ஞாயிறு, 20 அக்டோபர், 2013

utthaman-174.

சிறுவர்  சிறுமியர் வாருங்களேன் -இந்த
 சிறியேன் சொல்வதைக்  கேளுங்களேன்
 அறிவால்  உயர்ந்திடப்  பாருங்கள் -உலகில்
 அதுதான்  சிறப்பெனக் கூறுங்கள்

 அரிதான செல்வம்  கல்விதான் -நாம்
 அதனை மறந்தாலே தோல்விதான்
 தெரிந்து  நல்வழி செல்லுங்கள் -இங்கு
 தீயென  என்பதை தள்ளுங்கள்

 உடலிற்கு உழைப்பு தேவையே -அதனை
 உணர்ந்து செய்திடில்  வெற்றியே
 கடலிலும்  நல்முத்து  காணலாம் -உங்கள்
 இருகைகளை  நம்பியே வாழலாம்

 நாட்டைக்  காப்பதே  நல்லது -எங்கும்
 நல்லவை  என்றுமே வெல்வது
 வீட்டையும்  கவனித்து  வாழுங்கள் -என்றும்
 வென்றவர் சொல்வதைக்  கொள்ளுங்கள்

 தெய்வம்  உண்டென்று  நம்புங்கள் -அதுவே
 சிறந்த  வாழ்வென உணருங்கள்
 உய்யவே  உழைத்தால்  உயரலாம் -இனி
 உத்தமன்  எனும் பெயர்  சேரலாம்

 தாய்  தந்தையை  மதியுங்கள் -நம்
 தமிழின்  சிறப்பினை  அறியுங்கள்
 நோய்  நொடியின்றி  வாழுங்கள் -நல்ல
 நுண்ணறிவால்  உலகினை  ஆளுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக