புதன், 11 செப்டம்பர், 2013

gunaseelan-165

மனநிலை  குறைந்த  மாந்தர் -நல்ல
 மகிழ்வினைப்  பெறுதல் வேண்டி
 குணமெனும் சீலன் கோவிலை -தம்
 குடும்பத்தோடு சேர்தல்  நலமாம்

 அலைகடலில்  தூங்கும் மாலன்-நல
 அன்பர்க்கு அருளும் சீலன்
 கலைமிகு  வண்ணம் கொண்டான் -அவனை
 கவி  பாடி வாழ்த்தல்  சுகமே

 நின்றிடும்  கோலம்  கண்டோம் -உடனே
 நிலைத்திடும் பேறு  கொண்டோம்
 அன்பனை  தொழுது  நின்றால் -இனி
 அவனருள் பெறுதல்  எளிதே

 அள்ளியே  தரும்  வள்ளல் -விட்டு
 அகலுமே  நமது  அல்லல்
 சொல்லியா  புரிய வேண்டும் -அவரது
 சுந்தரப்  பெருமை கோடி

 நாடியே  வந்த பேர்கள் -என்றும்
 நலமது அடைவார்  திண்ணம்
 வாடிய மனிதர் காக்க -இங்கே
 வந்திட்ட  கருணை  அன்றோ

 திருமலை செல்ல  முடியா -நெஞ்சில்
 தீதிலா  மாந்தர்  எல்லாம்
 குணமெனும் சீலன் பாதம் -பற்றி
 கும்பிட்டு  மகிழ்தல்  உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக