வானில் எங்கும் பறந்தேன் -இந்த
வாழ்க்கை முழுதும் திரிந்தேன்
காணும் பொருளில் எல்லாம் -என்
கண்ணன் உன்னையே கண்டேன்
நீல மேக வர்ணம் -உன்
நிறத்தை எனக்கு காட்டும்
கோலக் குயிலின் ஓசை -எனக்கு
குழலின் இனிமை ஊட்டும்
மின்னும் அழகு மேனி -புது
மோக வலையைப் பின்னும்
கன்னக் குழியின் சிரிப்பு -வந்த
கவலை போக்கி இழுக்கும்
கங்கைக் கரை யோரம் -அவன்
காதல் லீலை தொடரும்
மங்கை மனதில் காதல் -என்றும்
மயக்கம் நிறையப் படரும்
காலில் சலங்கை ஓசை -பெண்கள்
கண்டால் மனதில் ஆசை
பாழும் வெட்கம் தடுக்கும் -ஆனால்
பாசம் இன்னும் பேருக்கும்
கண்ணன் பெயரைச் சொல்ல -நெஞ்சில்
கவிதை நிறையப் பிறக்கும்
மண்ணை தின்ற மாயன் -அன்று
மாடு மேய்த்த ஆயன்
காக்கும் கடவுள் கண்ணன் -அன்பு
காதல் கலையில் மன்னன்
நீக்கமற எங்கும் நிறைந்தான் -அவனை
நினைந்து பாடி மகிழ்வேன்
வாழ்க்கை முழுதும் திரிந்தேன்
காணும் பொருளில் எல்லாம் -என்
கண்ணன் உன்னையே கண்டேன்
நீல மேக வர்ணம் -உன்
நிறத்தை எனக்கு காட்டும்
கோலக் குயிலின் ஓசை -எனக்கு
குழலின் இனிமை ஊட்டும்
மின்னும் அழகு மேனி -புது
மோக வலையைப் பின்னும்
கன்னக் குழியின் சிரிப்பு -வந்த
கவலை போக்கி இழுக்கும்
கங்கைக் கரை யோரம் -அவன்
காதல் லீலை தொடரும்
மங்கை மனதில் காதல் -என்றும்
மயக்கம் நிறையப் படரும்
காலில் சலங்கை ஓசை -பெண்கள்
கண்டால் மனதில் ஆசை
பாழும் வெட்கம் தடுக்கும் -ஆனால்
பாசம் இன்னும் பேருக்கும்
கண்ணன் பெயரைச் சொல்ல -நெஞ்சில்
கவிதை நிறையப் பிறக்கும்
மண்ணை தின்ற மாயன் -அன்று
மாடு மேய்த்த ஆயன்
காக்கும் கடவுள் கண்ணன் -அன்பு
காதல் கலையில் மன்னன்
நீக்கமற எங்கும் நிறைந்தான் -அவனை
நினைந்து பாடி மகிழ்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக