வியாழன், 19 செப்டம்பர், 2013

mothalum kaadhalum-171.

நிலவாகும் எந்தன் நெஞ்சம்
 நினைவாலே என்மனம்  கொஞ்சும்
 கனவாகுமோ  காதல் மஞ்சம்
 காலடி  என்னுடல்  தஞ்சம்

 அவள்::
 மாயங்கள்  செய்திடும்  மன்னவனோ
 மையலைக்  கொண்டிட்டமாலவனொ
 காதல்  என்பது  பேதமையே
 கற்று  உணர்தல்  நிமதியே
 அவன்:
 நீயின்றி  எப்படி  பிழைப்பேன்
 நித்தமும்  பெயரிட்டு  அழைப்பேன்
 வாழ்வது  எந்நாளும்  உன்னோடு
 வந்திடு  அன்பே  என்னோடு
 அவள்
 பொறுப்பின்றி  பேசுதல்  முறையோ
 பின்னாலே  வருவது  சரியோ
 எண்ணத்தை  இன்றேனும்  மாற்று
 இல்லையேல்  ஆடுவேன்  கூத்து
 அவன்
 அலையின்றி கடலிங்கு  இல்லை
 அழகின்றி  வாழ்வது  தொல்லை
 வயலுக்கு மழைபோல  தேகம்
 வாழ்க்கையில்  வந்ததே  மோகம்
 அவள்
 உன்னைக்  கண்டாலே  வெறுப்பு
 உளறலுக்கு  நான்தானா  பொறுப்பு
 கண்ணைக்  கவருமா  காதல்
 காலத்திற்கும்  உன்னாலே  மோதல்
 அவன்
 என்ன  தவறுகள்  செய்தேன்
 இதயத்தில்  ஓரிடம்  கொடுத்தேன்
 அன்னம் மறந்து  நாளாச்சு
 அழகியே  உனக்கு  நானாச்சு
 இருவரும்
 நிலவுக்கு  ஒளியாக  இருப்போம்
 நினைத்ததும்  எங்கேயோ  பறப்போம்
 களவுக்கும்  பேர்போன  காதல்
 கருத்தினில்  நமக்கேது  மோதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக