வெள்ளி, 13 செப்டம்பர், 2013

kaadhal paravaikal-167.

காற்றில்  சிறகடிக்கும் -இளம்
 காதல் பறவைகளே
 பார்க்கும்  என்மனநிலையை -என்
 பதியிடம்  சொல்வீரோ

 கன்னம்  கருப்பழகன் -நல
 காதல்  விழியழகன்
 பெண்கள் மயங்கிடும் -தூய
 பேரழகு  செல்வமவன்

 நிமிர்ந்த  நடையழகன் -அவன்
 நேச  மொழியழகன்
 உயர்ந்த  வடிவழகன் -என்
 உள்ளத்தை  யள்ளியவன்

 கட்டி  அணைக்கையிலே -மூன்று
 காலமும்  மறந்துவிடும்
 வெட்ட  வெளியினிலும் -அந்த
 விசயமும் நடந்துவிடும்

 சிந்தை   அணுவினிலே -அவனின்
 சில்மிஷம்  கலந்துவிடும்
 பந்தென  அவனகையில் -நான்
 படும் துயர்  யாரறிவார்

 காண  முடியாமல் -அவனிடம்
 கற்றதை  சொல்லாமல்
 வீணே  புலம்புகிறேன் -இந்த
விவரத்தை  சொல்வீரோ

 உடலும்  இளைத்ததம்மா -இருக்கும்
 உள்ளம்  களைத்ததம்மா
 கடலில்  துரும்பானேன் -அவனைக்
 கண்டாலே சொல்லிடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக