கண்ணிலே தெரிவதென்ன கண்ணம்மா -அந்தக்
கண்ணனின் திருமேனி கண்ணம்மா
பெண்ணிலே பேரழகி தானம்மா -வாய்
பேசாத பொற்சிலை நீயம்மா
நிலவுவரும் நேரத்திலே கண்ணம்மா -உனது
நெஞ்சம் விம்மிப் பொங்குவதேன் கண்ணம்மா
கனவில் வந்தசுகம் கண்ணம்மா -இனி
காலத்திலும் நிலைத்திருக்கும் கண்ணம்மா
புல்லாங்குழல் இசைத்தால் கண்ணம்மா -ஏனோ
பொழுதெலாம் மயங்குகிறாய் கண்ணம்மா அள்ளக்
குறையாதவன் தான் கண்ணம்மா -தினம்
அவனை நினைத்து ஏங்குகிறாய் கண்ணம்மா
கங்கைகரைத் தோட்டத்திலே கண்ணம்மா -அன்று
கண்ணனின் மடிபுகுந்தாய் கண்ணம்மா
தங்கமெனத் ஜோளிக்கிறானே கண்ணம்மா -அவனைத்
தழுவியணைத்து மகிழ்ந்திடடி கண்ணம்மா
மாடுமேய்க்க வந்தவன் கண்ணம்மா -இள
மனதில்வந்து மேய்கிறானே கண்ணம்மா
கூடு விட்டு கூடுபாய்ந்தான் கண்ணம்மா -இந்தக்
கொள்ளையை எங்கு சொல்வேன் கண்ணம்மா
இரவுக் காலப் பொழுதினிலே கண்ணம்மா -இன்னும்
எத்தனை நாள் காத்திருப்பாய் கண்ணம்மா
உறவுக்காக துடிதுடிக்கும் கண்ணம்மா -உடனே
உன்னையாள வந்திடுவான் பாரம்மா
கண்ணனின் திருமேனி கண்ணம்மா
பெண்ணிலே பேரழகி தானம்மா -வாய்
பேசாத பொற்சிலை நீயம்மா
நிலவுவரும் நேரத்திலே கண்ணம்மா -உனது
நெஞ்சம் விம்மிப் பொங்குவதேன் கண்ணம்மா
கனவில் வந்தசுகம் கண்ணம்மா -இனி
காலத்திலும் நிலைத்திருக்கும் கண்ணம்மா
புல்லாங்குழல் இசைத்தால் கண்ணம்மா -ஏனோ
பொழுதெலாம் மயங்குகிறாய் கண்ணம்மா அள்ளக்
குறையாதவன் தான் கண்ணம்மா -தினம்
அவனை நினைத்து ஏங்குகிறாய் கண்ணம்மா
கங்கைகரைத் தோட்டத்திலே கண்ணம்மா -அன்று
கண்ணனின் மடிபுகுந்தாய் கண்ணம்மா
தங்கமெனத் ஜோளிக்கிறானே கண்ணம்மா -அவனைத்
தழுவியணைத்து மகிழ்ந்திடடி கண்ணம்மா
மாடுமேய்க்க வந்தவன் கண்ணம்மா -இள
மனதில்வந்து மேய்கிறானே கண்ணம்மா
கூடு விட்டு கூடுபாய்ந்தான் கண்ணம்மா -இந்தக்
கொள்ளையை எங்கு சொல்வேன் கண்ணம்மா
இரவுக் காலப் பொழுதினிலே கண்ணம்மா -இன்னும்
எத்தனை நாள் காத்திருப்பாய் கண்ணம்மா
உறவுக்காக துடிதுடிக்கும் கண்ணம்மா -உடனே
உன்னையாள வந்திடுவான் பாரம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக