திங்கள், 24 பிப்ரவரி, 2014

வெண்பனி -212

வெட்ட வெளியில்
 நெட்ட நெடுகில்
 கொட்டிக்  கிடக்குதே  பனி -அதை
 தொட்டால்  சுவைக்குமோ இனி  
 
வானத்  தாயவள்
 வாரி  வழங்கிய
 வண்ணப் புது மலரோ -இதை
 எண்ணித்  தெளிந்திடல்  அழகே

 அந்தர  வானில்
 பறந்து வரும்
 அனைவரும் ஒன்றென -நம்
 நிலை  உணர்த்தும்
   எங்கும் பரந்து
 இது  கிடக்கிறதே
 இறைவன்  செய்யும் விந்தையடா -நாம்
 இதனை  அறிந்திடல்  நன்மையடா
    மரமும் செடியும்
 இலை  உதிரும்
 மக்கள்  குளிரால் -தினம்
 குலை  நடுங்கும்

 வருவார்  போவாரின்றி
 வழக்கமினி  மாறுபடும்
 பெறுதல் எல்லாம்  வீட்டினிலே -அட
 பெய்யுது பனியோ  ரோட்டினிலே

 வெப்பம் எங்கோ  சென்றுவிட
 விழுவது  பனிமழை  தரையினிலே
 கப்பம்  கட்டிய பொருள்  போல -நாம்
 காலையில் பனிமுகம் கண்டிடலாம்

 ஒருநாள் பனியும்  ஓடிவிடும்
 உதிர்ந்த  இலையோ  துளிராகும்
 பருவக்  காலக் கூத்திதனை -அந்த
 பரம்பொருள்  அன்றோ   நடத்துகிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக