மலைமீதில் வசிக்கின்ற மாதவா -உன்னை
மனதார நினைத்தாலே வளம் சேருமே
அலைபாயும் கடல்மீது வாழ்கிறாய் -நினது
அடியார்கள் மனவீட்டில் ஆள்கிறாய்
நிலையாக நிற்பது எழில் கோலமே -தினம்
நெஞ்சாரத் துதித்தாலே சுகமாகுமே
கலையாவும் குடிகொண்ட அழகோவியம் -உன்னை
கண்டாலே உருவாகும் பலகாவியம்
திருமகள் உறைமார்பும் உனதல்லவா -திவ்ய
திருநாமம் வெற்றிக்கு வழியல்லவா
ஒருநாளும் மறவாமல் உனைப் பாடுவோம் -உனது
ஒப்பற்ற புகழ் சொல்லி நாம் ஆடுவோம்
அவதாரம் பலதந்த அருளாளன் நீ -என்றும்
அடியாரைக் காக்கின்ற அமுதமும நீ
புவனங்கள் உன்சொல்லுக் கிசைவாகுமே -இங்கு
புண்ணியம் உன்வாசலில் தவமாகுமே
காக்கின்ற உனைத்தேடிக் கரையேறலாம் -உன்
கண்பட்டால் பாவங்கள் கரைந்தோடலாம்
பாரதப் போர் வென்ற பரந்தாமனே -உலகில்
பக்தரைக் காப்பதுன் திருநாமமே
திருமாலே பெருமாளே நீ தேனானவன் -மண்ணில்
திக்கற்ற பல பேருக்குத் தாயானவன்
வரவேண்டும் புவிமீதில் திருநாளிலே -எங்கும்
வழிந்தோடும் இன்பங்கள் அப்போதிலே
மனதார நினைத்தாலே வளம் சேருமே
அலைபாயும் கடல்மீது வாழ்கிறாய் -நினது
அடியார்கள் மனவீட்டில் ஆள்கிறாய்
நிலையாக நிற்பது எழில் கோலமே -தினம்
நெஞ்சாரத் துதித்தாலே சுகமாகுமே
கலையாவும் குடிகொண்ட அழகோவியம் -உன்னை
கண்டாலே உருவாகும் பலகாவியம்
திருமகள் உறைமார்பும் உனதல்லவா -திவ்ய
திருநாமம் வெற்றிக்கு வழியல்லவா
ஒருநாளும் மறவாமல் உனைப் பாடுவோம் -உனது
ஒப்பற்ற புகழ் சொல்லி நாம் ஆடுவோம்
அவதாரம் பலதந்த அருளாளன் நீ -என்றும்
அடியாரைக் காக்கின்ற அமுதமும நீ
புவனங்கள் உன்சொல்லுக் கிசைவாகுமே -இங்கு
புண்ணியம் உன்வாசலில் தவமாகுமே
காக்கின்ற உனைத்தேடிக் கரையேறலாம் -உன்
கண்பட்டால் பாவங்கள் கரைந்தோடலாம்
பாரதப் போர் வென்ற பரந்தாமனே -உலகில்
பக்தரைக் காப்பதுன் திருநாமமே
திருமாலே பெருமாளே நீ தேனானவன் -மண்ணில்
திக்கற்ற பல பேருக்குத் தாயானவன்
வரவேண்டும் புவிமீதில் திருநாளிலே -எங்கும்
வழிந்தோடும் இன்பங்கள் அப்போதிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக