ஞாயிறு, 20 அக்டோபர், 2013

iraivan-176.

என்னைப்  படைத்தவன்  இறைவனே
 எனக்கு  அவனே  தலைவனே
 பொன்னைப்  பொருளைத்  தந்தவன்
 புவனத்தை  என்றுமே  வென்றவன்

 தந்தை  தாயும்  ஆனவன்
 தர்மத்தை உலகிலே  காத்தவன்
 பந்தமும்  பாசமும் அற்றவன்
 பாடிடும் தமிழிற்கு  ஏற்றவன்

 வானும் கடலும்  எல்லைகள்
 வணங்க  மறுத்தால் தொல்லைகள்
 கூனும்  குருடுமவன்  பிள்ளைகள்
 குவலயத்தில்  எத்தனை  நன்மைகள்

 இல்லார்  சிரிப்பினில்  அவனிருப்பான்
 ஏற்றமும்  புகழும்  அவனளிப்பான்
 காற்றாய்  எங்கிலும் கலந்திருப்பான்
 கற்புடை  மாதர்க்கு உதவிடுவான்

 சோதனை  அதிகம்  தருபவன்
 சுகத்தினை  முடிவில்  அளிப்பவன்
 சாதனை  செய்திடத்  துணையவன்
 சரித்திரம்  படைத்திடும் வல்லவன்

 வலியோர்  தம்மையும் வதைப்பவன்
 வாய்மை  விதைகளை  விதைப்பவன்
 எளியோர் நெஞ்சினில்  இருப்பவன்
 எல்லா  செயலுக்கும் பொருப்பவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக