சனி, 2 நவம்பர், 2013

பொற்சிலை -205.

உன்னை   நினைக்கையிலே -கண்ணம்மா
 உள்ளம்  கள்ளமாய்ப்  போனதடி
 பொன்னை  உருக்கிய  பொற்சிலையே -அன்பு
 பொங்கிடும்  காதல்  பூந்தளிரே    (உன்னை)

 என்னை மறந்து  நானும்  தவிப்பதென்ன -என்
 இதயத்தில்   பூமழை  பொழிவதென்ன
 எண்ணத்தில்  நிறைந்து  இருப்பதென்ன -நீ
 இன்னமும்  ஏனென்னை  வெருப்பதென்ன

 இரவு  நேரத்தில்   அமைதியில்லை -என்
 இருவிழி  ஏனென்றும்  உறங்கவில்லை
 சிறகு   இழந்த    பறவையென  - நான்
 சித்தம்   கலங்கித்  தவிப்பதென்ன

  வாலை   வயதுக்  குமரியடி -உன்னை
 வாரி  அணைத்திட  ஆசையடி
 நாளை  எண்ணிநீ   தள்ளுவதோ -என்
 நாயகி   நீயென்னைக்  கொல்லுவதோ

 காலம்  வருமெனக்   காத்திருந்தேன் -என்
 கண்மணி  உன்முகம்  பார்த்திருந்தேன்
 வேளை   வருவதும்  தெரியவில்லை -எனக்கு
 விடிவது   எப்படி  புரியவில்லை

 நெஞ்சில்  நினைவு  உள்ளவரை -உன்னை
 நித்தம்  நானும்  நினைத்திருப்பேன்
 கெஞ்சும்  அழுகுரல்  கேட்கலையோ -எனது
 கேள்விக்கு  உன்னிடம்  பதிலிலையோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக