புதன், 11 செப்டம்பர், 2013

sagiyae-164

கண்ணன்  வருவானோடி -சகியே
 காரிருளில்  தன்னிலெனைக்
 கட்டியே அணைத்து -என்
 கனியமுதம்  பருகிய   (கண்ணன் )

 உணவு  பிடிக்கவில்லை -சகியே
 உறக்கம் சிறிதுமில்லை
 கிறக்கம்  பிடித்ததடி -மனசில்
 கிலேசம்  வளர்ந்ததடி  (கண்ணன்)

 கைவளை  கழன்றதடி -சகியே
 கண்கள்  சிவந்ததடி
 மேனி வலிக்குதடி -எனது
 வேதனை  அறிவாயோடி(கண்ணன்)

 நட்ட  நடுஇரவில் -அந்த
 நம்பி  கலந்தானேடி
 வெட்க  மிகுந்ததடி -இதை
 வெளியில்  சொல்லாதேடி  (கண்ணன்)

 சொல்லத்  தெரியவில்லை -சகியே
 சுந்தர  முகமழகு
 அள்ளி  அணைத்தானே -என்னை
 அன்பினில்  நனைத்தானே (கண்ணன்)

 தந்தை  அடிப்பாரோ -சகியே
 தாயும்  துடிபபாளோ
 சிந்தையில்  புகுந்தானே -ஏனோ
 ஜீவனை  வென்றானே  (கண்ணன்)

 தவிக்க  விடுவானோ -சகியே
 தழுவிட  வருவானோ
 துடிக்கும்  மனநிலையை -அவனிடம்
 தூது  நீசொல்லாயோ  (கண்ணன்)

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக