எனை பெற்ற தாயே -உன்
எழிலான சேய் நான்
துணை ஏதும் இன்றி -ஏனோ
நீயன்று தனியாகப் போனாய்
மணமாலை சூடி மகிழ்ந்தாயே -அம்மா
மக்களால் உனக்கு மகிழ்வில்லை
கணமேனும் உறக்கம் கடுகளவுமில்லை -தினமும்
கடினமாய் உழைத்து தேய்ந்தவள் நீயே
கணவனின் பெருமை காத்தவள் நீயே -சிறு
களங்கமில்லா கற்பகத் தாயே
குணமெனும் தேர் அமர்ந்த குணவதி நீயே -நம்
குளம் காக்க வருக குவலயத்தில் அம்மா
இறையருள் மிக்க எழில்ரசி நீயே -இந்த
சிறுவனின் இன்னுயிர்த் தாயே
கறைபடா மேனி கற்பரசி நீயே -தமிழ்
காவியம் பாடிட கருப்பொருள் தாயே
வருவாயென வாசலில் நின்றேன் -பல
வருடங்கள் போயும் வரவில்லை நீயே
திருமுகம் காணவே தொழுகிறேன் நானே -என்
தேனான செல்வமே திரும்பி நீ வருக
வந்தாலே வாழ்வு வளமாகுமே -எனது
வாழ்விலே மகிழ்வு வழிந்தோடுமே
சிந்தனை எல்லாம் ஜெயமாகுமே -எங்கள்
சீதேவித் தாயே சீக்கிரம் நீவாம்மா
எழிலான சேய் நான்
துணை ஏதும் இன்றி -ஏனோ
நீயன்று தனியாகப் போனாய்
மணமாலை சூடி மகிழ்ந்தாயே -அம்மா
மக்களால் உனக்கு மகிழ்வில்லை
கணமேனும் உறக்கம் கடுகளவுமில்லை -தினமும்
கடினமாய் உழைத்து தேய்ந்தவள் நீயே
கணவனின் பெருமை காத்தவள் நீயே -சிறு
களங்கமில்லா கற்பகத் தாயே
குணமெனும் தேர் அமர்ந்த குணவதி நீயே -நம்
குளம் காக்க வருக குவலயத்தில் அம்மா
இறையருள் மிக்க எழில்ரசி நீயே -இந்த
சிறுவனின் இன்னுயிர்த் தாயே
கறைபடா மேனி கற்பரசி நீயே -தமிழ்
காவியம் பாடிட கருப்பொருள் தாயே
வருவாயென வாசலில் நின்றேன் -பல
வருடங்கள் போயும் வரவில்லை நீயே
திருமுகம் காணவே தொழுகிறேன் நானே -என்
தேனான செல்வமே திரும்பி நீ வருக
வந்தாலே வாழ்வு வளமாகுமே -எனது
வாழ்விலே மகிழ்வு வழிந்தோடுமே
சிந்தனை எல்லாம் ஜெயமாகுமே -எங்கள்
சீதேவித் தாயே சீக்கிரம் நீவாம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக