திங்கள், 16 செப்டம்பர், 2013

idhayam-169

கவிஎன்ன  சொல்லும்
 கதையென்ன கேட்கும்
 கண்ணுறங்கும்  நிலையிலே

 காதல்  கதை பேசுமா
 கண்ணில்  வலை வீசுமா
 கற்பனையில்  வாழும் நிலையிலே

 உறவென்ன சொல்லும்
 உணர்வென்ன  செய்யும்
 உள்ளத்து  ஆசைவலையிலே

 நிலையென்று நினைக்கும்
 நிஜமென்று  நம்பும்
 நிம்மதியில்லாப்  பொழுதிலே

 அழுதாலும்  ரசிக்கும்
 அன்பானால்  இழுக்கும்
 அநியாயக்காரர்  மனதிலே

 கொடுப்பாரை  ஏசும்
 குணம்கெட்டு  திரியும்
 கொள்கையில்லா  வாழ்விலே

 இழந்தாலும்  சிரிக்கும்
 இருப்போரை  துதிக்கும்
 இதயமேயிலார் வழியிலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக