கவிஎன்ன சொல்லும்
கதையென்ன கேட்கும்
கண்ணுறங்கும் நிலையிலே
காதல் கதை பேசுமா
கண்ணில் வலை வீசுமா
கற்பனையில் வாழும் நிலையிலே
உறவென்ன சொல்லும்
உணர்வென்ன செய்யும்
உள்ளத்து ஆசைவலையிலே
நிலையென்று நினைக்கும்
நிஜமென்று நம்பும்
நிம்மதியில்லாப் பொழுதிலே
அழுதாலும் ரசிக்கும்
அன்பானால் இழுக்கும்
அநியாயக்காரர் மனதிலே
கொடுப்பாரை ஏசும்
குணம்கெட்டு திரியும்
கொள்கையில்லா வாழ்விலே
இழந்தாலும் சிரிக்கும்
இருப்போரை துதிக்கும்
இதயமேயிலார் வழியிலே
கதையென்ன கேட்கும்
கண்ணுறங்கும் நிலையிலே
காதல் கதை பேசுமா
கண்ணில் வலை வீசுமா
கற்பனையில் வாழும் நிலையிலே
உறவென்ன சொல்லும்
உணர்வென்ன செய்யும்
உள்ளத்து ஆசைவலையிலே
நிலையென்று நினைக்கும்
நிஜமென்று நம்பும்
நிம்மதியில்லாப் பொழுதிலே
அழுதாலும் ரசிக்கும்
அன்பானால் இழுக்கும்
அநியாயக்காரர் மனதிலே
கொடுப்பாரை ஏசும்
குணம்கெட்டு திரியும்
கொள்கையில்லா வாழ்விலே
இழந்தாலும் சிரிக்கும்
இருப்போரை துதிக்கும்
இதயமேயிலார் வழியிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக