திங்கள், 24 பிப்ரவரி, 2014

வாக்கு -214

வாக்கு  என்பது  வலிமையே -அது
 வழங்குது  நமக்கு  உரிமையே


 அற்றை  நாளில் -நமை
 அரசர்கள்  ஆண்டனர்
 அன்பினை  விதைத்தனர் -பின்
 அறுவடை  செய்தனர்

 இற்றை  நாளினர் -நமக்கு
 என்ன  செய்தனர்
 இச்சகம்  பேசினார் -இங்கே
 இருப்போரை  ஏசினர்

 சூதும்  வாதும் -தமக்கு
 சுகமெனத்  தொடர்ந்திட
 யாதும்  எதுவும் -மண்ணில்
 எனதே  என்றனர்

 ஊரை  வளைத்தனர் -அதில்
 உள்ளதை  சுருட்டினர்
 பேரைக்  கெடுத்தனர் -அவரே
 பிழையாய்  வாழ்ந்தனர்

 நிம்மதி  நேர்மை -உலகில்
 நில்லாது  போயின
 அன்பெனும்  சொல்லே -ஏனோ
 அரிதாகி  மறைந்தது

 வானம்  பொய்த்தது -அதனால்
 வற்றின   நீர்வழி
 தேனெனும்  வளங்கள் -வீணில்
 தீயினில்  கருகின

 எங்கிலும்  கலவரம் -நமக்கு
 இதுதானே  நிலவரம்
 பொங்கின  கடல்கள் -புதிய
 பூமியைப்  படைக்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக