ஒருநாள் வந்தான் இரவில் -என்
உடலில் கலந்தான் உறவில்
மறுநாள் வருவானென நினைத்தேன் -ஏனோ
வரவே இல்லையே தோழி
சிலநாள் தனியே அழுதேன் -அவனை
சிந்தையில் வைத்தே தொழுதேன்
திருநாள் மறத்தல் சரியா -எனக்கு
தேறுதல் சொல்வாய் தோழி
ஈருடல் ஒன்றென ஆனோம் -அந்த
இன்பத்தில் எங்கயோ போனோம்
போனவர் வந்திட இல்லை -நான்
புழுதியில் கிடக்கின்ற முல்லை
கண்களில் மழைநீர் கொட்டும் -அவன்
காதலில் என்மனம் வாட்டும்
பெண்களில் நானொரு பேதை -தினம்
புலம்பித் தவிப்பது காதை
உடலை ஒருநாள் துறப்பேன் -அந்த
உத்தமனை எப்படி மறப்பேன்
வயலைக் காப்பது மேகம் -ஏனோ
வாட்டத்தில் உருகுதே தேகம்
உடலில் கலந்தான் உறவில்
மறுநாள் வருவானென நினைத்தேன் -ஏனோ
வரவே இல்லையே தோழி
சிலநாள் தனியே அழுதேன் -அவனை
சிந்தையில் வைத்தே தொழுதேன்
திருநாள் மறத்தல் சரியா -எனக்கு
தேறுதல் சொல்வாய் தோழி
ஈருடல் ஒன்றென ஆனோம் -அந்த
இன்பத்தில் எங்கயோ போனோம்
போனவர் வந்திட இல்லை -நான்
புழுதியில் கிடக்கின்ற முல்லை
கண்களில் மழைநீர் கொட்டும் -அவன்
காதலில் என்மனம் வாட்டும்
பெண்களில் நானொரு பேதை -தினம்
புலம்பித் தவிப்பது காதை
உடலை ஒருநாள் துறப்பேன் -அந்த
உத்தமனை எப்படி மறப்பேன்
வயலைக் காப்பது மேகம் -ஏனோ
வாட்டத்தில் உருகுதே தேகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக