நம்பிடு கைகளை நம்பிடு -அது
நம்பிக்கை என்பதை வளர்த்துவிடும்
அம்பிகை மனது வைத்திடிலோ -இங்கு
அனைத்தும் நலமாய் முடிந்துவிடும்
பொன்னில் ஆசையினைக் கொள்ளாதே -பிறர்
புகழ்ச்சியில் தலைக் கனம் பொல்லாதே
பெண்களை என்றுமே இகழாதே -அது
பெருமையை அழித்திடும் மறவாதே
சூதும் வாதும் வேதனையே -வரும்
சுகமும் ஒருநாள் சாதனையே
போதும் என்ற மனம் வேண்டும் -உலகை
பொறுமையால் வென்றிடும் நிலைவேண்டும்
வாதம் செய்வதை விட்டு விடு -நீ
வானத்தின் எல்லையைத் தொட்டுவிடு
தாயைப் போற்றிடத் தயங்காதே -வெறும்
தாகத்தில் என்றுமே மயங்காதே
இல்லை என்பது இல்லையடா --இதனை
எண்ணியே முயன்றால் வெல்லுமடா
தொல்லைகள் கோடி சூழ்ந்திடினும் -நாளும்
தொடர்ந்து உழைத்திடில் வெற்றியடா
நம்பிக்கை என்பதை வளர்த்துவிடும்
அம்பிகை மனது வைத்திடிலோ -இங்கு
அனைத்தும் நலமாய் முடிந்துவிடும்
பொன்னில் ஆசையினைக் கொள்ளாதே -பிறர்
புகழ்ச்சியில் தலைக் கனம் பொல்லாதே
பெண்களை என்றுமே இகழாதே -அது
பெருமையை அழித்திடும் மறவாதே
சூதும் வாதும் வேதனையே -வரும்
சுகமும் ஒருநாள் சாதனையே
போதும் என்ற மனம் வேண்டும் -உலகை
பொறுமையால் வென்றிடும் நிலைவேண்டும்
வாதம் செய்வதை விட்டு விடு -நீ
வானத்தின் எல்லையைத் தொட்டுவிடு
தாயைப் போற்றிடத் தயங்காதே -வெறும்
தாகத்தில் என்றுமே மயங்காதே
இல்லை என்பது இல்லையடா --இதனை
எண்ணியே முயன்றால் வெல்லுமடா
தொல்லைகள் கோடி சூழ்ந்திடினும் -நாளும்
தொடர்ந்து உழைத்திடில் வெற்றியடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக