விண்ணில் நிலவொளி -அந்த
மேக மழைத் துளி
கண்ணைப் பறித்ததுவே -அது
மண்ணை நனைத்ததுவே
பொன்னைத் தேடிடும் -இந்தப்
பொல்லாங்கு மாந்தர்கள்
தன்னை மறந்தனரே -நல்ல
தன்மை துறந்தனரே
கோடி குவித்தவர் -தினம்
கொள்ளை யடித்தவர்
பேடிகள் ஆயினரே -கிளியே
ஒடியே போயினரே
பொய்யை தினம் பேசி -இங்கு
புரட்டுக் காரர்கள்
ஐயம் அடைந்தனரே -கிளியே
அன்பைத் துறந்தனரே
கண்ணால் கதை பேசி -வரும்
காசைப் பறித்தவர்
தன்னால் அழிந்தனரே -கிளியே
தர்மம் மறந்தனரே
வாரிக் குவித்ததை -பிறர்க்கு
வழங்க மறுத்தவர்
வாழ்வை இழந்தனரே -கிளியே
வற்றி மடிந்தனரே
ஊருக்கு உழைத்தவர் -என்றும்
உண்மை பேசுவோர்
பேருக்குள் பேறு பெற்றார் -கிளிடே
பெருமை யடைந்தனரே
கல்வியைக் காசிற்கு -நன்கு
கச்சிதமாய் விற்போர்
புல்லினும் கீழாவார் -கிளியே
புதைக்கப் படுவாரடி
நன்றி மறந்தவர் -மனதில்
நஞ்சினைக் கொண்டவர்
சென்று ஒளிவாரடி -கிளியே
செத்துத் தொலைவாரடி
பெண்ணால் பிறந்தவர் -பின்பு
பெண்ணைப் பழித்தவர்
கண்ணை இழந்தனரே -கிளியே
கதியின்றிப் போவாரடி
மேக மழைத் துளி
கண்ணைப் பறித்ததுவே -அது
மண்ணை நனைத்ததுவே
பொன்னைத் தேடிடும் -இந்தப்
பொல்லாங்கு மாந்தர்கள்
தன்னை மறந்தனரே -நல்ல
தன்மை துறந்தனரே
கோடி குவித்தவர் -தினம்
கொள்ளை யடித்தவர்
பேடிகள் ஆயினரே -கிளியே
ஒடியே போயினரே
பொய்யை தினம் பேசி -இங்கு
புரட்டுக் காரர்கள்
ஐயம் அடைந்தனரே -கிளியே
அன்பைத் துறந்தனரே
கண்ணால் கதை பேசி -வரும்
காசைப் பறித்தவர்
தன்னால் அழிந்தனரே -கிளியே
தர்மம் மறந்தனரே
வாரிக் குவித்ததை -பிறர்க்கு
வழங்க மறுத்தவர்
வாழ்வை இழந்தனரே -கிளியே
வற்றி மடிந்தனரே
ஊருக்கு உழைத்தவர் -என்றும்
உண்மை பேசுவோர்
பேருக்குள் பேறு பெற்றார் -கிளிடே
பெருமை யடைந்தனரே
கல்வியைக் காசிற்கு -நன்கு
கச்சிதமாய் விற்போர்
புல்லினும் கீழாவார் -கிளியே
புதைக்கப் படுவாரடி
நன்றி மறந்தவர் -மனதில்
நஞ்சினைக் கொண்டவர்
சென்று ஒளிவாரடி -கிளியே
செத்துத் தொலைவாரடி
பெண்ணால் பிறந்தவர் -பின்பு
பெண்ணைப் பழித்தவர்
கண்ணை இழந்தனரே -கிளியே
கதியின்றிப் போவாரடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக