செவ்வாய், 29 அக்டோபர், 2013

நல்லது 199.

இரவினில்   ஆடி
 இன்பத்தைத்   தேடி
 உறவினை   இழந்தனரே -சிலர்
 ஊமைகள்     ஆனாரே

 வரவுகள்  குறைந்து
 செலவுகள்  கூடிட
 வறுமையில்  ஆழ்ந்தனரே -ஏனோ
 வகைஇன்றிப்  போயினரே

 ஏய்த்துப்   பிழைத்து
 எல்லோரையும்   வதைத்து
 நாளைக்  கழித்தனரே -முடிவில்
 நாசம்  அடைந்தனரே

 கொள்ளைகள்   செய்து -பல
 குடும்பத்தைக்  கெடுத்து
 வல்லமை  காட்டினாரே -மண்ணில்
 வாழ்வின்றிப்  போயினரே

 இறைவன்  ஒருவன்  -உலகில்
 இருப்பதை  மறந்து
 எல்லாமே  தானென்றார் -எங்கோ
 பறந்து   விட்டார்

 ஆட்டம்  போட்டவர் -இங்கே
 சேட்டைகள்  செய்தவர்
 அழிந்து   போவாரே -இதனை
 அறிந்திடல்  நன்மையன்றோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக