கண்ணன் வருவானோடி -சகியே
காரிருளில் தன்னிலெனைக்
கட்டியே அணைத்து -என்
கனியமுதம் பருகிய (கண்ணன் )
உணவு பிடிக்கவில்லை -சகியே
உறக்கம் சிறிதுமில்லை
கிறக்கம் பிடித்ததடி -மனசில்
கிலேசம் வளர்ந்ததடி (கண்ணன்)
கைவளை கழன்றதடி -சகியே
கண்கள் சிவந்ததடி
மேனி வலிக்குதடி -எனது
வேதனை அறிவாயோடி(கண்ணன்)
நட்ட நடுஇரவில் -அந்த
நம்பி கலந்தானேடி
வெட்க மிகுந்ததடி -இதை
வெளியில் சொல்லாதேடி (கண்ணன்)
சொல்லத் தெரியவில்லை -சகியே
சுந்தர முகமழகு
அள்ளி அணைத்தானே -என்னை
அன்பினில் நனைத்தானே (கண்ணன்)
தந்தை அடிப்பாரோ -சகியே
தாயும் துடிபபாளோ
சிந்தையில் புகுந்தானே -ஏனோ
ஜீவனை வென்றானே (கண்ணன்)
தவிக்க விடுவானோ -சகியே
தழுவிட வருவானோ
துடிக்கும் மனநிலையை -அவனிடம்
தூது நீசொல்லாயோ (கண்ணன்)
காரிருளில் தன்னிலெனைக்
கட்டியே அணைத்து -என்
கனியமுதம் பருகிய (கண்ணன் )
உணவு பிடிக்கவில்லை -சகியே
உறக்கம் சிறிதுமில்லை
கிறக்கம் பிடித்ததடி -மனசில்
கிலேசம் வளர்ந்ததடி (கண்ணன்)
கைவளை கழன்றதடி -சகியே
கண்கள் சிவந்ததடி
மேனி வலிக்குதடி -எனது
வேதனை அறிவாயோடி(கண்ணன்)
நட்ட நடுஇரவில் -அந்த
நம்பி கலந்தானேடி
வெட்க மிகுந்ததடி -இதை
வெளியில் சொல்லாதேடி (கண்ணன்)
சொல்லத் தெரியவில்லை -சகியே
சுந்தர முகமழகு
அள்ளி அணைத்தானே -என்னை
அன்பினில் நனைத்தானே (கண்ணன்)
தந்தை அடிப்பாரோ -சகியே
தாயும் துடிபபாளோ
சிந்தையில் புகுந்தானே -ஏனோ
ஜீவனை வென்றானே (கண்ணன்)
தவிக்க விடுவானோ -சகியே
தழுவிட வருவானோ
துடிக்கும் மனநிலையை -அவனிடம்
தூது நீசொல்லாயோ (கண்ணன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக