புதன், 6 நவம்பர், 2013

நம்பிக்கை -208.

நம்பிடு   கைகளை   நம்பிடு -அது
 நம்பிக்கை  என்பதை  வளர்த்துவிடும்
 அம்பிகை  மனது   வைத்திடிலோ -இங்கு
 அனைத்தும்  நலமாய்  முடிந்துவிடும்

 பொன்னில்  ஆசையினைக்  கொள்ளாதே -பிறர்
 புகழ்ச்சியில்  தலைக் கனம்  பொல்லாதே
 பெண்களை   என்றுமே  இகழாதே -அது
 பெருமையை  அழித்திடும்  மறவாதே

 சூதும்   வாதும்  வேதனையே -வரும்
 சுகமும்   ஒருநாள்  சாதனையே
 போதும்  என்ற  மனம்  வேண்டும் -உலகை
 பொறுமையால்   வென்றிடும்  நிலைவேண்டும்

 வாதம்   செய்வதை  விட்டு விடு -நீ
 வானத்தின்  எல்லையைத்  தொட்டுவிடு
 தாயைப்  போற்றிடத்  தயங்காதே -வெறும்
 தாகத்தில்  என்றுமே  மயங்காதே

 இல்லை  என்பது  இல்லையடா --இதனை
 எண்ணியே  முயன்றால்  வெல்லுமடா
 தொல்லைகள்  கோடி  சூழ்ந்திடினும் -நாளும்
 தொடர்ந்து   உழைத்திடில்  வெற்றியடா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக