வெள்ளி, 1 நவம்பர், 2013

வேலும் மயிலும் 204.

நேரில்  நடந்ததோ -என்
 நினைவில்  மலர்ந்தது
 நினைவில்  வந்ததோ -நம்
 நெஞ்சில்   வளர்ந்தது

 கூட்டில்  வளர்ந்ததோ -இங்கு
 குடியாய்  பிறந்தது
 ஏட்டில்  உள்ளது -சிலர்க்கு
 எழுத்தாய்  தெரிந்தது

 நாட்டில்  உள்ளவை -மண்ணில்
 நமக்காய்   ஆனது
 பாட்டில்  உள்ளது -நல்ல
 பதமாய்  தோன்றுது

 நீரின்   அடியிலே -நல்ல
 நிலமும்  உள்ளது
 நேசம்  உள்ளதே -பின்பு
 பாசம்   ஆனது

 வாய்மை  வழியிலே -நமது
 வாழ்வும்   அமைவது
 தாய்மை   வழிதான் -உலகில்
 தர்மவழி   ஆனது

 நாளும்  கோளும் -நமக்கு
 நன்மை   தருவது
 வேலும் மயிலுமே -என்றும்
 வெற்றி   தருவது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக