கானகத்துக் குயில் ஒன்று-இரு
கண் மூடி தூங்குதையா
வானகத்துக் தேவர் கூட்டம் -வந்தே
வழி காட்டி அழைத்தனரோ
எம் கே டி போல இனிய குரலழகு -நமது
எம் ஜி யாருக்கும் இசைந்த புது மெருகு
சிங்கமெனச் சீரும் சிவாஜி கணேசனுக்கோ -நல்ல
தங்கமாய் அமைந்தது தமிழின் பெருமையன்றோ
மதுரையில் பிறந்த மாமணியே கண்ணுறங்கு -நம்
பொதிகையில் பிறந்த பூந்தென்றல் கண்ணுறங்கு
விதி ஒன்று வந்து விளையாடி விட்டதம்மா -வேறு
கதி இல்லை என்றே கனக்குது தமிழர் குளம்
வெள்ளித் திரையின் வெற்றித் திருமகனே -உலகம்
வியக்கும் குரலசைவில் வெற்றி குவித்தவரே
அள்ளி யனைத்தன்று ஆசிபல சொன்னவரே -இதனை
சொல்லித் துடிக்குதையா சோதரன் எந்தன் மனம்
வானத்து வீதியிலே வலம் வருமே உனது குரல் -அந்த
வள்ளி மனவாளனால் வளர்ந்ததே உனதுபுகழ்
கானப் பெருவிளக்கே கருணைமனம் கொண்டவரே -எந்த
நாளும் உன்னை மறவோம் நன்றியுடன் நினைத்திடுவோம்
எத்தனையோ பேர்கள் இனியும் வருவார்கள் -ஆயின்
அத்தனையும் உன்போல அமைந்திட வேண்டாமோ
சித்தனாய் வாழ்ந்து சிரஞ்சீவி ஆனவரே -உனது
பக்தன் பாடுகிறேன் பாசமுடன் கேட்டிடுங்கள்
கண் மூடி தூங்குதையா
வானகத்துக் தேவர் கூட்டம் -வந்தே
வழி காட்டி அழைத்தனரோ
எம் கே டி போல இனிய குரலழகு -நமது
எம் ஜி யாருக்கும் இசைந்த புது மெருகு
சிங்கமெனச் சீரும் சிவாஜி கணேசனுக்கோ -நல்ல
தங்கமாய் அமைந்தது தமிழின் பெருமையன்றோ
மதுரையில் பிறந்த மாமணியே கண்ணுறங்கு -நம்
பொதிகையில் பிறந்த பூந்தென்றல் கண்ணுறங்கு
விதி ஒன்று வந்து விளையாடி விட்டதம்மா -வேறு
கதி இல்லை என்றே கனக்குது தமிழர் குளம்
வெள்ளித் திரையின் வெற்றித் திருமகனே -உலகம்
வியக்கும் குரலசைவில் வெற்றி குவித்தவரே
அள்ளி யனைத்தன்று ஆசிபல சொன்னவரே -இதனை
சொல்லித் துடிக்குதையா சோதரன் எந்தன் மனம்
வானத்து வீதியிலே வலம் வருமே உனது குரல் -அந்த
வள்ளி மனவாளனால் வளர்ந்ததே உனதுபுகழ்
கானப் பெருவிளக்கே கருணைமனம் கொண்டவரே -எந்த
நாளும் உன்னை மறவோம் நன்றியுடன் நினைத்திடுவோம்
எத்தனையோ பேர்கள் இனியும் வருவார்கள் -ஆயின்
அத்தனையும் உன்போல அமைந்திட வேண்டாமோ
சித்தனாய் வாழ்ந்து சிரஞ்சீவி ஆனவரே -உனது
பக்தன் பாடுகிறேன் பாசமுடன் கேட்டிடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக