வாக்கு என்பது வலிமையே -அது
வழங்குது நமக்கு உரிமையே
அற்றை நாளில் -நமை
அரசர்கள் ஆண்டனர்
அன்பினை விதைத்தனர் -பின்
அறுவடை செய்தனர்
இற்றை நாளினர் -நமக்கு
என்ன செய்தனர்
இச்சகம் பேசினார் -இங்கே
இருப்போரை ஏசினர்
சூதும் வாதும் -தமக்கு
சுகமெனத் தொடர்ந்திட
யாதும் எதுவும் -மண்ணில்
எனதே என்றனர்
ஊரை வளைத்தனர் -அதில்
உள்ளதை சுருட்டினர்
பேரைக் கெடுத்தனர் -அவரே
பிழையாய் வாழ்ந்தனர்
நிம்மதி நேர்மை -உலகில்
நில்லாது போயின
அன்பெனும் சொல்லே -ஏனோ
அரிதாகி மறைந்தது
வானம் பொய்த்தது -அதனால்
வற்றின நீர்வழி
தேனெனும் வளங்கள் -வீணில்
தீயினில் கருகின
எங்கிலும் கலவரம் -நமக்கு
இதுதானே நிலவரம்
பொங்கின கடல்கள் -புதிய
பூமியைப் படைக்க
வழங்குது நமக்கு உரிமையே
அற்றை நாளில் -நமை
அரசர்கள் ஆண்டனர்
அன்பினை விதைத்தனர் -பின்
அறுவடை செய்தனர்
இற்றை நாளினர் -நமக்கு
என்ன செய்தனர்
இச்சகம் பேசினார் -இங்கே
இருப்போரை ஏசினர்
சூதும் வாதும் -தமக்கு
சுகமெனத் தொடர்ந்திட
யாதும் எதுவும் -மண்ணில்
எனதே என்றனர்
ஊரை வளைத்தனர் -அதில்
உள்ளதை சுருட்டினர்
பேரைக் கெடுத்தனர் -அவரே
பிழையாய் வாழ்ந்தனர்
நிம்மதி நேர்மை -உலகில்
நில்லாது போயின
அன்பெனும் சொல்லே -ஏனோ
அரிதாகி மறைந்தது
வானம் பொய்த்தது -அதனால்
வற்றின நீர்வழி
தேனெனும் வளங்கள் -வீணில்
தீயினில் கருகின
எங்கிலும் கலவரம் -நமக்கு
இதுதானே நிலவரம்
பொங்கின கடல்கள் -புதிய
பூமியைப் படைக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக