இறைவன் பெருமை தன்னையே -வானில்
எடுத்து செல்லும் பறவையே
உறைவிடம் நோக்கி செல்கையில் -இந்த
உண்மை அறிதல் நல்லதே
வானம் பொழிந்த மழையினால் -நம்
வயல்கள் விளைச்சல் காணுது
தானம் பலரும் செய்வதால் -உலகில்
தர்மம் நன்கு நிலைக்குது
கரையைத் தொடும் அலைகளோ -நமக்கு
கடவுள் கருணை யைச் சொல்லுது
இரையைத் தேடும் மிருகமோ -அதன்
எதிரில் வந்தால் கொல்லுது
நாளை இரவு தேடுது -இங்கு
நன்மை தீமை உள்ளது
சோலை மலர்கள் சிரிக்குது -வீணில்
சோம்பல் மனத்தைக் கெடுக்குது
உழைக்கும் வியர்வை உயர்ந்தது -என்றும்
உண்மை ஒன்றே வெல்லுது
களைப்பவர்க்கு நீயும் கைகொடு -உனது
கையை நம்பி உழைத்திடு
வந்த மனிதர் போகலாம் -ஏன்
வாழ்வின் பாதையும் மாறலாம்
கந்தவேலை நினைக்கும் மாந்தரும் -மண்ணில்
கவலைகள் நீங்கியே வாழலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக