நாணயம் என்பது -நமக்கு
நன்மையை தருவது
நல்லது நாட்டவர்க்கே -அதனை
நாடுக தினம் மனமே
ஊனினை உருக்கினால் -நீ
உள்ளொளி பெறலாம்
உண்மையை அறிந்திடலாம் -இதனை
உலகிற்கும் வழங்கிடலாம்
உயர்வும் தாழ்வும் -இங்கே
இருப்பது முறைதான்
எத்தனை பேரறிவார் -அதில்
ஊக்கமிருக்க உயர்வது நிச்சயமே
வானமதியும் வளர்கதிர் ரவியும் -தினம்
வருவது மாறி மாறியன்றோ
தேனில் சுவையும் தேளில் விஷமும் -அந்த
தெய்வத்தின் வேலையன்றோ
உள்ளம் விரிந்தால் -உனக்கு
உலகம் புரியும்
உயர்வை நினைந்தால் -புதிய
ஊக்கம் பிறக்கும்
கள்ளம் புகுந்தால் -பல
கலகம் விளையும்
கயமை எண்ணம் -மனதில்
காற்றாய் நுழையும்
அலையும் மனதினை -என்றும்
அடக்குதல் செய்வாய்
உலையின் கொதிப்பினை-உன்
உள்ளத்தில் தணிப்பாய்
வந்தார் போவார் -நம்
வாழ்வினில் கோடி
வளமாய் இருப்பாய் -நல்ல
வழியினைத் தேடி
இல்லையென்பது இல்லாதொழிக -அதனால்
எடுப்பாரென்பது இயலாநிலையே
சொல்லும் செயலும் -இங்கு
சுகம் தர வேண்டும்
வல்லமை வளர்க -உடன்
வாய்மையைப் பெறுக
நல்லவை நடக்க -அந்த
நாயகம் அருள்க
நன்மையை தருவது
நல்லது நாட்டவர்க்கே -அதனை
நாடுக தினம் மனமே
ஊனினை உருக்கினால் -நீ
உள்ளொளி பெறலாம்
உண்மையை அறிந்திடலாம் -இதனை
உலகிற்கும் வழங்கிடலாம்
உயர்வும் தாழ்வும் -இங்கே
இருப்பது முறைதான்
எத்தனை பேரறிவார் -அதில்
ஊக்கமிருக்க உயர்வது நிச்சயமே
வானமதியும் வளர்கதிர் ரவியும் -தினம்
வருவது மாறி மாறியன்றோ
தேனில் சுவையும் தேளில் விஷமும் -அந்த
தெய்வத்தின் வேலையன்றோ
உள்ளம் விரிந்தால் -உனக்கு
உலகம் புரியும்
உயர்வை நினைந்தால் -புதிய
ஊக்கம் பிறக்கும்
கள்ளம் புகுந்தால் -பல
கலகம் விளையும்
கயமை எண்ணம் -மனதில்
காற்றாய் நுழையும்
அலையும் மனதினை -என்றும்
அடக்குதல் செய்வாய்
உலையின் கொதிப்பினை-உன்
உள்ளத்தில் தணிப்பாய்
வந்தார் போவார் -நம்
வாழ்வினில் கோடி
வளமாய் இருப்பாய் -நல்ல
வழியினைத் தேடி
இல்லையென்பது இல்லாதொழிக -அதனால்
எடுப்பாரென்பது இயலாநிலையே
சொல்லும் செயலும் -இங்கு
சுகம் தர வேண்டும்
வல்லமை வளர்க -உடன்
வாய்மையைப் பெறுக
நல்லவை நடக்க -அந்த
நாயகம் அருள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக