கலை யாவும் கண்டேன்
களிப்பே நான் கொண்டேன்
உலகு ஆளும் தேவி
உந்தனைப் பாட வந்தேன்
வரம் வேண்டி நின்றோர்
உனது வாசலில் நிற்ப்பார்
நிறம் பார்த்து நீயும்
நினைப்பது இல்லை தாயே
அகிலத்தை காக்கும் அன்னையும் நீயே
ஆடுவோர் ஆடலை அழிப்பதும் நீயே
புவனமே போற்றும் புனிதவதி நீயே
பொங்கிடும் கடலின் சந்கொலியும் நீயே
சங்கரி சக்தி சாஸ்வதம் நீயே
சமரிலே வென்ற சாமுண்டி நீயே
எங்களின் இதயம் என்றுமே நீயே
எளியோரைக் காக்கும் ஈஸ்வரியும் நீயே
திங்களும் மதியும் திசைகளும் நீயே
தேனாறு பாயும் வரலாறும் நீயே
பெண்களைப் போற்றும் பெருங்கருணை நீயே
பேதமை நீக்கிடும் பெரும் சக்தி நீயே
மலர் தூவி துதிப்பேன்
மனதில் தினம் நினைப்பேன்
கலை சார்ந்த வாழ்வினை
கனிந்து அருள்க அம்மா
களிப்பே நான் கொண்டேன்
உலகு ஆளும் தேவி
உந்தனைப் பாட வந்தேன்
வரம் வேண்டி நின்றோர்
உனது வாசலில் நிற்ப்பார்
நிறம் பார்த்து நீயும்
நினைப்பது இல்லை தாயே
அகிலத்தை காக்கும் அன்னையும் நீயே
ஆடுவோர் ஆடலை அழிப்பதும் நீயே
புவனமே போற்றும் புனிதவதி நீயே
பொங்கிடும் கடலின் சந்கொலியும் நீயே
சங்கரி சக்தி சாஸ்வதம் நீயே
சமரிலே வென்ற சாமுண்டி நீயே
எங்களின் இதயம் என்றுமே நீயே
எளியோரைக் காக்கும் ஈஸ்வரியும் நீயே
திங்களும் மதியும் திசைகளும் நீயே
தேனாறு பாயும் வரலாறும் நீயே
பெண்களைப் போற்றும் பெருங்கருணை நீயே
பேதமை நீக்கிடும் பெரும் சக்தி நீயே
மலர் தூவி துதிப்பேன்
மனதில் தினம் நினைப்பேன்
கலை சார்ந்த வாழ்வினை
கனிந்து அருள்க அம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக