அலையாடும் கடல் மீது சிறு படகாகினேன் -உன்
அருள்வெள்ளம் எனில் பாய்ந்து தடுமாறினேன்
கலையாத மெருகொடும் எழில்வன்னமே -நினைக்
கண்டாலும் எனிலூறும் புது வெள்ளமே
நிலையாக புதுவாழ்வு நிதம் காணலாம் -பிறர்
நினையாத செல்வங்கள் நாம் சேர்க்கலாம்
விலைகேட்டு வந்தோர்கள் விரைந்து ஓடுவார் -இந்த
விவரம் அறிந்தாரோ தடம் மாறுவார்
அழகிற்கே அழகென்று பெயர் பெற்றவள் -நீ
அமுதூட்டி நலம் சேர்க்கும் விருந்தானவள்
களைப்பினை மாற்றும் நல்ல மருந்தானவள் -நான்
கவிபாடத் தமிழினில் வெல்லப் பொருளானவள்
பார்க்கின்ற மனிதர்க்கு கடும்பசி ஊட்டுவாள் -காதல்
பசியாற வந்தோர்க்கு துயர் கூட்டுவாள்
போர்க்கருவி போலாகும் பொன்மேடையே -இந்தப்
புவிவெல்ல நீ காட்டு உந்தன் கண்ஜாடையே
வாழ்நாளும் உன்கூட நான் வரவேண்டுமே -அந்த
வற்றாத தேனாறு நிதம் வேண்டுமே
ஒருநாளில் எனைத் தேடி நீயும் வரலாகுமா -உன்
இதயத்தில் என்காதல் மலர் பூக்குமா
அருள்வெள்ளம் எனில் பாய்ந்து தடுமாறினேன்
கலையாத மெருகொடும் எழில்வன்னமே -நினைக்
கண்டாலும் எனிலூறும் புது வெள்ளமே
நிலையாக புதுவாழ்வு நிதம் காணலாம் -பிறர்
நினையாத செல்வங்கள் நாம் சேர்க்கலாம்
விலைகேட்டு வந்தோர்கள் விரைந்து ஓடுவார் -இந்த
விவரம் அறிந்தாரோ தடம் மாறுவார்
அழகிற்கே அழகென்று பெயர் பெற்றவள் -நீ
அமுதூட்டி நலம் சேர்க்கும் விருந்தானவள்
களைப்பினை மாற்றும் நல்ல மருந்தானவள் -நான்
கவிபாடத் தமிழினில் வெல்லப் பொருளானவள்
பார்க்கின்ற மனிதர்க்கு கடும்பசி ஊட்டுவாள் -காதல்
பசியாற வந்தோர்க்கு துயர் கூட்டுவாள்
போர்க்கருவி போலாகும் பொன்மேடையே -இந்தப்
புவிவெல்ல நீ காட்டு உந்தன் கண்ஜாடையே
வாழ்நாளும் உன்கூட நான் வரவேண்டுமே -அந்த
வற்றாத தேனாறு நிதம் வேண்டுமே
ஒருநாளில் எனைத் தேடி நீயும் வரலாகுமா -உன்
இதயத்தில் என்காதல் மலர் பூக்குமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக