புதன், 6 நவம்பர், 2013

சிரஞ்சீவி 209 .

நீரால்  மடிந்தவர்  எத்தனையோ -கள்ள
 நினைவால்  முடிந்தவர்  எத்தனையோ
 போரால்  மறைந்தவர்  எத்தனையோ -பிறர்
 பொருளால்  அழிந்தவர்  எத்தனையோ

 வாளால்  அழிந்தவர்  எத்தனையோ -இங்கு
 வாயால்   கெட்டவர்  எத்தனையோ
 கோளால்   குறைந்தவர்  எத்தனையோ -கெட்ட
 குணத்தால்  இழந்தவர்  எத்தனையோ

 இரவு   என்றுமே  நிலைப்பதில்லை -அந்த
 இயற்கை   நமக்கு   எதிரியில்லை
 உறவுக்காக  நாமும்  கைகொடுத்தால் -இனி
 உலகம்   நம்மிடம்  நெருங்கிவரும்

 களவு   செய்வது  கயமையடா -அதனை
 காண்பவர்   வெறுப்பது  உண்மையடா
 உளவு  சொல்வது   பெருங்கேடு -இதனை
 உணர்ந்து  நடந்திடு  அன்போடு

 கற்றதை  வாழ்வினில்  கடைப்பிடிப்பாய் -வரும்
 காலத்தை   எண்ணியே  முடிவெடுப்பாய்
 அற்புதம்   செய்திட நீ   நினைத்தால் -செல்வம்
 அனைத்தையும்   பிறர்க்கு  தந்துவிடு

 வந்தவர்  போகிற  காலமதில் -அவருடன்
 வருவது   அவர்செய்த  நல்வினையே
 சிந்தனை    வாசலைத்  திறந்துவிடு -இங்கு
 சிரஞ்சீவியாய்  உலகத்தில்   நிலைத்துவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக