காற்றில் சிறகடிக்கும் -இளம்
காதல் பறவைகளே
பார்க்கும் என்மனநிலையை -என்
பதியிடம் சொல்வீரோ
கன்னம் கருப்பழகன் -நல
காதல் விழியழகன்
பெண்கள் மயங்கிடும் -தூய
பேரழகு செல்வமவன்
நிமிர்ந்த நடையழகன் -அவன்
நேச மொழியழகன்
உயர்ந்த வடிவழகன் -என்
உள்ளத்தை யள்ளியவன்
கட்டி அணைக்கையிலே -மூன்று
காலமும் மறந்துவிடும்
வெட்ட வெளியினிலும் -அந்த
விசயமும் நடந்துவிடும்
சிந்தை அணுவினிலே -அவனின்
சில்மிஷம் கலந்துவிடும்
பந்தென அவனகையில் -நான்
படும் துயர் யாரறிவார்
காண முடியாமல் -அவனிடம்
கற்றதை சொல்லாமல்
வீணே புலம்புகிறேன் -இந்த
விவரத்தை சொல்வீரோ
உடலும் இளைத்ததம்மா -இருக்கும்
உள்ளம் களைத்ததம்மா
கடலில் துரும்பானேன் -அவனைக்
கண்டாலே சொல்லிடுங்கள்
காதல் பறவைகளே
பார்க்கும் என்மனநிலையை -என்
பதியிடம் சொல்வீரோ
கன்னம் கருப்பழகன் -நல
காதல் விழியழகன்
பெண்கள் மயங்கிடும் -தூய
பேரழகு செல்வமவன்
நிமிர்ந்த நடையழகன் -அவன்
நேச மொழியழகன்
உயர்ந்த வடிவழகன் -என்
உள்ளத்தை யள்ளியவன்
கட்டி அணைக்கையிலே -மூன்று
காலமும் மறந்துவிடும்
வெட்ட வெளியினிலும் -அந்த
விசயமும் நடந்துவிடும்
சிந்தை அணுவினிலே -அவனின்
சில்மிஷம் கலந்துவிடும்
பந்தென அவனகையில் -நான்
படும் துயர் யாரறிவார்
காண முடியாமல் -அவனிடம்
கற்றதை சொல்லாமல்
வீணே புலம்புகிறேன் -இந்த
விவரத்தை சொல்வீரோ
உடலும் இளைத்ததம்மா -இருக்கும்
உள்ளம் களைத்ததம்மா
கடலில் துரும்பானேன் -அவனைக்
கண்டாலே சொல்லிடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக