சனி, 21 செப்டம்பர், 2013

kalavaada-172.

களவாட வந்தான் -அவனைக்
 கைதாக்கிக்  கொண்டேன்
 உளம் மாறியதாலே -நான்
 ஒன்றாகக்  கலந்தேன்

 நெருப்பாக  நின்றான் -நானோ
 நீராகிக் கொண்டேன்
 பொறுப்பாக  வாழ்ந்திட -நல்ல
 புத்திபல  சொன்னேன்

 சீரான  உருவம் -அழகு
 சிலையாக  வடிவம்
 கூரான  மீசை -தினம்
 கொஞ்சிடவே  ஆசை

 சிங்கமாய்  சிரித்தான் -ஏனோ
 சிறுபிள்ளை  ஆனேன்
 அங்கங்கே  சிலிர்ப்பு -அடியே
 யாரிதற்கு  பொறுப்பு

 தேனான  இளமை -அது
 திகட்டாத  புதுமை
 நானாக  இல்லை -அங்கு
 நாமென்று  ஆனோம்

 களவாட  வந்தான் -அவனே
 கணவனாக   ஆனான்
 உளமாற  சொன்னேன் -என்றும்
 உண்மை  இது உண்மை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக