வெள்ளி, 8 நவம்பர், 2013

ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் -211.

எனையாளும்  பெருமாளே   நீதானய்யா -உன்னை
 எந்நாளும்  துதிக்கின்ற  உயிர் தானையா
 நினைவோடு   வாழ்கின்ற  இப்பூமியில் -என்றும்
 நினையன்றி  யாருண்டு  எப்போதுமே    (எனையாளும் )

 மலர்களும்   தோட்டத்தில்  மலர்ந்தாடுது -உனது
 மலர்ப்பதம்  வேண்டியன்றோ   விழுந்தோடுது
 கலையாவும்   உன்னிடமே  குடிகொண்டது -நீ
 கதியென்று  வருவார்க்கு  நற்பலன்  கூடுது  (என்னையாளும் )

 சிலையான   கல்கூட  ஜீவன் பெற்றது -நீ
 சிரித்தாலே  முத்துக்கள்  சிறப்பானது
 நிலையாக   நின்றாயே  மலைமீதிலே - உனை
 நெஞ்சார   நினைத்தாலே  சுகமானது   (என்னையாளும் )

 அலைமேவும்  கடல்மீதில்   குடியேறினாய் -உனது
 அடியார்கள்   துயர்நீக்க  விரைவாகினாய்
 பிழையேதும்  செய்தேனோ  பொறுப்பாய்  ஐயா -இனி
 பின்னாளில்  உன்பாதம்   கிடப்பேன்   ஐயா   (என்னையாளும் )

 மதுராவை   அரசாளும்  மகராசனே -எல்லா
 மனங்களை   ஆள்கின்ற   எழில் வாசனே
 வினைதீர்க்க   வந்த     எங்கள் வேங்கடேசனே -நீ
 விரைந்தோடி  வருவாயே  இப்புவி காக்கவே   (எனையாளும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக