வியாழன், 31 அக்டோபர், 2013

முன்னேற்றம் -202.

வண்ண    நிலவினில் -நல
 வானத்  தழகுகள்
 என்னை   அழைக்குதடி -மனம்
 எங்கோ  இழுக்குதடி

 நீலப்   பட்டாடையில் -அந்த
 நிலவுப்   பெண்ணவள்
 கோல   அழகியடி -அவளைக்
 கொஞ்சத்  துடிக்குதடி

 சலசலவெனத்  சப்தமிட்டு -மழைச்
 சாரலும்  பெய்யுதடி
 சஞ்சலம்   மீறுதடி  -ஒரு
 சங்கமம்  தேடுதடி

 கூவும்      குயில் ஓசை -கேட்க
 கொள்ளை  இனிமையடி
 கொஞ்சும்  தமிழோசை -நம்
 நெஞ்சை   அள்ளுதடி

 வாழப்   பிறந்தவர் -மண்ணில்
 வாழ  வகையின்றி
 வாயில்லா  ஊமையானார் -நாளும்
 வறுமையில்   வாடலானார்

 வறுமைகள்  தீர்ந்திட -இங்கு
 வளம் பெற்று   வாழ்ந்திட
 வழிவகையினைக்  காண்போம் -அவர்
 வாழ்ந்திட  வைத்திடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக