களவாட வந்தான் -அவனைக்
கைதாக்கிக் கொண்டேன்
உளம் மாறியதாலே -நான்
ஒன்றாகக் கலந்தேன்
நெருப்பாக நின்றான் -நானோ
நீராகிக் கொண்டேன்
பொறுப்பாக வாழ்ந்திட -நல்ல
புத்திபல சொன்னேன்
சீரான உருவம் -அழகு
சிலையாக வடிவம்
கூரான மீசை -தினம்
கொஞ்சிடவே ஆசை
சிங்கமாய் சிரித்தான் -ஏனோ
சிறுபிள்ளை ஆனேன்
அங்கங்கே சிலிர்ப்பு -அடியே
யாரிதற்கு பொறுப்பு
தேனான இளமை -அது
திகட்டாத புதுமை
நானாக இல்லை -அங்கு
நாமென்று ஆனோம்
களவாட வந்தான் -அவனே
கணவனாக ஆனான்
உளமாற சொன்னேன் -என்றும்
உண்மை இது உண்மை
கைதாக்கிக் கொண்டேன்
உளம் மாறியதாலே -நான்
ஒன்றாகக் கலந்தேன்
நெருப்பாக நின்றான் -நானோ
நீராகிக் கொண்டேன்
பொறுப்பாக வாழ்ந்திட -நல்ல
புத்திபல சொன்னேன்
சீரான உருவம் -அழகு
சிலையாக வடிவம்
கூரான மீசை -தினம்
கொஞ்சிடவே ஆசை
சிங்கமாய் சிரித்தான் -ஏனோ
சிறுபிள்ளை ஆனேன்
அங்கங்கே சிலிர்ப்பு -அடியே
யாரிதற்கு பொறுப்பு
தேனான இளமை -அது
திகட்டாத புதுமை
நானாக இல்லை -அங்கு
நாமென்று ஆனோம்
களவாட வந்தான் -அவனே
கணவனாக ஆனான்
உளமாற சொன்னேன் -என்றும்
உண்மை இது உண்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக