வியாழன், 24 அக்டோபர், 2013

கிளியே 194.

விண்ணில்  நிலவொளி -அந்த
மேக   மழைத் துளி
 கண்ணைப்  பறித்ததுவே -அது
 மண்ணை  நனைத்ததுவே

 பொன்னைத்  தேடிடும்  -இந்தப்
 பொல்லாங்கு  மாந்தர்கள்
 தன்னை  மறந்தனரே -நல்ல
 தன்மை  துறந்தனரே

 கோடி   குவித்தவர்  -தினம்
 கொள்ளை  யடித்தவர்
 பேடிகள்  ஆயினரே -கிளியே
 ஒடியே    போயினரே

 பொய்யை  தினம் பேசி -இங்கு
 புரட்டுக்  காரர்கள்
 ஐயம்  அடைந்தனரே -கிளியே
 அன்பைத்  துறந்தனரே

 கண்ணால்  கதை பேசி -வரும்
 காசைப்  பறித்தவர்
 தன்னால்  அழிந்தனரே -கிளியே
 தர்மம்  மறந்தனரே

 வாரிக்  குவித்ததை -பிறர்க்கு
 வழங்க  மறுத்தவர்
 வாழ்வை   இழந்தனரே -கிளியே
 வற்றி  மடிந்தனரே

 ஊருக்கு  உழைத்தவர் -என்றும்
 உண்மை  பேசுவோர்
 பேருக்குள்  பேறு  பெற்றார் -கிளிடே
 பெருமை  யடைந்தனரே

 கல்வியைக்  காசிற்கு -நன்கு
கச்சிதமாய்  விற்போர்
 புல்லினும்  கீழாவார் -கிளியே
 புதைக்கப்  படுவாரடி

 நன்றி  மறந்தவர் -மனதில்
 நஞ்சினைக்  கொண்டவர்
 சென்று  ஒளிவாரடி -கிளியே
 செத்துத்  தொலைவாரடி

 பெண்ணால்  பிறந்தவர் -பின்பு
 பெண்ணைப் பழித்தவர்
 கண்ணை  இழந்தனரே -கிளியே
 கதியின்றிப்  போவாரடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக