செவ்வாய், 10 செப்டம்பர், 2013

kannan

வானில்  எங்கும்  பறந்தேன் -இந்த
 வாழ்க்கை  முழுதும்  திரிந்தேன்
 காணும்  பொருளில் எல்லாம் -என்
 கண்ணன் உன்னையே கண்டேன்

 நீல  மேக  வர்ணம் -உன்
 நிறத்தை  எனக்கு  காட்டும்
 கோலக் குயிலின்  ஓசை -எனக்கு
 குழலின் இனிமை  ஊட்டும்

 மின்னும்  அழகு  மேனி -புது
 மோக  வலையைப்  பின்னும்
 கன்னக்  குழியின்  சிரிப்பு -வந்த
கவலை  போக்கி இழுக்கும்

 கங்கைக்  கரை யோரம் -அவன்
 காதல்  லீலை  தொடரும்
 மங்கை  மனதில் காதல் -என்றும்
 மயக்கம் நிறையப்  படரும்

 காலில்  சலங்கை  ஓசை -பெண்கள்
 கண்டால் மனதில்  ஆசை
 பாழும்  வெட்கம்  தடுக்கும் -ஆனால்
 பாசம் இன்னும் பேருக்கும்

 கண்ணன் பெயரைச்  சொல்ல -நெஞ்சில்
 கவிதை  நிறையப்  பிறக்கும்
 மண்ணை  தின்ற  மாயன் -அன்று
 மாடு  மேய்த்த  ஆயன்

 காக்கும்  கடவுள்  கண்ணன் -அன்பு
 காதல் கலையில் மன்னன்
 நீக்கமற எங்கும்  நிறைந்தான் -அவனை
 நினைந்து  பாடி  மகிழ்வேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக