ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தில்லை நடராஜர் 197.

                            பல்லவி :

      நடனம்   ஆடுகிறார் -வெகு
 நாகரிகமாய்   நயமுடன்  தில்லையில்  (நடனம்)

                        அநுபல்லவி

 உடனுடன்  தாளமொடு   இசைமுழங்க -இந்த
 உலகினர்   கண்டதும்  மதிமயங்க  (நடனம்)

                       சரணங்கள்

 1.காலினை   மாற்றியே  ஆடுகிறார் - அந்தக்
 கனக சபையில்   கச்சிதமாகவே   நித்தியமூர்த்தி
 வேலினை  வென்றிடும்   விழியழகு -பிறர்
 வேதனை  தீர்ப்பதில்  தனியழகு     (நடனம்  )

 2.ஆலின்   அடியிலே  அமர்ந்தவராம் -தன
 அடியவர்   மனக்குறை  தீர்ப்பவராம்
 நூலின்   நுண்பொருள்  உரைப்பவராம் -இங்கு
 நுண்ணிய  கலைகளின்  வடிவினராய்  (நடனம்)

 3.நந்தியின்   மத்தள  ஓசையிலே -இந்த
 நானிலம்   மயங்குமே  ஆசையிலே
 எண்டிசை  எங்கிலும்  இசைமயமே -நம்
 எல்லோர்  மனதிலும்  இறைமயமே  (நடனம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக