வியாழன், 31 அக்டோபர், 2013

விருந்து 203.

கன்ன    கரு குயில் -நம்
 காதல்  இள மயில்
 பின்னி  எடுத்தாளடி -அதனை
 பேச  மறுததா ளடி

 மாலை  நேரத்தில் -நல்ல
 மல்லிகை  வாசத்தில்
 ஆளைக்  கவர்ந்தாளடி -கிளியே
 அசந்து  போனேனடி

 கொட்டும்  பனியினில் -கடும்
 கூதல்   காற்றினில்
 கட்டிப்  பிடிப்பாளோடி -கிளியே
 கண்டு  மகிழ்வேனோடி

 வாலைப்  பருவத்தில் -அவளுக்கு
 வந்த  மயக்கத்தில்
 சேலை  கலைந்ததென்ன -கிளியே
 செம்மை  படர்ந்ததென்ன

 ஆற்று  மணலினில் -இரவில்
 ஆடிக்   களைத்தவள்
 தோற்றுப்  போவாளோடி -கிளியே
 தேற்றும்   நிலைபாரடி

 விருந்து  கொடுத்தவள் -இன்னும்
 விடியத்   திளைத்தவள்
 திரும்பி  வருவாளோடி -கிளியே
 தேடிநீ    அறிவாயடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக