மனநிலை குறைந்த மாந்தர் -நல்ல
மகிழ்வினைப் பெறுதல் வேண்டி
குணமெனும் சீலன் கோவிலை -தம்
குடும்பத்தோடு சேர்தல் நலமாம்
அலைகடலில் தூங்கும் மாலன்-நல
அன்பர்க்கு அருளும் சீலன்
கலைமிகு வண்ணம் கொண்டான் -அவனை
கவி பாடி வாழ்த்தல் சுகமே
நின்றிடும் கோலம் கண்டோம் -உடனே
நிலைத்திடும் பேறு கொண்டோம்
அன்பனை தொழுது நின்றால் -இனி
அவனருள் பெறுதல் எளிதே
அள்ளியே தரும் வள்ளல் -விட்டு
அகலுமே நமது அல்லல்
சொல்லியா புரிய வேண்டும் -அவரது
சுந்தரப் பெருமை கோடி
நாடியே வந்த பேர்கள் -என்றும்
நலமது அடைவார் திண்ணம்
வாடிய மனிதர் காக்க -இங்கே
வந்திட்ட கருணை அன்றோ
திருமலை செல்ல முடியா -நெஞ்சில்
தீதிலா மாந்தர் எல்லாம்
குணமெனும் சீலன் பாதம் -பற்றி
கும்பிட்டு மகிழ்தல் உண்டு
மகிழ்வினைப் பெறுதல் வேண்டி
குணமெனும் சீலன் கோவிலை -தம்
குடும்பத்தோடு சேர்தல் நலமாம்
அலைகடலில் தூங்கும் மாலன்-நல
அன்பர்க்கு அருளும் சீலன்
கலைமிகு வண்ணம் கொண்டான் -அவனை
கவி பாடி வாழ்த்தல் சுகமே
நின்றிடும் கோலம் கண்டோம் -உடனே
நிலைத்திடும் பேறு கொண்டோம்
அன்பனை தொழுது நின்றால் -இனி
அவனருள் பெறுதல் எளிதே
அள்ளியே தரும் வள்ளல் -விட்டு
அகலுமே நமது அல்லல்
சொல்லியா புரிய வேண்டும் -அவரது
சுந்தரப் பெருமை கோடி
நாடியே வந்த பேர்கள் -என்றும்
நலமது அடைவார் திண்ணம்
வாடிய மனிதர் காக்க -இங்கே
வந்திட்ட கருணை அன்றோ
திருமலை செல்ல முடியா -நெஞ்சில்
தீதிலா மாந்தர் எல்லாம்
குணமெனும் சீலன் பாதம் -பற்றி
கும்பிட்டு மகிழ்தல் உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக