ஞாயிறு, 20 அக்டோபர், 2013

thankak kural-annant.m.s.179.

கானகத்துக்  குயில்  ஒன்று-இரு
 கண்  மூடி  தூங்குதையா
 வானகத்துக்  தேவர்  கூட்டம் -வந்தே
 வழி  காட்டி  அழைத்தனரோ

எம் கே  டி  போல இனிய குரலழகு -நமது
 எம் ஜி யாருக்கும்  இசைந்த புது மெருகு
 சிங்கமெனச்  சீரும் சிவாஜி  கணேசனுக்கோ -நல்ல
 தங்கமாய்  அமைந்தது  தமிழின்  பெருமையன்றோ

 மதுரையில்  பிறந்த  மாமணியே  கண்ணுறங்கு -நம்
 பொதிகையில் பிறந்த  பூந்தென்றல்  கண்ணுறங்கு
 விதி ஒன்று வந்து  விளையாடி விட்டதம்மா -வேறு
 கதி இல்லை  என்றே  கனக்குது  தமிழர் குளம்

 வெள்ளித்  திரையின்  வெற்றித்  திருமகனே -உலகம்
 வியக்கும்  குரலசைவில்  வெற்றி  குவித்தவரே
 அள்ளி  யனைத்தன்று  ஆசிபல சொன்னவரே -இதனை
 சொல்லித் துடிக்குதையா  சோதரன்  எந்தன்  மனம்

 வானத்து வீதியிலே  வலம் வருமே உனது குரல் -அந்த
 வள்ளி    மனவாளனால்  வளர்ந்ததே  உனதுபுகழ்
 கானப்   பெருவிளக்கே  கருணைமனம் கொண்டவரே -எந்த
 நாளும் உன்னை மறவோம் நன்றியுடன்  நினைத்திடுவோம்

 எத்தனையோ  பேர்கள்  இனியும்  வருவார்கள் -ஆயின்
 அத்தனையும் உன்போல  அமைந்திட  வேண்டாமோ
 சித்தனாய்  வாழ்ந்து  சிரஞ்சீவி  ஆனவரே -உனது
 பக்தன்  பாடுகிறேன்  பாசமுடன்  கேட்டிடுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக