ஞாயிறு, 20 அக்டோபர், 2013

seedeivith thaayae 173.

எனை   பெற்ற  தாயே -உன்
 எழிலான  சேய்  நான்
 துணை ஏதும்  இன்றி -ஏனோ
 நீயன்று  தனியாகப்  போனாய்  
   

 மணமாலை  சூடி மகிழ்ந்தாயே -அம்மா
 மக்களால் உனக்கு மகிழ்வில்லை
 கணமேனும் உறக்கம் கடுகளவுமில்லை -தினமும்
 கடினமாய் உழைத்து தேய்ந்தவள் நீயே

 கணவனின் பெருமை காத்தவள் நீயே -சிறு
 களங்கமில்லா   கற்பகத்  தாயே
 குணமெனும்  தேர்   அமர்ந்த   குணவதி  நீயே -நம்
 குளம் காக்க வருக குவலயத்தில் அம்மா

 இறையருள்  மிக்க  எழில்ரசி  நீயே -இந்த
 சிறுவனின்  இன்னுயிர்த்  தாயே
கறைபடா  மேனி  கற்பரசி  நீயே -தமிழ்
 காவியம்  பாடிட  கருப்பொருள்  தாயே

 வருவாயென  வாசலில்  நின்றேன் -பல
 வருடங்கள்  போயும்  வரவில்லை நீயே
 திருமுகம் காணவே  தொழுகிறேன் நானே -என்
 தேனான செல்வமே திரும்பி நீ வருக

 வந்தாலே  வாழ்வு  வளமாகுமே -எனது
 வாழ்விலே  மகிழ்வு  வழிந்தோடுமே
 சிந்தனை  எல்லாம் ஜெயமாகுமே -எங்கள்
 சீதேவித்  தாயே சீக்கிரம்  நீவாம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக