பல்லவி :
நடனம் ஆடுகிறார் -வெகு
நாகரிகமாய் நயமுடன் தில்லையில் (நடனம்)
அநுபல்லவி
உடனுடன் தாளமொடு இசைமுழங்க -இந்த
உலகினர் கண்டதும் மதிமயங்க (நடனம்)
சரணங்கள்
1.காலினை மாற்றியே ஆடுகிறார் - அந்தக்
கனக சபையில் கச்சிதமாகவே நித்தியமூர்த்தி
வேலினை வென்றிடும் விழியழகு -பிறர்
வேதனை தீர்ப்பதில் தனியழகு (நடனம் )
2.ஆலின் அடியிலே அமர்ந்தவராம் -தன
அடியவர் மனக்குறை தீர்ப்பவராம்
நூலின் நுண்பொருள் உரைப்பவராம் -இங்கு
நுண்ணிய கலைகளின் வடிவினராய் (நடனம்)
3.நந்தியின் மத்தள ஓசையிலே -இந்த
நானிலம் மயங்குமே ஆசையிலே
எண்டிசை எங்கிலும் இசைமயமே -நம்
எல்லோர் மனதிலும் இறைமயமே (நடனம்)
நடனம் ஆடுகிறார் -வெகு
நாகரிகமாய் நயமுடன் தில்லையில் (நடனம்)
அநுபல்லவி
உடனுடன் தாளமொடு இசைமுழங்க -இந்த
உலகினர் கண்டதும் மதிமயங்க (நடனம்)
சரணங்கள்
1.காலினை மாற்றியே ஆடுகிறார் - அந்தக்
கனக சபையில் கச்சிதமாகவே நித்தியமூர்த்தி
வேலினை வென்றிடும் விழியழகு -பிறர்
வேதனை தீர்ப்பதில் தனியழகு (நடனம் )
2.ஆலின் அடியிலே அமர்ந்தவராம் -தன
அடியவர் மனக்குறை தீர்ப்பவராம்
நூலின் நுண்பொருள் உரைப்பவராம் -இங்கு
நுண்ணிய கலைகளின் வடிவினராய் (நடனம்)
3.நந்தியின் மத்தள ஓசையிலே -இந்த
நானிலம் மயங்குமே ஆசையிலே
எண்டிசை எங்கிலும் இசைமயமே -நம்
எல்லோர் மனதிலும் இறைமயமே (நடனம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக