புதன், 30 அக்டோபர், 2013

குழந்தை -201.

கன்னத்தில்   குழி -நமைக்
 காணும்    இருவிழி
 எண்ணிடப்  புதுமையடி -அட
 என்ன   மகிழ்ச்சியடி

 முத்துச   சிரிப்பினில் -அதில்
 மூளும்    எழிலினில்
 பித்துப்   பிடித்ததுவே -புது
 பிரேமையும்  கூடியதே

 கத்தும்   குரலோசை -நம்
 காதில்  குழலோசை
 கானம்  ஆனதுவே -வரும்
 காலம்  மறந்ததுவே

 தத்தும்  தளர்நடை -இங்கு
 தாவி   விழுவதும்
 நித்தம்  புதுமையன்றோ -என்றும்
 நினைக்க   இனிமையன்றோ

 பட்டுத்  தளிர்மேனி -அதனை
 தொட்டு   இழுக்கையில்
 பரவசம்   எறிடுமே -நெஞ்சில்
 பாசம்   ஊறிடுமே

 இந்த   நினைவுகள் -இனிய
 இளமைக்  கனவுகள்
 எங்கள்   குழந்தையம்மா -அது
 இறைவன்   கருணையம்மா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக