இரவினில் ஆடி
இன்பத்தைத் தேடி
உறவினை இழந்தனரே -சிலர்
ஊமைகள் ஆனாரே
வரவுகள் குறைந்து
செலவுகள் கூடிட
வறுமையில் ஆழ்ந்தனரே -ஏனோ
வகைஇன்றிப் போயினரே
ஏய்த்துப் பிழைத்து
எல்லோரையும் வதைத்து
நாளைக் கழித்தனரே -முடிவில்
நாசம் அடைந்தனரே
கொள்ளைகள் செய்து -பல
குடும்பத்தைக் கெடுத்து
வல்லமை காட்டினாரே -மண்ணில்
வாழ்வின்றிப் போயினரே
இறைவன் ஒருவன் -உலகில்
இருப்பதை மறந்து
எல்லாமே தானென்றார் -எங்கோ
பறந்து விட்டார்
ஆட்டம் போட்டவர் -இங்கே
சேட்டைகள் செய்தவர்
அழிந்து போவாரே -இதனை
அறிந்திடல் நன்மையன்றோ
இன்பத்தைத் தேடி
உறவினை இழந்தனரே -சிலர்
ஊமைகள் ஆனாரே
வரவுகள் குறைந்து
செலவுகள் கூடிட
வறுமையில் ஆழ்ந்தனரே -ஏனோ
வகைஇன்றிப் போயினரே
ஏய்த்துப் பிழைத்து
எல்லோரையும் வதைத்து
நாளைக் கழித்தனரே -முடிவில்
நாசம் அடைந்தனரே
கொள்ளைகள் செய்து -பல
குடும்பத்தைக் கெடுத்து
வல்லமை காட்டினாரே -மண்ணில்
வாழ்வின்றிப் போயினரே
இறைவன் ஒருவன் -உலகில்
இருப்பதை மறந்து
எல்லாமே தானென்றார் -எங்கோ
பறந்து விட்டார்
ஆட்டம் போட்டவர் -இங்கே
சேட்டைகள் செய்தவர்
அழிந்து போவாரே -இதனை
அறிந்திடல் நன்மையன்றோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக