த்து  எழுகின்ற
 அழகுக்  கடலலையே
 ஈர்த்து  இழுக்கின்ற
 இரகசியம்  சொல்வீரோ

 மொட்டு அவிழ்ந்த
 முல்லை  மலரினமே
 தொட்டு  ரசித்திட
 துணைக்கு  வருவீரோ

 வானப் பெருவெளியில்
 வலம்வரும்  வெள்ளிநிலா
 கானகத்துக்  குரலோசை
 கவர்ந்து  இழுத்திடுமோ

 சுண்டி  இழுக்கின்ற
 சுடர்விடும்  நட்சத்திரம்
 கண்டு  சிரித்திட்ட
 காரணம்  சொல்லிடுமா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக