செவ்வாய், 22 அக்டோபர், 2013

kudumbam-189.

கனியிதழ்  ஊறுது  கற்கண்டோ -உனைக்
 கலந்திட  அமுதினில்  ருசிஉண்டோ
 இருவிழி  வாசலில்  வரவேண்டும் -அதற்கு
 இணையென  நானென்ன  தரவேண்டும்

 முனிவரும்  மயங்கிடும்  முன்னழகு -என்
 முப்படை  தோற்றிடும் பின்னழகு
 இனியிவள்  ஒன்றே  பேரழகு -உன்
 இதயத்தில்  கனிவுடன்  நீபழ்கு

 வேல்முனை  மழுங்கிடும்  உன்விழிகளிலே -நான்
 விரகத்தில்  துடிப்பது  என்விதியே
 பால்மணம்  மாறிடாப்  பதுமையடி -உன்னைப்
 பார்ப்பது  எனக்கென்றும்  புதுமையடி

 நாளென்ன  பொழுதென்ன  நம்மிடையே -இனி
 நலம்பெற  வாழ்தல்  வெளிப்படையே
 நால்வகைக்  குணமுள்ள  நங்கையடி -என்னை
 நாயகன்  ஆக்கிடும்  புனித கங்கையாடி

 வானத்தில்  ஜோடியாய்  வலம்வருவோம் -நம்
 வாழ்வினில்  வசந்தத்தை  ரசித்திடுவோம்
 மானத்தை   பெரிதென  மதித்திடுவோம் -இந்த
 மண்ணிலே  சொர்க்கத்தை  படைத்திடுவோம்

 ஈருடல்   ஒருவராய்  வாழ்ந்திடுவோம் -என்றும்
 இன்பத்தில்  துன்பத்தில்  பங்கெடுப்போம்
 சீர்பெற  சிந்தித்து  முடிவெடுப்போம் -இங்கு
 சிறந்த  குடும்பமாய் வடிவெடுப்பொம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக