செவ்வாய், 5 நவம்பர், 2013

கந்தவேல் 207

இறைவன்   பெருமை  தன்னையே -வானில் 
 எடுத்து   செல்லும்  பறவையே 
 உறைவிடம்  நோக்கி  செல்கையில் -இந்த 
 உண்மை   அறிதல்  நல்லதே 
 
 வானம்  பொழிந்த  மழையினால் -நம் 
 வயல்கள்  விளைச்சல்  காணுது 
 தானம்   பலரும்  செய்வதால்  -உலகில் 
 தர்மம்   நன்கு   நிலைக்குது 
 
 கரையைத்  தொடும்  அலைகளோ -நமக்கு 
 கடவுள்     கருணை யைச்   சொல்லுது 
 இரையைத்  தேடும்  மிருகமோ -அதன் 
 எதிரில்   வந்தால்   கொல்லுது 
 
 நாளை   இரவு   தேடுது -இங்கு 
 நன்மை   தீமை  உள்ளது 
 சோலை   மலர்கள்   சிரிக்குது -வீணில் 
 சோம்பல்   மனத்தைக்  கெடுக்குது 
 
 உழைக்கும்  வியர்வை  உயர்ந்தது -என்றும் 
 உண்மை   ஒன்றே    வெல்லுது 
 களைப்பவர்க்கு    நீயும்  கைகொடு -உனது 
 கையை  நம்பி  உழைத்திடு 
 
 வந்த  மனிதர்   போகலாம் -ஏன் 
 வாழ்வின்  பாதையும்  மாறலாம் 
 கந்தவேலை  நினைக்கும்  மாந்தரும் -மண்ணில் 
 கவலைகள்   நீங்கியே   வாழலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக