உன்னை நினைக்கையிலே -கண்ணம்மா
உள்ளம் கள்ளமாய்ப் போனதடி
பொன்னை உருக்கிய பொற்சிலையே -அன்பு
பொங்கிடும் காதல் பூந்தளிரே (உன்னை)
என்னை மறந்து நானும் தவிப்பதென்ன -என்
இதயத்தில் பூமழை பொழிவதென்ன
எண்ணத்தில் நிறைந்து இருப்பதென்ன -நீ
இன்னமும் ஏனென்னை வெருப்பதென்ன
இரவு நேரத்தில் அமைதியில்லை -என்
இருவிழி ஏனென்றும் உறங்கவில்லை
சிறகு இழந்த பறவையென - நான்
சித்தம் கலங்கித் தவிப்பதென்ன
வாலை வயதுக் குமரியடி -உன்னை
வாரி அணைத்திட ஆசையடி
நாளை எண்ணிநீ தள்ளுவதோ -என்
நாயகி நீயென்னைக் கொல்லுவதோ
காலம் வருமெனக் காத்திருந்தேன் -என்
கண்மணி உன்முகம் பார்த்திருந்தேன்
வேளை வருவதும் தெரியவில்லை -எனக்கு
விடிவது எப்படி புரியவில்லை
நெஞ்சில் நினைவு உள்ளவரை -உன்னை
நித்தம் நானும் நினைத்திருப்பேன்
கெஞ்சும் அழுகுரல் கேட்கலையோ -எனது
கேள்விக்கு உன்னிடம் பதிலிலையோ
உள்ளம் கள்ளமாய்ப் போனதடி
பொன்னை உருக்கிய பொற்சிலையே -அன்பு
பொங்கிடும் காதல் பூந்தளிரே (உன்னை)
என்னை மறந்து நானும் தவிப்பதென்ன -என்
இதயத்தில் பூமழை பொழிவதென்ன
எண்ணத்தில் நிறைந்து இருப்பதென்ன -நீ
இன்னமும் ஏனென்னை வெருப்பதென்ன
இரவு நேரத்தில் அமைதியில்லை -என்
இருவிழி ஏனென்றும் உறங்கவில்லை
சிறகு இழந்த பறவையென - நான்
சித்தம் கலங்கித் தவிப்பதென்ன
வாலை வயதுக் குமரியடி -உன்னை
வாரி அணைத்திட ஆசையடி
நாளை எண்ணிநீ தள்ளுவதோ -என்
நாயகி நீயென்னைக் கொல்லுவதோ
காலம் வருமெனக் காத்திருந்தேன் -என்
கண்மணி உன்முகம் பார்த்திருந்தேன்
வேளை வருவதும் தெரியவில்லை -எனக்கு
விடிவது எப்படி புரியவில்லை
நெஞ்சில் நினைவு உள்ளவரை -உன்னை
நித்தம் நானும் நினைத்திருப்பேன்
கெஞ்சும் அழுகுரல் கேட்கலையோ -எனது
கேள்விக்கு உன்னிடம் பதிலிலையோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக